Friday, January 27, 2012

'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...


இந்த பூமிப் பந்தை பற்றிபடர்ந்திருந்த அறியாமை இருளை அடித்துவிரட்டி, ஒளிமிக்க வாழ்க்கையை நிலைநாட்ட வந்த அருள்மிகு வேதமே திருக்குர்ஆன்.

குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘ரப்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.

சிலை வணக்கமும் உருவ வழிபாடும் மட்டுமே ‘இணைவைப்பு'  என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ‘ரப்’ என்கிற சொல்லின் பொருளை சரியாகவும், முழுமையாகவும் விளங்கிக் கொண்டால் ஆன்மீகத்தில் மட்டுமல்ல,சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களிலும் எத்தனை எத்தனை இணைவைப்புகள் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் அடையாளம் காண முடியும்.


‘ரப்’ சொற்பொருள் ஆய்வு
ர,ப, ப என்பது இந்தச் சொல்லின் மூலம் ஆகும்.அதன் முதன்மையான அடிப்படையான கருத்து பரிபாலித்தல் என்பதாகும்.பின்னர் அதிலிருந்து கவனித்தல், கண்காணித்தல்,சீரமைத்தல்,நிறைவு செய்தல் போன்ற கருத்துக்களும் ஏற்பட்டன,அதே அடிப்படையில் முதன்மை,தலைமை,தனியுரிமை மற்றும் ஆளுமை போன்ற பொருள்களும் ஏற்பட்டு விட்டன.அகராதியில் அந்தச் சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1.பரிபாலித்தால்,வளர்ச்சியூட்டல்,விரிவுபடுத்தல் அதாவது ஒரு பொருளை படிப்படியாக முன்னேறச் செய்து நிறைவுக்குக் கொண்டு வருதல். உண்மையில் அதற்குரிய பரந்த பொருளில் இதுவும் ஒரு பொருளெனக் கொள்ளலாம்.

2.பராமரிப்ப்வன்,தேவைகளை வழங்குபவன்,வழிமுறைகளையும் வளர்ச்சியையும் தருபவன்.

3.பொறுப்பாளன்,கண்காணிப்பவன்,வளர்த்து ஆளக்குபவன்,சீர்திருத்தம் செய்பவன்.

4.மைய தகுதியுடையவன்,அவனைச் சூழ்ந்து பல்வேறு மக்கள் குழுமி இருப்பார்கள்.

5.கீழ்படிய வைப்பவன், தலைவன்,அதிகாரம் கொண்டவன்,கட்டளை பிறப்பிப்பவன், முதன்மையையும் ஆதிக்கத்தையும் படிய வைப்பவன்,மற்றுவதற்குரிய அதிகாரம் உடையவன்.

6.அதிபதி, எஜமானன் இரட்சகன்


குர்ஆனில் ‘ரப்’ என்ற சொல்லின் பயன்பாடு
  قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا 
34:26“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்;
  اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ 
9:31“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும்,துறவிகளையும் தங்களின் ‘ரப்’ - கடவுளாக்கிக் கொண்டார்கள்.
وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ
3:64 “மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவானாய் ஆக்கிக் கொள்ளக் கூடாது”
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ
21:22“எனவே அவர்களின் பொய்யான வர்ணனையில் இருந்து அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆனில் இபுறாஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து மக்களின் வரலாறு.

இறையமையுடன்முதலும் இரண்டாவதுமான பொருளில் வானுலக சந்திரன், சூரியன் நட்சத்திரங்களையும் பங்குதாராய் கணித்துக் கொண்டார்கள்.அதன் காரணமாக இறைவனுடன் அவற்றையும் வணக்கத்திற்குரியவைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.

முதலில் இப்றாஹீம் (அலை) அவர்களின் ஆரம்ப உணர்வுகளின் நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் அவருடைய சத்தியதேடலின் நிலை இவ்வாறு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
  فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا ۖ قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ  فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ  فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ ۖ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ  إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
6:76”இரவு அவரை மூடிக் கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.”

