Saturday, September 28, 2013

தமிழிழத்திற்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் யார்?


திடீர் தமிழ் இன உணர்வாளர்கள் பலர், நரேந்திர மோடியை ஆதரிக்கும் பொழுதே அவர்களது சாயம் வெளுத்து விடுகின்றது. இனப்படுகொலைச் சகோதரர்களான மோடியையும், ராஜபக்சவையும் ஒப்பிடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கூடப் பரவாயில்லை. 

மோடியை பிரதமராக்கத் துடிக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான், புலிகளின் அழிவு ஆரம்பமாகியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தோல்வியின் விளிம்பில் நின்ற சிங்கள இராணுவத்திற்கு உதவும் நோக்குடன், "இந்தியர்களின் ஜென்ம விரோதியான" பாகிஸ்தானுடன் இரகசியமாக ஒத்துழைத்த கதை யாருக்குத் தெரியும்?

2000 ம் ஆண்டு, புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி, யாழ் குடாநாட்டின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். ஸ்ரீலங்கா படையினர் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாவகச்சேரி பகுதியும் பறிபோன பின்னர், ஸ்ரீலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியது. மரணப் பொறிக்குள் சிக்கிய படையினரை காப்பாற்றுவதற்காக, அன்றைய பாஜக அரசு வியூகம் வகுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பி, சிங்களப் படையினரை வெளியேற்ற இருப்பதாக அறிவித்தது. அது புலிகளை ஏமாற்றுவதற்கான, பாஜக அரசின் சூழ்ச்சி என்பது சில நாட்களில் தெரிய வந்தது.

ஈழப்போரில் அதுவரையில் பாவிக்கப் படாத நவீன ஆயுதமான, பல்குழல் பீரங்கிகள் பாகிஸ்தானில் இருந்து வந்திறங்கின. ஒரு மீட்டர் இடைவெளி விடாமல், சீறிப் பாய்ந்து வந்த ராக்கட் தாக்குதல்களுக்குள் நின்று போரிட முடியாத, புலிகளின் படையணிகள் பின்வாங்கிச் சென்றன. யாழ் குடாநாடு மீண்டும் சிறிலங்காப் படைகளின் வசம் வந்தது. இதிலிருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம். ஸ்ரீலங்கா அரச படைகளின் தோல்வியையும், புலிகளின் தமிழீழ வெற்றியையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த விஷயத்தில், அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் இருக்கவில்லை.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், புலிகளின் பலம் மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா படையினர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர். 2000 ம் ஆண்டு, அதிசயப் படத்தக்க வேகத்துடன் தாக்குதல் நடத்திய புலிகள், ஸ்ரீலங்கா படையினர் வசம் இருந்த ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற வன்னிப் பகுதிகளையும், நாவற்குழி, சாவகச்சேரி போன்ற யாழ் குடாநாட்டின் பகுதிகளையும் சில நாட்களுக்குள் கைப்பற்றினார்கள்.

யாழ் குடாநாடு முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தால், அன்றே தமிழீழம் பிரகடனம் செய்திருப்பார்கள். அன்றிருந்த சிங்களப் படைகள், யுத்தம் செய்யும் மன நிலையில் இருக்கவில்லை. தப்பினோம், பிழைத்தோம் என்று நாலாபுறமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தருணத்தில் தலையிட்டு, புலிகளை மேற்கொண்டு முன்னேற விடாது தடுத்த சக்தி எது தெரியுமா? இந்தியாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு தான் முடிவை மாற்றி எழுதியது. புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறா விட்டால், இந்திய இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்தது.

2000 ம் ஆண்டு, சாவகச்சேரி போரில் இடம்பெயர்ந்தவர்கள் என்னிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் இருந்து:

 //பூநகரியில் இருந்து கேரதீவு, சங்குப்பிட்டி வழியாக ஊடுருவிய புலிகளின் படையணிகள், திடீர் தாக்குதல் மூலம், நாவற்குழி, கைதடி ஆகிய இடங்களை கைப்பற்றினார்கள். புலிகள் மட்டுவில் வரையில் வந்து விட்டனர். சாவகச்சேரி நகர எல்லையில் அமைந்த வயல் பகுதியில், திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர் ஆட்டிலெறி பூட்டிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கண்ட மக்கள் ஏதோ ஒரு பெரிய போர் வரப் போகின்றது என்று நினைத்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

சில நாட்களில் புலிகள் சாவகச்சேரி நகர்ப் பகுதிக்கும் வந்து விட்டார்கள். சிங்களப் படையினர் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு படையினர் முகத்திலும் கிலி தென்பட்டது. படையினர் நாலாபக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் பொது மக்களின் சைக்கிள்களை பறித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது சில அந்நிய நாட்டவர்கள் தோன்றி, ஸ்ரீலங்கா படையினரை பின்வாங்க விடாமல் தடுத்தார்கள்.

ஆனாலும், சாவகச்சேரி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. ஸ்ரீலங்கா படைகள் கொடிகாமம், பளை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். அப்போது போர் தற்காலிகமாக நின்றிருந்தது. யாழ் குடாநாட்டிற்குள் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிய படைகளை வெளியேற்ற சம்மதிப்பதாக இந்தியா அறிவித்தது. இதனால், விரைவில் யாழ் குடாநாடு முழுவதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும் என்று புலிகள் நம்பினார்கள்.

ஆனால், அந்தக் கால அவகாசம், பாகிஸ்தானில் இருந்து மல்ட்டி பரல் ராக்கெட் வருவதற்காகத் தான் என்பது அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாவகச்சேரி பகுதியில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை. புலிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தார்கள். இராணுவத்தினரின் பல் குழல் பீரங்கிகள் ஏவிய ராக்கெட்டுகள், ஒரு மீட்டர் இடைவெளி விடாமல் வந்து விழுந்தன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரே நேரத்தில் பல குண்டுகள் வந்து வெடித்தன. சாவகச்சேரியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. அதற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் யாருமே உயிரோடு தப்பவில்லை. அப்படியான சூழ்நிலையில், புலிகள் அங்கே நிற்பதானது கூட்டாக தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. அதனால், யாழ் குடாநாட்டை பிடித்த புலிகளின் படையணிகள் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றன.//

இந்தியாவில் அன்று ஆட்சியில் இருந்த பாஜக அரசு, புலிகளின் மகத்தான வெற்றியை அனுபவிக்க விடாமல் தடுத்தது. நவீன ஆயுதமான மல்ட்டி பரல் ராக்கெட்டுகளை பாகிஸ்தான் தான் கொடுத்தது. ஆனால், அது இந்திய அரசின் ஒப்புதல் இன்றி நடந்திருக்க முடியாது. அன்று புலிகள் மல்ட்டி பரல் தாக்குதலை சமாளித்து நின்றிருந்தாலும், அடுத்த கட்டமாக இந்தியப் படைகளை இறக்குவதற்கு ஆலோசிக்கப் பட்டது. பாஜக அரசு அனுப்பும் இந்திய இராணுவம் வந்திறங்கி இருந்தால், (2009 ல் முடிந்த) இறுதிப் போர் அப்போதே நடந்திருக்கும். பிரபாகரன் கூட தனது மாவீரர் தின உரையில் அதனைக் குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே யாழ் குடாநாட்டில் இருந்து வெறியேற வேண்டி இருந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

மோடியை ஆதரிக்கும் "சமூக உளவியலும்", ராஜபக்ஷவை ஆதரிக்கும் "சமூக உளவியலும்" ஒன்று தான். இரண்டுமே சிறுபான்மையினத்திற்கு எதிரானவை. மோடியை ஆதரிக்கும் இந்து பேரினவாதிகளுக்கும், ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்கள பேரினவாதிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்து பேரினவாதிகளுக்கு முஸ்லிம் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழ் இனப்படுகொலை ஒரு பொருட்டல்ல. 


மோடிக்கான ஆதரவு, இந்து பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ளது. அது, இலங்கையில் சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ராஜபக்ஷவை ஆதரிப்பதைப் போன்றது. மோடியை ஆதரிக்கும் தமிழர், தென்னிலங்கையில் பிறந்திருந்தால், ராஜபக்ஷவை ஆதரித்திருப்பார். ராஜபக்ஷவை ஆதரிக்கும் சிங்களவர், இந்தியாவில் பிறந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார். இவர்கள் பேசும் மொழி மட்டுமே வேறு. கொள்கை ஒன்று தான்.

புலிகளின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட, பாஜக வின் வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரிக்கும் ஒருவர், உண்மையான தமிழ் இன உணர்வாளராகவோ, அல்லது புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது. அவர்கள் அணிந்திருக்கும் தமிழ் முகமூடி, என்றோ ஒருநாளைக்கு கிழியும் என்பது எதிர்பார்த்தது தான். அவர்களது தமிழ் இன உணர்வு வாய்ச் சவடால்கள் எல்லாம் மோடி பிரதமராகும் வரையில் தான். அதற்குப் பிறகு ராஜபக்சவுடனும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

(நன்றி : கலையகம்   )

Tuesday, September 10, 2013

உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிப் பகுதிகள்
ஒரு நண்பர் அல்லது உறவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால். அவரை பகைத்துக் கொள்ளாமலும். முடிந்தவரை தாஜா செய்து மிகைப்படுத்தி புகழ்ந்து தமது சொந்த காரியங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இன்றைய மக்களை பார்க்கிறோம். ஆனால் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் இத்தகைய பண்பு சுத்தமாக இருக்கவிலை. எனென்றால் அவர்கள் சுத்தமான சத்தியவான்களாக இருந்தார்கள். நேர்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழிக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள்.

“மார்க்கம் என்பது நஸீஹத் - வாய்மையும் நலம் நாடுவதுமாகும்” இவ்வாறு மூன்று முறை அண்ணலார் கூறினார்கள். “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது?” என்று கேட்டோம். அதற்கு அண்ணலார் “ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், அவனது திருமறைக்கும், முஸ்லிம்களின் சமூக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: தமீமுத் தாரீ (ரலி) நூல்: முஸ்லிம் )

உமர் (ரலி) அவர்கள் கிலாஃபத் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். கலீஃபாவின் தோழர்களான அபூ உபைதா (ரலி), முஆத்பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக உமர் (ரலி)  அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். ஆட்சியில் அமர்ந்திருக்கும் உமர் (ரலி) மீது நல்லெண்ணமும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்குத் துணைபோக வேண்டும் என்ற ஆர்வமும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. அக்கடிதம் பின்வருமாறு:

“அபூ உபைதாபின் ஜர்ராஹ், முஆத்பின் ஜபல் ஆகியோரின் சார்பாக உமர் (ரலி) அவர்களுக்கு எழுதும் கடிதம். தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை சீர்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவராக இருந்தீர்கள் என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதோ தங்களில் தோள்களில் ஏராளச் சுமைகள்...! முழு சமுதாயத்திற்கும் பயிற்சி அளிக்கும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள்; சாதாரண பாமர மக்களும் வருவார்கள்; பகைவர்களும் வருவார்கள்; நண்பர்களும் வருவார்கள். எல்லோருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே தங்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்!

மக்கள் அனைவரும் வல்ல இறைவனின் முன்நிற்கும் நாளை - இதயங்கள் அஞ்சி நடுங்கும் நாளை நினைத்துப் பாருங்கள்! இறையாணையைத் தவிர வேறு எந்த வாதமும் அங்கே துணைவராது. அந்நாளில் அந்த வல்ல இறைவனின் கருணையை எதிர்பார்த்த வண்ணமும், கிடைக்கப்போகும் அவனது தண்டனைக்கு அஞ்சிய வண்ணமும் மக்கள் இருப்பார்கள்.

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” எனும் நபிமொழியைக் கேட்டுள்ளோம்.

இந்த கடிதம் முற்றிலும் தங்களின் நன்மையைக் கருதியே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இதனை சரியான கோணத்தில் பார்ப்பீர்கள்; தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.”

இப்படிக்கு
அபூஉபைதா, முஆத்பின் ஜபல்

இந்தக் கடிதத்திற்கு உமர் (ரலி) அவர்கள் பின்வரும் பதிலளித்தார்கள்:

“ அன்புத் தோழர்களே! நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. நான்  இதற்கு முன் என் தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்வதில் அக்கறை உள்ளவனாக இருந்தேன் என்றும், இப்பொழுது சமுதாயப் பொறுப்புகள் என் தலையில் விழுந்துள்ளன என்றும்; உயர் தகுதி கொண்டவர்கள், சாதாரண மக்கள், நண்பர்கள் - பகைவர்கள் உட்பட என் அவைக்கு வரும் எல்லோரும் நீதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளீர்கள். மேலும் இப்படிப்பட்ட நிலையில் என் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.

அருமைத் தோழர்களே! நான் இதற்கு என்ன பதில் சொல்வது? உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே! எதேனும் வலிமையோ ஆற்றலோ கிடைக்குமெனில் அதை எனக்கு அந்த ஏக இறைவன்தான் அருள வேண்டும்.

இறுதிநாளைப்பற்றியும் எச்சரித்துள்ளீர்கள். முன்னோர்கள் எச்சரிக்கப்பட்டதைப் போல உங்கள் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இரவும் பகலும் மாறி மாறி வருவதன் மூலம் அந்த இறுதித் தீர்ப்புநாள் வெகுவிரைவாக வந்து கொண்டிருக்கிறது. அது தூரமாக இருந்தவற்றை நெருக்கமாக்குகிறது; நவீனமான ஒவ்வொன்றையும் பழையதாக்குகிறது; முன்னறிப்புச் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் அது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. உலகம் முடிந்து மறுமை தோன்றும் அப்பொழுது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர்; அல்லது நரகம் புகுவர்!

“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” என்ற நபிமொழியை முன்னறிவிப்பை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது உங்களைக் குறிக்கவில்லை என நம்புங்கள்! இந்தக் காலமும் அத்தகைய கயவர்கள் தோன்றும் காலமாக இல்லை. அந்தக் காலம் வரும்போது மக்கள் தங்கள் உலகியல் நலனுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்: உலகியல் நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அஞ்சுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் தான் முன்னறிவிப்பில் சொல்லப்பட்ட  நயவஞ்சகம் தோன்றும்.

இறுதியாக, அந்தக் கடிதத்தைக் குறித்து நான் ஏதும் தவறாக நிகைக்கக்கூடாது என்றும் எழுதியிருந்தீர்கள். தோழர்களே! நீங்கள் உண்மையானவர்கள்; நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள்! உங்களின் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை.”

இப்படிக்கு
உமர்பின் கத்தாப்

ஆதார நூல்கள்: கிதாபுல் காரஜ்,
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே..

Saturday, September 7, 2013

ஹிட்ஸ் தான் வாழ்க்கையா?: வேண்டாம் பகட்டு.

பொருளீடுட்டுதல், குடுப்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல்- இதுவே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகிவிட்டது. தன்னையும், தன் குடும்பத்தரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு, நேரம் ஆகியவற்றை தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள் புனிதம் பெறுகின்றன.

மக்களின் பாராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செயல்பவர்களால் தீமைகளே விளைகின்றன.
இவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பார்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகக் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப்படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.

போதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவார். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.

தொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.

எனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள். பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 2:264)

பகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்). (அல்குர்ஆன் 76:8,9 )

இன்ஷா அல்லாஹ் நாம் பகட்டுக்காக செயல்படாமல் இறை பொறுத்தத்திற்காக செயல்படுவோம்.

Monday, July 22, 2013

தீவிரவாதம் தீர்வை தருமா? (மீள்பதிவு )



இன்றைய தமிழக சூழல், அரசியல் கொலைகள் மனதுக்கு வருத்தத்தை தருவதால் இந்த பதிவின் அவசியம் கருதி மீள்பதிவாக தருகிறேன். கொலைகள் வன்மையாக கண்டிக்கப் படவேண்டியவை.

“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)

Ends Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.

‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.

 ‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே! விழுந்தால் வீட்டுக்கு! இல்லையேல் நாட்டுக்கு! இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.

‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா...? என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.

மக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற  “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’

நோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ!

இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக்  கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்களைப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.

இதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)

இறைவன் கூறுகிறான் திருக்குர்ஆனில்:

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.


தீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.

எனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
(நூல்: மிஷ்காத்)

அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.
அநீதிக்கு அறமே தீர்வு.

(Reference :நூல்: எங்கெ அமைதி )

Friday, July 19, 2013

நூல் அறிமுகம் : பாட நூல்களில் பாசிசம் வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.



பாசிசம் எப்போதும் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து இயங்குகிறது. 1930களில் இத்தாலியில் பாசிஸ்ட்டுகள் நடத்திய ’பலில்லா’ அவான் கார்டி பள்ளிகள் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இவற்றை நேரில் சென்று பார்த்து வியந்து குறிப்புகள் எழுதியதும் இதற்காக முசோலினையை நேரடியாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பச்சை மனங்களில் விதைக்கப்படும் நச்சுக் கருத்துக்கள் இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியலுக்கு இன்று செய்யப்படும் முதலீடு.செத்துப்போனவர்களும் இறந்தகாலங்களும் இன்று வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு. இந்துத்துவவாதிகளுக்கு வரலாறு ஒரு பாதுகாப்பான ஆயுதம்.

’நமக்கான வரலாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்’ என்றார் ஆர்.எஸ்.எஸ். சின் குருஜி கோல்வால்கர். இந்துத்துவ பா.ஜ.க மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிகளைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக அவர்கள் இந்தக் கருத்துக்களை தமது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும் பயிற்றுவித்து வந்தனர். வித்யா பாரதி, சரஸ்வதி சிசு மந்திர் முதலான பெயர்களில் நாடெங்கும் சுமார் 60.000 பள்ளிகள் வரை அவர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 1980களுக்குப் பின்னர் மாநில ஆட்சிகளைக் கைப்பற்றிய உடன் மாநில அரசுப் பள்ளிகளுக்கான பாடநூற்களை இந்த நோக்கில் உருவாக்கினர்.

பாடநூற்களைப் பரிசீலிப்பதற்காக Ncert யால் (கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசியக் குழு ) நியமிக்கப்பட்ட தேசியக் குழு (National Steering Commitee of Text Books - 1996) இவர்களது பாடநூற்களைக் குறித்து கடுமையாக எச்சரித்தது. தேச பக்தி என்ற பெயரில் படிப்படியாகப் பச்சைக் குழந்தைகளின் மனதில் வெறுப்பை விதைப்பதே இந்நூற்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது என்று மதிப்பீட்டுக் குழு இவர்களது பாடநூற்களைக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தவுடன் தீவிர இந்துத்துவாதியும் ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குக் குருபூஜை செய்பவருமான முரளி மனோகர் ஜோஷி வசம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. UGC (பல்கலைக் கழக மாணியக் குழு) ncert, cbse (உயர்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம்), ICHR (வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு) முதலான உயர்கல்வி அமைப்புகளில் இருந்த மதச்சார்பற்ற கல்வியாளர்களையும், வரலாற்றறிஞர்களையும் நீக்கிவிட்டு அந்த இடங்களில் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் வகுப்பு வெறியர்களையும் ஜோஷி நியமித்தர்.

இந்த நூல்

வரலாற்றைக் கையிலெடுத்தார்கள்

இல்லாத குதிரைகளில் சவாரி செய்யும் இந்துத்துவம்

வரலாற்றின் பெயரால் முஸ்லிம் வெறுப்பு

மீண்டும் மீண்டும் கொலை செய்யப்படும் காந்தியடிகள்


இப்படி நான்கு தலைப்புகளில் இந்நூலில் மிக ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறார். பாடப்புத்தங்களில் இருக்கும் அபத்தமான வரலாற்று திரிபுகளை அறிய வாசிக்க வேண்டிய நூல்.

நூல் :
பாட நூல்களில் பாசிசம். வெறுப்பை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்.

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

வெளியீடு : சுயமரியாதை இயக்கம்

Monday, July 15, 2013

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை (நூல் அறிமுகம்)



இந்த நூலை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று மறுவாசிப்பு செய்தேன். மனதில் பல மற்றங்களை ஏற்படுத்தவல்ல சக்திகொண்ட நூல் இது.

இந்த நூலிருந்து ஒரு சில வரிகள்.

இறைவேதத்தின் மீது கொடுமை புரிவதின் விளைவு: என்கிற தலைப்பிலிருந்து..

குர்ஆன் நன்மைக்கும் நற்பேறுகளுக்கும் அது ஓர் ஊற்று. தீயதையும் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியதல்ல அது. ஒரு சமுதாயத்தவர் இறைவனுடைய திருமறையை ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்றால். அவர்கள் உலகில் கேவலத்தையும் அவமானத்தையும் நிச்சயமாக அடைய மாட்டார்கள். அவரகள்மற்றவர்களின் காலடியில் நசுக்கப்படவும் மாட்டார்கள். அவர்களின் கழுத்தில் அடிமைத்தனத்தின் முத்திரை இருக்கவும் முடியாது; அவர்களின் குடுமியை மற்றவர்கள் பிடித்து அவர்களை ஆடு மாடுகளைப் போல விரட்டவும் முடியாது.

இந்த விளைவுகளெல்லாம் திருமறைக்கு அநீதி இழைக்கப்படும்போதுதான் ஏற்படுகின்றன. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் அடைந்த இழிநிலை உங்களுக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது. ‘தவ்ராத்’ ’இன்ஜீல்’ எனும் இறைநூல்கள் அவர்களுக்கு அருளப்பட்டிருந்தன. அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது.

وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنجِيلَ وَمَا أُنزِلَ إِلَيْهِم مِّن رَّبِّهِمْ لَأَكَلُوا مِن فَوْقِهِمْ وَمِن تَحْتِ أَرْجُلِهِم ۚ مِّنْهُمْ أُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; (திருக்குர்ஆன் 5:66 )

ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.(திருக்குர்ஆன் 2:61 ) 

ஆகவே இறைவேதத்தை தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் கேவலமான நிலையிலும், அடிமைத்தனத்திலும், தலைதூக்க முடியாத சூழலிலும் இருக்கிறார்களென்றால், அவர்கள் தின்னமாக இறைவேதத்திற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இழிவுகளெல்லாம் அந்த அநீதியான செயல்களால் ஏற்பட்ட கதிதான் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனுடைய இந்தக் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழியைத் தவிர வேறு வழியில்லை அதாவது இறைவேதத்திற்கு அநீதி இழைப்பதை விட்டு விட்டு அதன் கட்டளைகளை முறைப்படி நிறைவேற்ற வேண்டும். இந்த பெருங்குற்றத்திலிருந்து நாம் விலகவில்லை என்றால், இந்த இழிநிலை மாறவே மாறாது - நீங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கல்லூரி திறந்தாலும், உங்கள் வழித்தோன்றல்கள் எல்லோரும் பட்டதாரிகளானாலும், யூதர்களைப் போல் வட்டித் தொழிலில் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் சரியே!

குர்ஆனை அறிவதும் அதன்படி செயல்படுவதும் கட்டாயமாகும்:

நீங்களே சொல்லுங்கள்; நோயுற்றிருக்கிற ஒரு மனிதன் மருத்துவ நூல் ஒன்றை கொண்டு வந்து படிக்க உட்காருகிறான். அதனை படித்தால் மட்டுமே நோய் நீங்கிப்போகும் என்பது அவன் நினைப்பு. அவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? ”அவனுடைய மூளை கெட்டுப் போய்விட்டது - பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அவனை அனுப்புங்கள்” என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா?

குர்ஆனையும் இந்த நிலையில் தான் வைத்திருக்கிறீர்கள் அதனை ஓதுவது மட்டும் போதும் அதனுடைய அறிவுரைக்குத் தக்கபடி நடக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறீர்கள். இப்படியிருக்கும்போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நீங்கள் எந்த தீர்ப்பை வழங்குகிறீர்களோ, அதே தீர்ப்பை உங்களுக்கு ஏன் நீங்கள் வழங்கிக் கொள்வதில்லை.

இப்படியாக அழகிய உவமைகளுடன் மனதை பிடித்து உலுக்கும் கேள்விகளுடன் கூடிய நூல் வாசித்து பாதுகாக்கப்படவேண்டிய நூல்.

Saturday, April 6, 2013

இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!

இஜாஸ் அஹ்மத் மிர்ஸா
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி மணவர்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள். இவர்களில் பத்திரிக்கையாளரான முதியுர்ரஹ்மான் சீத்தீகி, உயர்கல்வி பயின்று வரும் முஹம்மது யூசுப் நள்பந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேசியப் புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) முடியவில்லை. எனவே நீதிமன்றம் அவ்விருவரையும் குற்றச்சாட்டிலிருந்து வ்இடுவித்தது. இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இயலாததால் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மத்திய அரசின் இராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (D.R.D.O )கீழ் செயல்படுகின்ற சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் இஜாஸ். மாநிலக் காவல்துறையினர், புலனாய்வு அமைப்பினர் ஆகியோரின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு மட்டுமே ஒருவருக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்கும். முஸ்லிம் என்றால் கேட்கவே வேண்டாம். இதில் சேர்ந்த பிறகு அவர் எச்சரிக்கை மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார். இவ்வாறு இருக்கும்போது, இஜாசுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறது என்ற பெங்களூரு காவல் துறையினரின் வாதம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜாமீன் பெற்று இஜாஸ் வெளிவந்த அதே நாளில், அவர் இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிலிருந்து நீக்கப்படும் உத்தரவினை சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை (CABS/1001/482/Adm) தெரிவித்தது. நாட்டின் பாதுகாப்பு ஆய்வுக்காகத் தம் இளமையை அர்ப்பணித்த ஓர் இளைஞரிடம் தேசம் நடந்து கொள்ளும் முறைதானா இது. இளைஞர் ஒருவரை தவறாக வழக்கில் சிக்க வைத்தல்; அது நிரூபணமாகும் முன்பே அவரைப் பணியிலிருந்து நீக்குதல் என்பது அப்பட்டமான பாகுபாடும் அநீதியுமாகும். ஸம்ஜாதா எக்ஸ்பிரஸ், மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு இதுவரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியானதும் இந்தப் பின்னணியில்தான்.

மாலேகான்:குண்டுவெடிப்பு  முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

இஜாஸை பணியிலிருந்து நீக்கியதும் புரோஹித்துக்கு இப்போதும் சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியின் துறைதான். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்ற பாராட்டைப் பெற்றவர் அந்தோணி. ஆனால், நிரபராதி என பொது சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் ஆணையிட்டுச் சொல்கின்ற, குற்றவாளி என எந்தப் புலனாய்வு அமைப்பாலும் நிரூபிக்கப்படாத இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை நீக்கியதற்கான நியாயத்தை அந்தோணி மக்களிடம் கூற வேண்டிய நிலை வரும். இஜாஸ் அடையாளம் மட்டுமே. பாதுகாப்புத் துறை இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். அது நடக்குமா என்பதை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி
இதில் ஆறுதல் தரும் செய்தியாக. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ள பெங்களூரு பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#9 )

Friday, April 5, 2013

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!

ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

(நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#7)

Friday, March 29, 2013

ஒரு நடிகை உண்மையான நாயகியாக: Firaaq (2009) – திரைப்பார்வை


முதலில் ஒரு வண்டி நிற்கிறது வண்டியில் இருந்து உடல்கள் கொட்டப்படுகிறது. இருவர் அந்த உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே இன்னொரு வண்டியிலும் பிணக்குவியல் வந்து கொட்டிவிட்டு போகிறது.
எல்லாமே இஸ்லாமியர்களின் உடல். அந்த குவியலில் ஓர் இந்து பெண்ணின் உடலை பார்த்தவுடன் அடக்கம் செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு கோபம் வந்து இறந்த உடலென்றும் பார்க்காமல் கடப்பாரையால் வெட்ட போகின்றான். இப்படி தொடங்குகிறது முதல் காட்சி. நடித்தவர்கள் நம்ம ஊர் நாசரும் இன்னொரு இந்தி நடிகரும்.
ஒரு நடிகையாக நடிக்காமலும் தன்னால் திரைக்குப்பின்னாலும் சாதிக்க முடியும் என நிருபித்திருக்கிறார் “அழகி” நந்திதா தாஸ். அவர் எடுத்து கொண்ட கதைக்களம் குஜராத் கலவரம்.
Firaaq – என்ற உருது வார்த்தைக்கு பிரிவும் விருப்பமும் என பொருள்படும். இந்த படம் நந்திதா தாஸ் முதன் முறையாக அவர் இயக்கி இருக்கும் படம். எழுத்து இன்னொருவருடன் சேர்ந்து எழுதி இருக்கிறார். இது தொடக்கம், முடிவு இல்லாதை கதை என்ற ப்ரேமுக்குள் வராமல் சில சம்பவங்களின் தொகுப்பாக எடுத்து இருக்கிறார்.
முதலில் சமீர் என்ற இஸ்லாமிய பணக்கார இளைஞன் இந்து பெண்ணை திருமணம் செய்தவன். கலவரத்தில் அவனுடைய கடை சூறையாடப்பட்டுவிட மேலும் போகும் இடமெல்லாம் அவனுடைய அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய சூழ்நிலை. கணவன் மனைவி இருவரும் பயந்து வீட்டை காலி செய்து டெல்லிக்கு இடம்பெயர முடிவெடுத்து செயல்படுகின்றனர்.
இரண்டாவதாக மிடில்க்ளாஸ் இந்து குஜராத்தி குடும்பம். கலவரத்தின் போது கதவை தட்டிய இஸ்லாமிய பெண்ணை வீட்டிற்குள் விட்டு காப்பாற்றாமல் விட்டதால் குற்ற உணர்ச்சியுடன் தனக்கு தானே சூடு போட்டுக்கொள்ளும் குடும்பதலைவி, கடைகள் சூறையாடலின் போது கூட்டத்தோடு கூட்டமாக திருடிம் அவன் கணவன், ஏற்கனவே கற்பழிப்பு கேஸ் குற்றம் சாட்டப்பட்ட அவனின் தம்பி.
கலவரத்திற்கு பயந்து வெளியே தங்கியிருந்து வீட்டிற்கு வந்தால் வீடு நாசமாக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய குடும்பம். வீடு நாசமாக்கபட்டதற்கு இஸ்லாமிய பெண் பக்கத்து வீட்டு பெண்ணையே சந்தேகப்படுவது என போகிறது.
இன்னொன்று மதங்களை கடந்து பழகும் இஸ்லாமிய பழம் பாடகர் மற்றும் அவர் சந்திக்கும் கலவரம்.
கண்முன்னே குடும்பம் எல்லோரும் கொல்லப்பட தந்தை மட்டும் வெளியே கொல்லப்பட்டது தெரியாமல் தந்தையை தேடும் சிறுவன்.
இதற்கிடையில் பழிவாங்கவும், பாதுகாப்புகாகவும் துப்பாக்கியை தேடும் சில இஸ்லாமிய ஆண்கள்.
இப்படி பல தளத்தில் கதை நகர்கிறது. அங்கங்கே தொட்டுக்கொண்டு இறுதியில் படம் முடிகிறது.
பாடகராக நடித்துள்ள நஸ்ருதீன் ஷா அருமையாக நடித்துள்ளார். அதிலும் டிவி பார்த்த பின்பு அவர் கலங்குவது அருமை.
நடுத்தர இந்து குடும்பத்தலைவியாக தீப்தி நாவலின் நடிப்பு பிரமாதம். அனாதை இஸ்லாமிய சிறுவனுக்கு ஆதரவு கொடுப்பதாகட்டும் தான் தாக்கப்பட்டு அதை பார்த்து அந்த சிறுவன் தப்பிக்கும் போது இயலாமையினால் கோபப்படுவதாகட்டும். சிறப்பாக செய்துள்ளார்.
இந்த கலவரங்களில் போலிஸின் பங்கும், அவர்கள் இஸ்லாமியர்களிடம் “ வேண்டும் என்றால் பாகிஸ்தான் போங்க” என்பது எல்லாம் கலவரத்தின் சில காட்சிகளை படம் பிடித்து காட்டுகிறது.
தெருவோர சாப்பாட்டுக்கடைக்காரன் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த மதவெறியை தன்னிடம் சாப்பிடும் பணக்கார முஸ்லீமிடம் இந்து என நினைத்து வெளிப்படுத்தும் இடமும் பிறகு சமாளிப்பதுவும் ரசிக்கதக்கது.
இறுதியாக நம்பிக்கையூட்டும் விதமாக சில காட்சிகளை முடித்துவைப்பது நன்றாக இருக்கிறது.
ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் – நம்ம ஆள் கலக்கியிருக்கிறார்,
கலை – லோ பட்ஜெட் படம் போல. பரவாயில்லை.
இசை – தேவையான இடங்களில் அமைதி காத்திருக்கிறது.
ஒரு கலவரத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்பதை விட சந்தர்ப்பங்களில் அந்த மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிச்சம் போட்டுகாட்டியிருக்கும் படம். கலவரத்திற்கு பின்னான சாதாரண மக்களின் வாழ்க்கையை காட்டியிருக்கும் படம் இது. உலக அளவில் சில விருதுகளையும் வென்றுள்ளது.
கலவரத்தின் நிழல்
பார்க்க வேண்டிய படம்.
Firaaq – Bire Eye view for Gujarat Riot in ordinary peoples life.

