Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Sunday, February 10, 2013

பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை. (மீள் பதிவு)

அமெரிக்காவின் புதிய அடிமை கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில். ஏற்கனவே அமெரிக்க அரச தீவிர கண்கானிப்பில் இருக்கும் முஸ்லிகளை தன்னுடைய ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்கிற வெறிக்காக இன்னும் ஆழமாக அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற செய்தியை கூறியிருக்கிறார் ஆனால் உண்மை என்ன?

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
                                                  முஹம்மது சல்மான் ஹம்தானி
அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.


அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

இந்த வீடியோவை பாருங்கள் சல்மானின் தாயார் மற்றும் நண்பர்கள்,அவர் படித்த கல்லூரியின் ஆசீரியர்களின் வாக்குமூலங்கள்.


மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயுதமா?

பிரபல எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் பாகிஸ்தான் பயண அனுபவம் பல போலி பிம்பங்களை உடைக்கிறது (கொஞ்சம் பாருங்கள்)


சரி விஷயத்துக்கு வருகின்றேன்
அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.


அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.
(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31 ஆக் 
படங்கள் கூகுள் வீடியோ யூ டியுப்)

Tuesday, April 24, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன? -2


இதன் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இன்று நம் நாட்டிலும்  உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Globalisation).
உலகமயமாக்கலோடு சேர்த்து அலசப்படுகின்ற சொற்களாக தலமயமாக்கல் (localisation), தாராளமயமாக்கல் (Libralisation), தனியார்மயமாக்கல் (Privatisation) ஆகியவற்றையும் சொல்லலாம். இந்த நான்கும் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் உலகெங்கும் மிக அதிகமாக அலசப்படுகின்ற, பேசப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சொற்களாக இருக்கின்றன.

எதோ கேட்பதற்கு எந்தவிதமான தொல்லையும் தராத, தீங்கற்ற, முற்போக்கான,வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற மயக்கத்தில் ஆழ்த்தக் கூடிய கவர்ச்சியான சொற்களாக இவை தோன்றுகின்றன. ஆனால் இந்த நான்கு சொற்களுக்கும் பின்னணியில் தனி வரலாறே இருக்கின்றது; வானளாவிய நோக்கங்கள் இருக்கின்றன.

சென்ற பதிவில் உலகமயமாக்கல்,பொருளாதாரம்,வெளிநாட்டு வணிகம், இவைகளை பார்த்தோம். இனி வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை குறித்து பார்ப்போம்.

வெளிநாட்டு உறவுகள்.

அடுத்ததாக, வெளியுறவுத் துறையை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளுடனான பரஸ்பர உறவுகளையும், அந்த உறவுகளின் கனம், பரிமாணம்,நீடித்து நிலைக்கின்றதன்மை போன்றவற்றையும் தீர்மானிக்கின்ற உரிமை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மறுக்க முடியாத உரிமையாகும்.

எந்த நாட்டுடன் நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது, எதனுடன் உறவை நீட்டிப்பது, எதனுடன் உறவைத் துண்டித்துக் கொள்வது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற உரிமையும் இதில் அடங்கும். இவையெல்லாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கின்றன.

ஒரு நாட்டின் சுதந்திரம், சர்வதேச கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற விவகாரங்கள் இவை. ஆனால் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளும் இவற்றையும் உலகமயமாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றன.

பின்தங்கிய, நலிவுற்ற நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் தம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானாலும், அவற்றோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றே செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் தம் அண்டைநாட்டு அதிபர்களுடன் தொலைபேசியில் பேச நினைத்தாலும் உலக அரங்கில் பெரிய தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் முகக்குறிப்பை அல்லது கண் அசைவைப் பார்த்தே தொலைபேசி எண்களைத் தட்டத் தொடங்குவர்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நடத்துகின்ற கட்டப் பஞ்சாயத்து இது.தலைதாழ்த்தி,வாய் பொத்தி,கூழைக் கும்பிடு போட்டு ஒழுங்காக நடந்து கொண்டீர்கள்... தப்பித்தீர்கள்.திமிறி நிமிர்ந்தாலோ கதை கந்தல்தான்.

விதவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் முகத்தில் வீசப்படும். வட்டார ஒத்துழைப்புக் கான நிறுவனங்கள், இருதரப்பு,முத்தரப்பு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் என பல்வேறு ஒப்பந்தங்களில் கட்டிப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். மனித உரிமை பாதுகாப்பு என்கிற கூப்பாடு,பயங்கரவாதத்தைத் தடுப்போம் என்கிற சாக்குப் போக்கு என இவை போன்ற பால்வேறு வழிமுறைகளைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.

இவ்வாறாக, தம்முடைய வெளியுறவுகளை சுயமாகத் தீர்மானிக்கின்ற உரிமை அந்த நாடுகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்ற உரிமையும் இல்லாமல் போகும் போது அந்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான மதிப்பும் செல்வாக்கும் எஞ்சி இருப்பதில்லை அது பொம்மை அரசாகத் தேங்கிப் போகும்.

பாதுகாப்பு.

அடுத்து இருப்பதிலேயே பொறுப்பு வாய்ந்த மிக முக்கியமான பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாட்டுக்கு இருந்தே தீர வேண்டிய முக்கியமான உரிமை இது. இந்த உரிமையையும் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பறித்து வருகின்றார்கள். என்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வது? எந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது? இவற்றையெல்லாம் தீர்மானிகின்ற உரிமை. அவற்றையும் உலகமயமாக்கல் என்கிற பெயரில் பறித்து விடுவார்கள்.

அணு ஆயுதங்கள் இல்லாத நிலப்பரப்பு (Nuclear Free Zone) என்று சொல்வார்கள். சி.டி.பி.டி என்பார்கள்.என்.பி.டி என்பார்கள். விதவிதமான ஒப்பந்தங்களின் மூலமாக உங்களின் சுயாட்சியையும் கண்னியத்தையும் முடக்கிப் போடுவதற்கும் வளைத்துச் சாய்ப்பதற்கும் முயல்வார்கள். இவையெல்லாமே அமெரிக்காவின் விரல் அசைவில் போடப்படுகின்ற ஒப்பந்தங்கள்.

போதக்குறைக்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பி வேரூன்றியிருக்கும் படைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதையும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையும் தன்னுடைய கிடுக்குப் பிடியில் இறுக்கி வைத்திருப்பதில் அமெரிக்க வெற்றி பெற்றிருக்கின்றது. அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எதனையும் தீர்மானிக்கின்ற உரிமையும் சுதந்திரமும் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது.

பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தேசப் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டாலே அமெரிக்காவிடமிருந்தும் அதன் நேச நாடுகளிடமிருந்தும் மிரட்டல்களும் உருட்டல்களும் வரத் தொடங்கி விடுகின்றன.
இவ்வாறாக,நாட்டின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் தம்முடைய உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக இழந்து நிற்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக குவைத்,சவூதி அரேபியா, மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகள்,சோவியத் யூனியன் சிதறிய பிறகு தோன்றிய ஒன்பது மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம்,

இவ்வாறாக, ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பொருளாதாரம், வெளிநாட்டு வணிகம், வெளியுறவுகள்,பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயலாற்றுகின்ற உரிமை பறிக்கப்படும்போது இந்தத் துறைகள் யாவும் இவை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உலகமயமாக்கப்படும்போது அந்த அரசின் அந்தஸ்தும் அதிகாரமும் நகராட்சியளவுக்கு சுருங்கிவிடுகின்றது.

கொரிய எழுத்தாளர் ‘ஜெரீமி சி புரூக்’ மிகச் சரியாக தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்: உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லா பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கொதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது.