Tuesday, December 9, 2014

வெடிகுண்டு மிரட்டல் - இளம் பெண் சரண்யா கைது!

மதுரை: மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் சரண்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’, எனக் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனைக்கு பின்னர் வெறும் புரளி என தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போனில் மிரட்டல் விடுத்தவர் மதுரை மேட்டுக்கார தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகள் சரண்யா(21) என தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி இந்நெரம்.காம் )

1 comment:

  1. பெண்ணுடைய பெயர் 'சாகிரா'-வோ அல்லது 'சகிலா'-வோ இருந்தால், "மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு வைத்த இஸ்லாமிய பெண் தீவிராவாதி கைது...பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்" என்று தலைப்பு வைத்து கடைசி வரியில் ..என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலிசார் தீவிர விசாரணை..என்று செய்தி வந்து இருக்கும்...

    ReplyDelete