6:77 “சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்” என்றார் அது மறைந்த போது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன் என்றார்.”

6:78“பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

6:79 “வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவானாக என் முகத்தைத் திருப்பிவிட்டேன்.நான் இணை
கற்பித்தவனல்லன்” (எனக் கூறினார்)

இபுறாஹீம் நபிக்கு முன்னால் வந்த நபிமார்கள் சரியான ஏகத்துவ கொள்கையை சொல்லி கொடுத்து விட்டு சென்றார்கள் ஆனால் காலப்போக்கில் திரிந்து இறையமையோடு சந்திரன் சூரியனை கூட்டு சேர்த்தனர் ஆகவே இபுறாஹீம் நபியவர்கள். நபித்துவத்திற்கு முன்னர் இந்த வினாவுக்கு விடை தேடுவதிலேயே அவர் முனைந்திருந்தார்கள்.

இபுறாஹீம் நபி (அலை) அவர்கள் இறைத்தூதராய் ஆனபோது மக்கள் சூரியன் சந்திரனை இரட்சகனாக,‘ரப்”ஆக நினைத்ததை மாற்றினார்கள் ஒரிறையின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள்.  
وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ
 الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
6:81.உங்களுக்குஅவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
குர் ஆனின் அழைப்பு
‘ரப்’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் படைப்பினங்களின் பாரமரிப்பு, பதுகாப்பு,தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஆதரித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளி என்பதாகும். முந்தைய சமூக மக்களின் கண்ணோட்டத்தில் அதன் பொருள் வேறாக இருந்தது. மேன்மைக்குரிய ‘ரப்’பாக அல்லாஹ்வையே அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் இரண்டாம் தர சக்திகளாக சூரியன்,சந்திரன்,இறைநேசர்கள்,மற்றும் மதகுருமார்களையும் இணைத்துக் கொண்டார்கள்.


படைத்தவனோடு படைப்பினங்களை இறைவனுக்கு இணவைப்பது 
சரியாகாது இந்த அழைப்பை குர்ஆன் எந்த விதத்தில் அளிக்கிறது என்பதை அதன் வாயிலாகவே கேளுங்கள்:
قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّهُ ۚفَقُلْ أَفَلَا تَتَّقُونَ فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
10:31“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.


10:32உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
39:5அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
 هُوَ الْحَيُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۗ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
40:65அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.


எனவே ‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி விளையாட்டுக் கூட 
இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்.

Monday, January 23, 2012

'மாவோ':சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்

இணையத்தில் மாவோவை ஆசானாக கொண்ட மாவோயிஸ்ட்கள், சீடர்கள் வினவு,மற்றும் செங்கொடி வகைறாக்கள்.இந்தியாவில் எப்படியும் மவோயிஸ கொள்கை கொண்ட ஒரிஜினல் கம்யூனிஸ ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடுவோம் என்கிற கனவோடு எழுதிக் கொண்டிருக்கும் குழு. அவரவர் கொள்கையை எழுதுவது தவறில்லை. ஆனால் அவர்கள் பின்பற்றும் வழிமுறை? நேர்மையற்றது,மிகத்தவறானது

ஆசியாவில் இந்த மாவோயிஸ கம்யூனிஸம் ஆட்சி செலுத்திய இடங்களின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. எங்கெயெல்லாம் புத்த/பவுத்த மதத்தின் செல்வாக்கு இருந்ததோ அங்கு தான் இவர்களின் சரக்கு மிக ஈஸியாக செல்லுபடியாகி இருக்கிறதுஎளிமையாக ஊடுருவி அதிகாரத்தை பிடிக்க முடிந்திருக்கிறதுஉதாரணத்திற்கு சீனாதிபெத்வியட்நாம்தற்போது நேபாளம்……….  இவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தது வேறு யாருமில்லை. நம்ம புத்த மகான்’ தான்.

