Showing posts with label சிறுவர்கள். Show all posts
Showing posts with label சிறுவர்கள். Show all posts

Tuesday, March 10, 2015

குடிகார அத்தா சிறு(உண்மை)கதை

காதர் கூலித் தொழிலாளி அன்றாடம் உழைத்து வரும் காசை குடித்து அழிப்பதே பிழைப்பாக கொண்டவர். வல்லு வதக்குனு எதை திண்டாலும் செமிக்கிற10,8 வயதில் இரண்டு மகன்கள்.
வழக்கம் போல கிழிந்த பாயில் மது பாட்டிலை நிற்க வைத்து அதன் கழுத்தை திருகி டம்ளரில் கவிழ்த்தி குடித்து கொண்டிருந்தார். மூத்த மகன் செய்யது பட்டன் இல்லாத டவுசரை முடிச்சுப் போட்டு இடுப்பில் இறுக அணிந்தப் படி நிலைக் கதவு தாழ்ப்பாளை ஆட்டியபடி நின்றவனை கால்ச்சோ நாரங்கியை ஆட்டாதடா குடும்பம் விளங்காது என்று சமையலறையிலிருந்து சப்தமிட்டால் தாய்.
மறுபடியும் தாழ்ப்பாள் ஆட்டும் சவுண்ட ஆடங்காமல் இருக்கவும் சொன்ன கேட்க மாட்டே என்று அடிக்க ஓடிவந்தவள் மகன் குடிப்பதை வேடிக்கைப் பார்ப்பதை பார்த்து விட்டு அங்கே என்ன வேடிக்கை வெளியே போடா என்று இவனையும் உன்னால் பிள்ளைகளும் கேட்டுப் போறாய்ங்க என்று கணவனையும் திட்டிவிட்டு சமையல் அறை நுழைந்தாள்.
தாழ்ப்பாளை ஆட்டுவதை நிறுத்தினான் செய்யது ஆனால் அந்த இடத்தை விட்டு அசையவில்லை. இன்னுமா ஆப்பாயில் பொரிக்கிற..... முண்ட என்று பாதி குடிவெறியில் சப்தமிட்டார் காதர். இரு இரு பிள்ளைகளுக்கு இந்த முட்டையும் நீயே தின்று தீர்த்து விடு இந்த வர்றேன் பதில் கொடுத்து கொண்டிருந்தால்.
செய்யது குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் இளையவன் அபூதாஹிர் வாண்ணே விளையாட போவோம் என்று கிழிந்த டவுசரை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் அப்படியும் அசையவில்லை செய்யது.
மூன்றாவது முறையாக கடைசியாக இருந்த பிராந்தியையும் டம்பளரில் கொட்டிக் கொண்டிருக்கும் போது சன்னல் பக்கமாக செய்யது ஓடி விட்டான் குடித்த பாட்டிலை எறிவதற்கும் அவன் ஓடிச் சென்று பிடிப்பதற்க்கும் சரியாக இருந்தது.
பாட்டி கையில் கிடைத்ததும் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தம்பி அபூதாஹீரை கூப்பிட்டான் வாடா தம்பி பழைய இரும்பு கடையில் பாட்டிலை போட்டுட்டு ரெண்டு ரூபா கொடுப்பாய்ங்க வா மிட்டாய் வாங்கி திங்கலாம்.