பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபிலுள்ள ‘காதியன்’ எனும் ஊரில் மிர்சா குலாம் அஹமத் என்பவர் தன்னை ஒரு ‘நபி’ என்று அறிவித்துக் கொண்டார் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க அரசு இவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தது.மிர்சா குலாம் அஹமதைப் பின்பற்றுபவர்கள் ‘காதியானிகள்’ என்றும் ‘அஹமதியாக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மிர்சா குலாம் அஹமத் அவர்கள் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார்.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் இன்றைய 'செங்கொடி' வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஆகவே காதியானிகள் யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன?,அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் எனபதை அஹமதின் நூல்கலிலிருந்தே ஏராளமான எடுத்துகாட்டுகளைத் தந்து காதியானிசத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது இப்புத்தகம்.
இந்நூலின் ஆசிரியர் P.P. அப்துல் ரஹ்மான், காதியானிஸத்தின் கொள்கை பற்றிய உர்தூ மூல நூல்களை எல்லாம் சேகரித்து,மிர்சா குலாம் பற்றியும் அவரது முன்னுக்குப் பின் முரணான,அபத்தமான நபித்துவ வாதங்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுத்தெழுதிய,
‘காதியானிஸம் ஓர் தொகுப்பு’ என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட மலையாள நூலின் முதலாம் தொகுதி தமிழாக்கம் தான் இந்நூல்.
ஏழு தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் தனித் தன்மையுடன் இருப்பதால் தொடர்ச்சியாய் வாசிக்காவிட்டாலும் பாதகமில்லை;எனினும் அனைத்துத் தொகுதிகளையும் வாசிப்பதே பலனளிக்கும்.
பின்குறிப்பு:
காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.
மிர்சா குலாம் அஹமத் அவர்கள் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார்.
ஆகவே காதியானிகள் யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன?,அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் எனபதை அஹமதின் நூல்கலிலிருந்தே ஏராளமான எடுத்துகாட்டுகளைத் தந்து காதியானிசத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது இப்புத்தகம்.
இந்நூலின் ஆசிரியர் P.P. அப்துல் ரஹ்மான், காதியானிஸத்தின் கொள்கை பற்றிய உர்தூ மூல நூல்களை எல்லாம் சேகரித்து,மிர்சா குலாம் பற்றியும் அவரது முன்னுக்குப் பின் முரணான,அபத்தமான நபித்துவ வாதங்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுத்தெழுதிய,
‘காதியானிஸம் ஓர் தொகுப்பு’ என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட மலையாள நூலின் முதலாம் தொகுதி தமிழாக்கம் தான் இந்நூல்.
ஏழு தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் தனித் தன்மையுடன் இருப்பதால் தொடர்ச்சியாய் வாசிக்காவிட்டாலும் பாதகமில்லை;எனினும் அனைத்துத் தொகுதிகளையும் வாசிப்பதே பலனளிக்கும்.
பின்குறிப்பு:
காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.
நூல்:காதியானிகள் யார்?
தொகுப்பாசிரியர்
P.P. அப்துல் ராஹ்மான்
தமிழில்
K.M முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012