அரசப்பதவிகளை உதறித் தள்ளிவிட்டு  துறவியான புத்தர் தன்னுடைய சீடர் போர்க்களத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றபோது அதுகூட கூடாதென்று தடுத்தார்.வியாட்நாமை பிரான்ஸ்,அமெரிக்க்கா போன்ற வல்லரசு நாடுகள் ஆக்கிரமித்து கொடுமையான போரை அவர்கள் மீது திணித்தபோது புத்த பிக்குகள் எதிர்த்து ஆயுதமேந்தி போராடவில்லை. புத்த மதமும் அப்படி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக புத்த பிக்குகள் தன்னை தானே எரித்து தற்கொலை செய்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.அனுதாபப்பட்டு உச்சு கொட்டி எழுதிய தலைப்பு செய்திகளாக பத்திரிக்கையில் வரமுடிந்ததே தவிர தீர்வு கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் ராஜக போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாட்நாமிய புத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து போராட்டம் நடத்திய புகைப்படம்.


ராணுவப்போராட்ட அரசியலுக்கு புத்த மதத்தில் இருந்த வெற்றிடத்தை நிரப்ப அங்கு கம்யூனிஸ போராளிகள் தேவைப்பட்டார்கள்வல்லரசுகளுக்கு எதிராக போராடினார்கள்புத்த மதத்தையும் சேர்த்து வென்றார்கள். அமெரிக்கா மட்டுமல்ல புத்த மதமும் தான் வியட்நாமிய அரசியலிருந்து வெளியேறியது. அந்த இடத்தை கம்யூனிஸ கொள்கை பிடித்துக் கொண்டது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட்கள் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு சக்தியாக இருந்து சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி அவர்களின் மதநம்பிக்கையை அழித்துஅடக்கி ஒடுக்கியிருக்கிறார்கள்.

சீனாவில் சீன மக்கள் குடியரசு’ என்ற பெயரில் மவோ ஆட்சியில் அமர்ந்த கையோடு திபெத் பற்றிய தனது ஆக்கிரமிப்பு கொள்கையை அறிவித்தது.திபெத் ஆக்கிரமிக்கப் படவேண்டும்அதன் தாய்நாடான சீன மக்கள் குடியரசோடு திபெத் இணைக்கப்பட வேண்டும்சீனாவின் ஒரு பகுதி தான் திபெத். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று அறிவித்து சுதந்திர நாட்டின் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுப்போம்” என்றது.

நவம்பர் 2,1949-ல் திபெத்திய வெளிநாட்டு அமைச்சகம் ஒரு கடிதத்தை மாவோவுக்கு அனுப்பிவைத்தது. அதன் சாரம் இதுதான்:-
திபெத் ஒரு வித்தியாசமான நாடு.திபெத் முழுக்க முழுக்க புத்த மதம்ஆழமாக பரவியுள்ளது.தலாய் லாமா அவர்களின் தலைமையில் திபெத் இயங்கி வருகிறது.முந்தைய காலம் தொட்டு இன்றைய தேதிவரையில் திபெத் தனிநாடாகவே இருந்து வந்திருக்கிறது.திபெத்தின் அரசியல் நிர்வாகம் எந்தவொரு வேற்று நாட்டினரின் அதிகாரத்துக்கும்உட்பட்டிருக்கவில்லை. திபெத், தம்முடைய பிரதேசங்களை தாமாகவே பாதுகாத்துக் கொள்கிறது. இது ஒரு மத நம்பிக்கையுள்ள நாடு.


எந்த விளக்கத்தையும் கேட்க மாவோ தயராக ல்லை. ஜனவரி 1,1950.அதிகாலையில் கரகரத்த குரலில் ரேடியோ பீகிங் இந்த வருடம் செம்படைக்கு ஒரு முக்கியப் பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. திபெத் கைப்பற்ற படவேண்டும் உடனடியாக போரை தொடங்கியது. அதுவும் எப்படி?????? திரும்பத் திரும்ப வானொலியிலும் துண்டறிக்கைகளிலும் தன்னை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக காட்டிக் கொள்ளமால்,திபெத்தை விடுவிக்க வந்த நண்னாகக் காட்டிக் கொள்ள முனைந்தது மவோவின் ஆக்கிரமிப்பு படை.