Friday, March 15, 2013

எனது உடற்பயிற்சி பதிவை திருடிய மாலைமலர்.

திருட்டுகளில் மோசமான திருட்டு ஒருவரின் எழுத்துகளை திருடுவது அதிலும் உடலை வருத்தி பயிற்சி செய்து காட்டிய உழைப்பையும் திருடி இருக்கிறது மாலைமலர் என்கிற முன்னணி பத்திரிக்கை. எங்கு எடுத்தது என்று போடுவது அல்லது நன்றி போடுவது தானே எழுத்துலக ஒழுங்கு
பார்க்க ஸ்கிரின் ஷாட்
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். 

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. 

திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. 

அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம். 

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......

இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.


மேலேயுள்ள எழுத்துக்கள் அப்படியே நான் எழுதியது பார்க்க எனது பதிவு

http://www.valaiyugam.com/2011/02/2.html

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2

பதிவர்களுக்கு அவசர(வைரஸ்) எச்சரிக்கை.

உங்கள் தளத்தை உடான்ஸ் திரட்டியில் இணைத்திருந்தால் உடனே நீக்கி விடுங்கள் அதில் மால்வேர்(Malwarae ) வைரஸ் இருப்பதாக எச்சரிக்கிறது. அதனால் உங்கள் தளம் கூகுள் குரும் இயங்கு தளத்தில் ஓபான் ஆகாது.

எனது தளம் அப்படித்தான் எச்சரித்தது அதனை நீக்கிய பிறகு தான் வேலை செய்தது பார்க்க ஸ்கிரின் ஷாட்.

உடான்ஸ் திரட்டியை நீக்குவது எப்படி?

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.


இதை எளிமையாக கண்டுபிடிக்க f3 பட்ட்னை கீ போர்டில் அழுத்தி   மேலே வரும் பாக்ஸில் கொடுத்தால் எளிமையாக கண்டுபிடித்து விடலாம் பார்க்க ஸ்கிரின் ஷாட்


கிழேயுள்ள உடான்ஸ் கோடிங்கை கண்டுபிடித்து அழித்து விடுங்கள் அதன்பிறகு வைரஸ் எச்சரிக்கை வராது. இந்த வைரஸ் எச்சரிக்கை கூகுள் குரும் இயங்குதளத்தில் மட்டும் தான் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Mozila Fair Fox போன்ற இயங்குதளங்களில் வருவதில்லை.

Wednesday, March 6, 2013

அண்ட புளுகன் மாலைமலரும் ஆகாச புளுகன் தினமணியும்

ஒரு பொய்யை தொடர்ந்து சொல் உண்மையாகிவிடும். கோயபல்ஸ் 
ஒரு பொய்யை தினமும் சொல் உண்மையாகிவிடும். தினமணி,மாலைமலர்,தினப்பத்திரிக்கை

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.

இதே சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தினமனி,தினமலர், மாலைமலர் போன்ற ஊடகங்கள் சுறுசுறுப்பாகி கொட்டை எழுத்தில் 

இஸ்லாமிய தீவிரவாதி கைது கூடங்குளம் 
அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா? 

என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டையே பயமுறுத்தி இருக்கும். இதை எதோ மிகைப்படுத்தி சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முந்தைய அவர்களின் நடைமுறை அதுதான்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்டபோது தினமலர் வெளியிட்ட புகைப்படம்
“அணு உலை மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு” இப்படித்தான் செய்தி வந்தது.

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்ட செய்தியை மிகவும் அமுக்கி வாசித்ததும் இல்லாமல் இந்த பயங்கரவாதியையும் முஸ்லிமாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்த ஊடக நரித்தனத்தோடு யானையை சோற்றில் மறைக்க நினைத்த சதியை பாருங்கள்.சங்கரை ஷாருக்கான் ஆக்கிய மாலைமலரும்,தினமணியும்.



மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங். இவன் அண்ட புளுகன் என்றால் ஆகாச புளுகன் தினமணியில் - ஷாருக்கான் என்பவன் கைது.முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் அசிங்கப் பட்டு போய் விடுகிறது. ஆனாலும் இவர்கள் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தை தீவிரவாதிகளாக்கி திட்டமிட்டு குறிவைத்து இயங்குகிறார்கள். 



மேலே உள்ளது தினந்தந்தி

உள்ளே சொல்வது... //வெடிகுண்டு போன்ற பொருளை//, 
ஆனால்... தலைப்பில்.. அந்த "போன்ற" மட்டும் மிஸ்ஸிங்..!

மேலும் சில ஆங்கில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமாக வந்த செய்திகள் இந்த பத்திரிக்கைகளில் எங்குமே ஷாருக்கான் என்கிற பெயர் இடம் பெற வில்லை.

