Monday, February 3, 2014

வீடியோ : என்ன கொடுமை இது?


இந்த வீடியோவை பாருங்கள் மனிதர்கள் காலில் மனிதர்கள் விழுவதை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை இதற்கும் இஸ்லாத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி பிழைக்கும் மனங்கெட்டவர்கள்.

பிறர் காலில் விழலாமா? விழவும் கூடாது விழவைக்கவும் கூடாது.

"இறைவனுக்கு மட்டுமே (தரையில் நெற்றியை வையுங்கள்) ஸஜ்தா செய்து வணங்குங்கள்"
(அல்குர்ஆன்.53:62)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. காலில் விழுவது மட்டுமல்ல தன் நடந்து வரும்போது எழுந்து நிற்பதை கூட தடுத்தார்கள்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். 

அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

அறியாத சிலர் காலில் விழ முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி:
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். "இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்''என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து "நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். "மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்" என்று கூறினார்கள். 

அறிவிப்பாளர் கைஸ் பின் ஸஅத்ரளியல்லாஹு அன்ஹு 
நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ""எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.

1 comment:

  1. என்ன கொடுமை இது,பார்க்கவே நெஞ்சம் பதை பதைக்கிறது.அப்பாவி பாமர முஸ்லிம்களை ஏமாற்றி காலில் விழ வைக்கும் இந்த கபட வேடதாரிகளை, அதுவும் பெண்களை கூட காலை முத்தமிட வைக்கும் இந்த கயவனை செருப்பால் அடித்தால் கூட தப்பில்லை.முற்றிலும் இசுலாத்திற்கு எதிரான செயலை செய்யும் இவனுக்கெல்லாம் தாடியும் தொப்பியும் எதுக்கு.

    இவன் தன் காலில் விழ வருபவர்களிடம் காசு வாங்குவதும் பதிவாகியுள்ளது.தன் தேவைக்கே சம்பாதிக்க துப்புக் கெட்டுப்போய் மற்றவர்களிடம் பிச்சையெடுக்கும் இந்த நாய் தங்கள் பிரச்னையை தீர்த்து வைத்து விடுமா என்பதை இவன் காலில் விழுவோர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ReplyDelete