மாவோ உறுதியான குரலில் திபெத்துக்குச் சில வாக்குறுதிகளை அளித்தார்.(பின்னர் கொடுத்த வக்குறுதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை)


1.திபெத்திய லாமாக்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள்பாதுகாக்கப்படும்;மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்படும்.

2.லாமாக்களின் கோயில்கள் பாதுகாக்கப்படும்.

3.திபெத்தின் தற்போதைய நிர்வாகத்திலும் ராணுவத்திலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது.

4.திபெத்தியப் படைகள் சீனாவின் பாதுகாப்புப் படைகளுடன் ஒன்றிணைக்கப்படும்.அனைத்து லாமாக்களும் அதிகாரிகளும் அவர்களது பதவிலேயே தொடர்ந்து நீடிக்கலாம்.

5.எந்தவிதமான முன்னேற்ற ஏற்பாடாக இருந்தாலும் அது திபெத்தியர்களைக் கலந்தாலோசித்த பிறகே நடைமுறைப்படுத்தபடும்.
1951-ல் சிறிய எதிர்ப்புகளைத் தகர்த்துவிட்டு திபெத்துக்குள் நுழைந்ததுசெம்படை. முதன்முறையாக சீனாவின் தலைமையை திபெத் ஏற்றுக் கொண்டது., ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிந்தது.(அன்று பணிந்த திபெத் இன்று வரை விடுபடவில்லை)
திபெத்தில் அரசியல் ட்சி அதிகாரத்தை வலுவாக பிடித்தபிறகு தங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாற்றமாக மவோ’ கம்யூனிஸ்ட்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்…..

1.புத்த மதத்துக்கு சொந்தமான மடங்களின் சொத்துக்கள், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திபெத்தியர்கள் மீது புத்தமதம் செலுத்திவரும் நம்பிக்கையை அழித்து விட சீனா துடித்தது. மதத்தலைவர்கள் முக்கியத்துவத்தை இழக்க வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டனர். புத்தமதத்துக்கு எதிரான கருத்துக்களைப் போதிக்கும் புத்தகங்கள் திபெத்துக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

2.பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடாலயங்களுக்கு அனுப்பும் வழக்கத்தை நிறுத்தச் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்கள். மடாலயங்களுக்கு அனுப்பப்படாத குழந்தைகளுக்கு நவீன கல்வி அளிக்கப்படும் என்றார்கள்.

3.அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்து(!?) பிற புத்த மடங்களை பொதுமக்கள் வேறுவகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.(இவர்கள் தான் தாலிபான்கள் புத்த சிலையை இடித்ததை கண்டிக்கும் மகா உத்தமர்கள்)

4.மதச்சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்கள்.

5.பிரார்த்தனைக் கொடிகள்,துபத்திகள் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றார்கள்.

6.தலாய் லாமாவின் அனைத்து புகைப்படங்களையும் மக்கள் அழித்து விட வேண்டும் என கூறினார்கள்.


உச்சகட்டமாக தலாய் லாமாவின் அதிகாரத்தை மாவோயிஸ சீ அரசு ரத்துசெய்தது.தலாய்லாமா மற்றும் திபெத்திய பழைய அரசாங்க பிரதிநிதிகள்இந்தியாவிற்கு தப்பி அகதிகளாக வந்தனர்அதற்கு பிறகு இலட்ச கணக்கான திபெத்திய மக்கள் அகதிகளாக இந்திய எல்லைக்குள் வந்தவண்ணம் இருந்தனர். (இன்றும் அகதிகளாக இருக்கின்றனர்.)
தலாய்லாமா தப்பி இந்தியா வந்தபோது நேரு அவரை சந்திக்கிறார்
இதனிடையில் லாமா கிளம்பிய மறுநாள் விடிந்ததும் சீன படைகள் அரண்மனையை சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கபட்டன. அவருக்கு ஆதரவானவர்கள் கொல்லபட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லபட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இலங்கையின் ஈழதமிழ்மக்கள் சில நாடுகளில் அகதிகளாக இருப்பது போலவே1952 லிருந்து இவர்களும் அகதிகளாக திரிகிறார்கள். நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை நிறுவி அதற்கு பிரதமரையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்