பார்க்க சுட்டிகள்:

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F316055%2Fone-more-held-planting-bomb.html&h=zAQFSknm3

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fnews%2Futs%2Fman-arrested-over-planting-of-bomb-like-object-in-puducherry_832031.html&h=WAQFuk0qW

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnews.outlookindia.com%2Fitems.aspx%3Fartid%3D791089&h=JAQExa8e4

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Fwire-news%2Fone-more-held-for-planting-bomb-like-substancetrain_833253.html&h=7AQHUheXq

Tuesday, March 5, 2013

மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!


திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில்  வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா?  போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும்   கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Monday, March 4, 2013

இலாஹ் - இறைவன். சொற்பொருள் ஆய்வு.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

பல இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்களுடைய இறைமையியல் தத்துவங்கள் சரியாக தெரியாமல் இருக்கிறார்கள். விளைவு தர்ஹா வழிபாடு போன்ற ஒரிறைக்கு எதிரான திசை நோக்கி போய் விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான விளக்கமளிப்பதற்காகவே இப்பதிவு.


குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘இலாஹ்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.


அலீஃப், லாம், ஹே என்பது இந்தச் சொல்லின் மூலமாகும். இந்த மூலத்தைக் கொண்டு அகராதியில் வந்துள்ள சொற்கள் பின்வருவன:

اله اذا تحير
வியப்பும் ஆச்சரியமும் கொண்டான்.

الهت الى فلان اي سكنت اليه
அவனுடைய பாதுகாப்பில் சென்று அல்லது அவனுடன் தொடர்பு கொண்டு நான் அமைதியும் திருப்தியும் அடைந்தேன்.

اله الرجل يأله اذا فرغ من امر نزل به فألهه به غيره اي لجاره
மனிதன் ஏதோ துன்பம் அல்லது துயரத்தின் வருகையால் அச்சமுற்றான். அடுத்தவன் அவனுக்கு அடைக்கலம் வழங்கினான்.

اله الرجل اتجه اليه لشلة شوقه اليه

மனிதன் அடுத்தவன் மீது கொண்டுள்ள ஆர்வ மிகுதியின் காரணத்தால் கவனிப்பைச் செலுத்தினான்.

اله الفضيل اذا ولع بأمه
காணாமல் போய் விட்ட ஒட்டகத்தின் குட்டி தாயைக் கண்டதும் தழுவிக் கொண்டது.

لاه يليه ليها ولاها اذا احتجب
மறைவாகி ஒளிந்து கொண்டது. மேலும் உயர்ந்து நின்றது.

اله الهة والوهة والوهية عبد
வழிபட்டேன்

இந்தப் பொருள்களின் தோற்றுவாயை நன்கு கூர்ந்து கவனிக்கும்போது அலஹ அல்லது லஹு இலாஹத்தன் உடைய பொருள் வழிபாடு என்பதாகவும் இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும், இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும் எந்த அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்றால் -

1. மனித மனத்திலே வழிபாட்டிற்கான முதன்மையான தூண்டுதல் தேவையான பேரில் ஏற்படுகிறது. யாரேனும் ஒருவரைக் குறித்து அவர் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவர், சஞ்சலமான காலங்களில் அமைதியை அளிப்பவர் எனும் எண்ணம் தோன்றாதவரை மனிதன் யாரையும் வழிபட நினைக்கவே மாட்டான்.

2. அதன்பின் தேவைகளைப் பூர்த்தியாக்குபவன் என ஒருவரை மனிதன் எண்ணிக் கொண்டு விட்டால் அந்த எண்ணத்துடன் அவரைத் தன்னைவிட உயர்ந்தவர் என்றும், படித்தரத்தில் மட்டுமின்றி எல்லாவிதத்திலும் அவருடைய மேன்மையை ஏற்றுக் கொண்டு வலிமையிலும் அதைகாரத்திலும் அவனையே முதல்வன் என்றும் ஏற்றுக் கொண்டுவிடுவது ஒரு பிரிக்க முடியாத பந்தமாகி விடுகிறது.

3. அதன் பின்னர் இதுவும் ஓர் உண்மையே. அதாவது - காரண காரியங்களின் தொடர்பாக எந்தப் பொருளைக் கொண்டு பொதுவாக மனிதனின் தேவைகள் பூர்த்தியாகின்றனவோ, எந்தத் தேவைக்குரிய செயல்பாடுகள் அனைத்தும் மனிதனின் கண்ணெதிரே அல்லது அவனுடைய அறிவின் எல்லைக்குள்ளே நிற்கின்றனவோ அதை வழிபட வேண்டும் என்கிற உணர்வு அவனுக்குள்ளே ஏற்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, எனக்கு செலவழிக்கப் பணம் தேவைப்படுகிறது. நான் ஒருவரிடம் சென்ரு வேலை கேட்கிறேன். அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எனக்கு ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறார். அதற்குரிய கூலியும் தருகிறார். இந்த செயல்கள் யாவும் என்னுடைய புலன்களின், அறிவின் எல்லைக்கு உள்ளேயே  நடைபெறுகின்றன. என்னுடைய தேவைகளை அவர் எவ்வாறு பூர்த்தியாகினார் என்பது எனக்கு தெரியும். எனவே அவர் வணக்கத்திற்குரியவர் எனும் கற்பனை கூட என் உள்ளத்தில் தோன்றுவதில்லை.

வணங்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள்ளத்தில் எந்த நிலையில் ஏற்படுமென்றால் ஒருவரின் ஆளுமையின் மீதோ அல்லது அவரது வலிமையின் மீதோ திரை விழுந்திருக்க வேண்டும். அதனால்தான் வணக்கத்திற்குரியோன் எனும் பொருளில் மேன்மை மட்டுமின்றி மறைவு, வியப்பு, பிரமிப்பு போன்ற கருத்துக்களும் அடங்கியுள்ளன.

4. தேவைகளின்போது அவற்றைப் பூர்த்தியாக்குபவன், ஆபத்துகளின்போது அடைக்கலம் தரக்கூடியவன், மனக் கலக்கத்தின் போது அமைதியை நல்குபவன் என்று யாரைப் பற்றி மனிதன் நம்பிக்கை கொண்டுள்ளானோ அவனை நோக்கித் தனது பற்றுதலையும் கவனத்தையும் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே வணக்கத்துக்குரியவன் என்பதற்கான இலாஹ் எனும் சொல் எந்தேந்தப் பொருளின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளனவோ அவை வருமாறு: தேவையைப் பூர்த்தியாக்குபவன், அடைக்கலம் தருபவன், அமைதி அளிப்பவன், மேன்மையானவன், அதிகாரமுள்ளவன்.