நாடு கடந்த திபெத் பிரதமர் (கெலோன் டிரிப்பா)லாப்சங் சங்கே-தலாய்லாமா

அன்று மவோ தொடங்கி வைத்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மக்கள் 60 வருடங்களாக அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனதுகோரிக்கையை சீனா செவி சாய்த்துவிடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சீனா இதுவரை செவிசாய்க்கவில்லை. தேசிய இன விடுதலையை பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட்களும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.


இதே கம்யூனிஸ்ட்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது கதற கதற அடித்து கம்யூனிஸ்ட்களை ஆப்கானியர்கள் வெளியேற்றியதை இந்த திபெத்தியர்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் கம்யூனிஸ சர்வதிகார அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைக்கும். 

Saturday, January 21, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2

இந்த பதிவின் முதல் பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் 


அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)

பின்குறிப்பு:
அவ்ரங்கசீப் பற்றி வரலாற்றுரீதியான ஆதாரங்களோடு நடுநிலையோடு எழுதப்பட்ட நூல்கள் ஏராளமாக இருக்கின்றன அதில் குறிப்பிடத் தக்கது சே.திவான் அவர்கள் எழுதிய அவ்ரங்ஜேப் அந்த புத்தகம் வேறு கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது முடிந்தால் அந்த நூலை வாங்கி படியுங்கள்.

பின்குறிப்பு: 2
சென்ற முதல் பதிவில் ஆதார நூல்களை சகோதரர்கள் கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காக.
இஸ்லாமிய மறுமலர்ச்சி என்ற இந்த நூல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் தாக்கப்படும்போதேல்லாம் தோன்றி முகம் கொடுத்த ‘முஜத்தித்’ (இஸ்லாத்திற்கு புத்துயிரளித்து அசல் நிலைக்கு கொண்டு வருபவர்)களைப் பற்றிய தொகுப்பு புத்தகம்.
இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்-பாகம் 1.2
வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று இடங்கள்,காலப்பகுதி,ஆய்வுக்காக

Friday, January 20, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்

‘தீனே இலாஹி’ இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் அக்பரால் உருவாக்கப்பட்டு அக்பர் இருந்தவரை உயிரோடு இருந்து அவர் இறந்தபோது அந்த புதிய மதமும் சேர்ந்தே இறந்து போனது. இறந்து போன மதத்தைப் பற்றி இப்போது என்ன பேச்சு,எழுத்து வேண்டிகிடக்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? சத்திய மார்க்கத்திற்கு எதிராக எழுந்த அசத்தியக் கொள்கைகள் எப்படித்தோற்று போயின என்பதை தெரிந்துக் கொள்வது முக்கியமானதல்லவா?
அக்பர்
அனைத்து வகையான ஊடகங்களும், இணையமும் சமகாலத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக தொடுக்கிற போரை விட பலமடங்கு அதிகமான சிலுவைப் போர்,தாத்தாரிய படையேடுப்பு, வாள், பேனாமுனை தாக்குதல்களை இஸ்லாம் சந்தித்து வென்று இன்றும் கலப்படமற்று நிற்கிறது. இதோ வரலாறு

முகலாயச் சம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக இந்து, முஸ்லிம் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து ஒரு புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரசவைப் பிரதானிகள் சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுகளை எடுத்துக் காட்ட முற்பட்டனர். “மகாத்மாவைக் கொண்ட ஓர் அரசன் பிறப்பான்;அவன் பசுவைக் காப்பான்” என்று கதை விட்டனர்.

நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல முஸ்லிம் அறிஞர்கள் சிலர் “அக்பரே வாக்களிப்பட்ட மஹ்தி” என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக “அக்பர் தான் இமாமுல் முஜ்தஹித்” என்றும் நீருபிக்க முனைந்தனர்.அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி ஒருவர் அக்பரை பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீஃபா’என்றும் ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.
ஆகவே இறைவனின் புதிய அவதாரம் அக்பர் புதிய மதத்தை தொற்றுவித்து அந்த மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படைக் கொள்கை ‘லா இலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீஃபத்துல்லாஹ்’ என்பதாகும். (அதாவது வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.அக்பர் அவனது பிரதிநிதியாவார்) இப்புது மதத்தை தழுவியவர்கள் தம் ‘பாரம்பரிய மதமும் மூதாதையரிடமிருந்து கேட்டும் பார்த்தும் அறிந்துக் கொண்ட மார்க்கமாகிய இஸ்லாத்தை வெளிப்படையாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹி’யில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும்.

இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர். முகமன் கூறும் முறையும் மாற்றப் பட்டது.( ‘அஸ்ஸலாமு அலைக்கும்’என்பதற்கு பதில்) ஒருவர் ‘அல்லாஹ்’ என்று கூற மற்றவர் பதிலுக்கு ‘ஜல்லா ஜலாலுஹு’ என்பார்.இச்சொற்கள்,சக்கரவர்த்தியின் ஜலாலுதீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.

சேலர்கள் தம் தலைப்பாகைகளில் அக்பரின் உருவத்தை ஒத்த உருவங்களை அணிமாறு பணிக்கப்பட்டனர்.அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும் அரசனை அதிகாலையில் தரிசிப்பதைக் கொண்டு மக்கள் இதனை நிறைவேற்றினர்.அரசனின் திருமுன் வருவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்துவிட்டால் முதலாவதாக அவர் அரசருக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.அவரே தம் பிராத்தனைகளையும் வேண்டுதல்களையும் நிரைவேற்றுவார் போல ஆலிம்களும்,சூஃபிகளும் கூட அரசனுக்கு தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்வார்.

இஸ்லாத்துக்கு முரணான இச்செயலை அவர்கள், ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காக காலில் விழுதல் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். தீ வழிபாடு பாரசீக ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப் பட்டு, எப்போழுதும் அரசமாளிகையில் தீ எரிந்துக் கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்குகளும் மெழுகுத்திரிகளும் ஏற்றப்படும் போது அரண்மனையினர் எழுந்து நின்று மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது.
‘மணி அடித்தல்’, ‘மும்மூர்த்திகளை வழிபடல்’ போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவலாகப் பெறப்பட்டன.எனினும் இந்து மதமே அதிக ஆதரவைப் பெற்றது. ஏனெனில் அதுவே நாட்டின் பெரும்பான்மை மக்களது மதம் என்கிற அரசியல் காரணம் இருந்தது.சாம்ராஜ்யத்தை ஆள்வதை உறுதிப்படுத்துவதற்கு இந்து மதத்துக்கு அதிக ஆதரவு அளிப்பது அவசியம் ஆயிற்று.

பசுக்களை அறுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அரசமாளிகையில் ‘ஹவான்’ முறையாக நடைபெற்றது. அன்றாடம் நான்கு வேளை சூரிய வழிபாடு இடம்பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன.யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால்,அதை கேட்டவர்கள் “அதன் புகழ் ஓங்குக” என்பர் மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கும் ஆதரவு அளிக்கப்பட்டது.

அதேவேளை அக்பரும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். அஹ்மத்,முஹம்மத் போன்ற பெயர்கள்கூட வழக்கொழிக்கப்பட்டு, இச்சொற்களைக் கொண்ட பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.பாரசீக மொழியில் பெரோஸ்,பைரோஸ் போன்ற பெயர்கள் சூட்டப் பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தம் சொற்பொழிவுகளிலும் எழுத்துகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தும் இடங்களில் வாழ்த்துச் சொற்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிட்டனர். சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறினர் (இறைவன் மன்னித்தருள்வானாக!).