எத்தைகைய அதிகாரங்களுக்கும் வலிமைக்கும் அவன் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்றால் அந்த வணக்கத்திற்குரியோன் தேவைகளை நிறைவேற்றுபவன்ம் ஆபத்தில் பாதுகாப்பு அளிப்பவன்ம் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆளுமையைக் கொண்டவன் அல்லது பொதுப் பார்வைக்கு வாரதவன், மேலும் மனிதனின் ஆழ்ந்த் பற்றுதலுக்குரியவன் - இப்படியெல்லாம் திகழும் அளவுக்கு அவனுடைய அதைகாரங்களும் வலிமையும் இருக்க வேண்டும்.

அறியாமைக்கால மக்களின் ‘இலாஹ்’ குறித்த கண்ணோட்டம்

இலாஹ் எனும் சொல்லின் அகாரதிப் பொருளைக் கண்டோம். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது அராபியர்களும் பழங்குடி மக்களும் இறைமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தனர்; அவர்களின் அந்தக் கருத்தை குர்ஆன் எப்படி மாற்றி அமைக்க விரும்பியது என்பதைத்தான்.

 وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِّيَكُونُوا لَهُمْ عِزًّا
தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(குர்ஆன் 19:81)

وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ
தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். (குர்ஆன் 36:74

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலிருந்தும் என்ன தெரிகிறது என்றால் அறியாமைக்கால அராபியர்களும் பழங்குடி மக்கள் எதனைக் கடவுள் என்று சொல்லி வந்தார்களோ அவை தங்களின் ஆதரவாளர்கள் என்றும், கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும் தமக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் என்றும், அவர்களின் உதவியைக் கொண்டு, தம் அச்சத்தை விட்டும் தோல்விகளை விட்டும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் நினைத்திருந்தார்கள்.

  وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِن ظَلَمُوا أَنفُسَهُمْ ۖ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِن دُونِ اللَّهِ مِن شَيْءٍ لَّمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ
அவர்களுக்கு நாம் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கு இழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை. (அல்குர்ஆன்: 11:101)

 وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ

  أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
 إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحدٌ ۚ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள். (குர்ஆன் 16:20,21,22 )

  وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۘ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ ۚ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ


அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (குர்ஆன் 28 :88)

  أَلَا إِنَّ لِلَّهِ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ


கவனத்தில் கொள்க! வானங் களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ் வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர். (குர்ஆன் 10:66)

இந்த வசனங்களிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.ஒன்று, அறியாமைக் கால மக்கள் யாரைக் கடவுள் என்று கூறினார்களோ அவர்களை அந்த மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அழைத்தார்கள். அதாவது பிரார்த்தனை செய்தார்கள்.

இரண்டு, அவர்கள் ஜின்களையும்,வானவர்களையும்,தெய்வங்களையும் மட்டுமில்லாமல் மரணித்தவர்களையும் கடவுளாய்க் கருதி அழைத்து வந்தனர். أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறியமாட்டார்கள், எனும் வசனத்திலிருந்து நன்கு தெளிவாகிறது.

மூன்று, அந்த தெய்வங்கள் அவர்களுடைய துஆவைக் கேட்பவர்களாகவும் அவர்களுக்கு உதவிபுரிய ஓடியாடிச் செல்வதற்கு அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர் என்றும் அவர்கள் நம்பி வந்தனர்.

இங்கே அவர்கள் தம் கடவுளிடம் எதிர்பார்க்கின்ற துஆவின் கருத்தையும் அவர்களுடைய உதவி புரியும் தன்மையையும் நினைவில் பதிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எனக்கு தாகம் எடுக்கிறது. தண்ணீர் கொண்டுவரும்படி நான் என் பணியாளனை அழைக்கிறேன். அல்லது நான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவரை அழைக்கிறேன். இங்கே அவை துஆவின் கருத்தில் வருவதில்லை; பணியாளோ மருத்துவரோ கடவுளாகி விடுவதுமில்லை. ஏனெனில் இவை யாவுமே காரண காரியங்களின் அடிப்படையில் வருகிறதே தவிர அதனைக் கடந்து அல்ல.


ஆனால் நான் தாகமெடுத்த நிலையிலோ நோய்வாய்ப்பட்டபோதோ பணியாளையோ மருத்துவரையோ அழைப்பதற்குப் பதிலாக யாரோ ஓர் இறைநேசரை அல்லது ஒரு தெய்வத்தை அழைக்கிறேன் என்றால் நிச்சயமாக அவர்களை நான் கடவுளாக்கி இறைஞ்சினேன் என்று பொருளாகும். ஏனெனில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் ஏதோ ஒரு சமாதியில் அடக்கப்பட்ட இறைநேசரை அழைப்பதன் பொருள், எல்லாவற்றையும் கேட்பவராகவும் பார்ப்பவராகவும் அவரை நான் கணித்துக் கொண்டேன் என்றாகிறது. இக்காரண காரிய உலகின் மீது அவர்களுடைய ஆட்சியதிகாரம் செல்வதாகவும், அதைக் கொண்டே அவர்கள் என்னிடம் தண்ணீரை அனுப்பும் சக்தியை, என் நோய் தீர்க்கும் ஆற்றலைப் பெற்று உள்ளனர் என்றும் நான் நினைக்கிறேன் என்றாகிறது.

அதே போலாந்த நிலையில் ஏதோ ஒரு தெய்வத்தை அழைப்பதற்குரிய பொருள்;என்னவேன்றால் தண்ணீரின் மீதோ நோயின் மீதோ அதற்கு அதிகாரம் உள்ளது; இயல்புக்கு அப்பாற்பட்டு காரன காரியங்களை இயக்கும் வல்லமை பெற்றுள்ளது என்பதாகும். இயல்புக்கு அப்பாற்பட்ட அதிகாரமும் சக்தியும் அந்தக் கடவுளுக்கு உண்டு என்ற கருத்தின் அடிப்படையில்தான் துஆ -பிரார்த்தனை செய்யப்படுகிறது. இது மோசடியாகும்.

(இன்ஷா அல்லாஹ் இன்னும் விரிவாக அடுத்த பாகத்தில் தொடரும்)

(Reference :குர் ஆன் ஹதீஸ்
நூல் : அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்.