அரசனின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு,ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து அவற்றை இழித்துரைத்தார். அரசவைக் கவிஞர்கள் இக்கடமைகளைக் கிண்டல் செய்து புனைந்த கவிதைகளுக்கு உயர்ந்த சன்மானங்கள் வழங்கப்பட்டன. நேர்மையான ஆலிம்கள் உண்மையான இஸ்லாத்தை எடுத்துரைத்தால் அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால்,அத்தகைய ஆலிம்களுக்கு ‘ஃபக்கீஹ்’ (கவனிக்கத் தகாத முட்டாள்) எனப் பட்டம் சூட்டப்பட்டது.
(Akbar holds a religious assembly of different faiths in the Ibadat Khana in Fatehpur Sikri.)
எல்லா மதங்களையும் நுணுகி ஆராய்வதற்காக ஓர் அரசாணை மூலம்நாற்பது பேரைக் கொண்ட ஒரு சபை நியமிக்கப்பட்டது. இவர்கள் ஏனையமதங்களை ஆராயும் பொழுது மிக்க சகிப்புத் தன்மையோடும் கண்ணியமாகவும் நடந்துக் கொள்வர் என்றும், இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் வெளிப்படையாகவே அவமதிப்பர்கள்.இஸ்லாத்தை ஆதரிப்பவர் எதுவும் சொல்ல முற்பட்டால் உடனே அவர் அடக்கப்பட்டு விடுவார்.நடைமுறையில் இஸ்லாமிய போதனைகள் தட்டுத்தடங்கலின்றி நிராகரிக்கப்பட்டன;அல்லது வெட்கக் கேடான முறையில் திருத்தப் பட்டன.

வட்டி,சூதாட்டம்,மதுவருந்துதல் ஆகியவை சட்டபூர்வமாக்கப்பட்டன. நவ்ரூஸ் பண்டிகையின்போது மதுவருந்துதல் கட்டாயமாக்கப்பட்டது. பட்டும் தங்கமும் அணிவது ஆண்களுக்கு சட்டமுறையாக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு மாறாக பன்றி தூய்மையான புனிதமான ஒரு விலங்காகக் கருதப்பட்டது.அதிகாலையில் பன்றியின் முகத்தில் விழிப்பது நற்சகுனத்துக்குரிய செயலாகக் கொள்ளும் அளவுக்குப் பன்றி புனிதத்தன்மை பெற்றது.

இறந்த உடல்கள் புதைப்பதற்குப் பதில் எரியூட்டப்பட்டன;அல்லது ஓடும் நதியில் எறியப்பட்டன.இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று யாரேனும் வற்புறுத்தினால்,அவ்வுடலின் கால்களைப் புதைகுழியில்‘கிப்லா’வுக்கு நேராக வைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். சூஃபிஸத்தை ‘தீனே இலாஹி’யின்ஆதாரவு மதம் என்று ஆன்மீகத் தலைவர்கள் மற்றொரு நோயையும் மக்களிடையே பரவச் செய்தனர்
அவர்கள் கிரேக்கத்தத்துவங்களையும் கடுத்துறவு கோட்பாடுகளையும்,
வேதாந்தத்தையும் கலந்து புதுமையான,தத்துவரீதியான சூஃபித்துவக் கொள்கை ஒன்றை தோற்றுவித்தனர். அது எவ்வகையிலும் இஸ்லாமிய ஒழுக்க முறைக்கும் நம்பிக்கைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கவில்லை. இந்த சூஃபித்துவ அமைப்புகளுக்கும் ஷரீஅத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்ற நிலை உருவாகி சூஃபிகள் ஷரியத்தை பின்பற்ற தேவையில்லை.என்றார்கள்.

இன்னும் விரிவாக “தீனே இலாஹி” என்ற மதத்தின் ஒரு சில அபத்த கொள்கைகளையும்.இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குவான் அப்படி அந்த காலப் அப்குதியில் தோன்றி “தீனே இலாஹி” கொள்கையை எதிர் கொண்டு அழித்து சரியான மார்க்கத்தை நிலைநாட்டிய மார்க்க அறிஞர், மேதை 
‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’ அவர்களைப் பற்றியும் அடுத்த தொடரில்.

(இறைநாடினால் தொடரும்)