Monday, July 30, 2012

பாக்யராஜின் பதில்களும் உமர் (ரலி) அவர்களும்

சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.


கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?


பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,


"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?"  என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"  என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த  காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.


இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்  பாக்யராஜ் அவர்கள் தான்.
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ்  நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?

இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.

ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.

கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.

Saturday, July 28, 2012

பணத்திற்காக பலரை பைத்தியமாக்கிய டாக்டர்

மருத்துவர் எஸ்.கே. குப்தாவை உங்களுக்கு தெரியுமா? 2004 ஆம் வருட பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து வழக்கம் போல் காணமல் போனவர்.குப்தா ஒரு மனநல மருத்துவர்.ஆக்ராவில் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றியவர்.

குப்தாவின் பகுதிநேர வேலை என்ன தெரியுமா? ஏதுமறியாத, அப்பாவியான,நல்ல மனநலம் உள்ள பெண்கள் குறித்து “இவள் ஒரு மனநோயாளி.என்னிடம் இரண்டாண்டுகளாக அல்லது ஐந்தாண்டுகளாக அல்லது இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறாள்” என போலிச் சான்றிதழ் எழுதிப் கொடுப்பது தான்.

இந்தப் போலி சான்றிதழுக்காக ரூ. பத்தாயிரம், ஐந்தாயிரம் என ஆளுக்கு தகுந்தாற்போல் பேரம் பேசி வாங்கி இருக்கிறார். நல்ல மனநலம் உள்ள பெண்களை மனநோயாளி என எதற்குச் சான்றிதழ் தர வேண்டும்? இந்த சான்றிதழ் யாருக்குத் தேவைப்படும்? இந்தச் சான்றிதழ் வாங்கிக் கொள்வதால் பயனைடைவது யார்? போன்ற கேள்விகளுக்கான விடை மிகப் பயங்கரமானது.
யாரை பைத்தியமாக்கனும் பணத்த கொடுங்க கச்சிதமாக முடிச்சுருவோம்
இருங்க நீங்க கொடுத்த பணம் சரியாக இருக்கானு எண்ணிப் பார்த்துகிறேன்.
ம்ம் பணம் சரியா இருக்கு
பொன்னு பெரு என்ன சொன்னீங்கே அவள் ஒரு பைத்தியம்.
டாக்டர் பைத்தியம் என்று வழங்கிய போலிச் சான்றிதழ்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மீராவின் குடும்பத்தினர் ‘யாதவீர் சிங்’ என்பவருக்கு பேசியபடி பணம், நகை, ஸ்கூட்டர் அனைத்தையும் வரதட்சணையாக கொடுத்து மணமுடித்து வைத்திருக்கின்றனர் அதை வாங்கிய பின்னரும் யாதவீர் சிங் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் இச்சூழ்நிலையில் மீராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது பொம்பள பிள்ளையை பெற்று விட்டாயே என்று இன்னும் கொடுமை அதிகமாகியிருக்கிறது.

மாமியார் வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு இறந்திருக்கிறார் அக்குடும்பம் சட்டத்திடம் சரியாக சிக்கிக் கொண்டது தண்டணை உறுதி என்று தெரிந்தவுடன் இந்த டாக்டரிடம் ஓடி இருக்கிறார்கள் இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பெண் பைத்தியம் எனது மருத்துவமனையில் தான் இருந்தார் என்று எழுதிச் சான்றிதழ் கொடுத்தின் மூலம் அவர்கள் இதை கோர்ட்டில் சமர்பித்து பைத்திக்காரப்பெண்  தற்கொலை செய்துக் கொண்டார் என வழக்கின் திசையை மாற்றி வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்.
மருத்துவரால் பாதிக்கப்பட்ட மீராவின் குடும்பத்தினார்

அதுமட்டுமல்ல இந்திய நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதில்லை அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதை உடைக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீருபித்தால் எளிதாக விவாகரத்து கிடைத்து விடும். இந்தச் சட்ட நுணுக்கத்தை குப்தா பயன்படுத்திக் கொண்டார். மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பும் நபர்கள் குப்தாவை அணுகியிருக்கிறார்கள். குப்தாவும் இன்னாரது மனைவியான இவள் என விவரமாக எழுதி போலி சான்றிதழ் கொடுத்து விடுவார் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க வெறும் ஐயாயிரம் ரூபாய்!

இவ்வாறு பத்து பெண்களின் வாழ்வைப் பாழாக்கி இருக்கிறார்,இதனையே வேறு வார்த்தைகளில் விவாகரத்து தொடர்பாக பத்து நபர்களுக்கு உதவி இருப்பதாகச் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார், குப்தா. இந்த போலிச் சான்றிதழ் வழங்கும் மனநல மருத்துவரைத் தான் தெஹல்கா நிருபர் ‘ஜம்ஷெத் கான்’ கையும் களவுமாக(மேலேயுள்ள படங்கள்) ரகசியக் காமிராவில் பிடித்திருக்கின்றார்.

“அவரிடம் உம் மனைவியையும் இங்கே அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.பெயர் சொன்னால் போதும். ஸாலிட் காம் ஹோ ஜாயேகா (கச்சிதமாக வேலை முடிந்து விடும்)” என தம்பட்டம் அடித்திருக்கின்றார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கற்பனை மனைவியின் பெயரில் போலிச் சான்றிதழ் வாங்கி விட்டார், ஜம்ஷெத்கான்.

போராசை,பணப்பித்து, ஊழல்,லஞ்சம்,நிர்வாகக் சீர்கேடு போன்றவை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி இருந்தாலும் கூட இந்த ஆக்ரா மருத்துவரின் செயலை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் வெறும் ஊழல் பிரச்சனையாக பணப்பித்து பிடித்த மனிதரின் குற்றமாக மட்டும் இதனை அணுகக் கூடாது.

திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.

Wednesday, July 25, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-2

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
இனி எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைககளைப் பற்றிப் பார்ப்போம்.

2. பிரச்சனைகள்


எழுத்துத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை முடிந்த வரை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ‘சீனாவில் சாய்லுன்’ என்பவர் முதன்முதலில் காகிதத்தை கண்டுபிடித்த பிறகு தான் அக்காலக்கட்டத்தில் சீனா பண்பாட்டுத்துறையில் மேலைநாடுகளை விட முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஒரு சீனா அறிஞர் தமக்கு தேவையான மூங்கிலால் செய்யப்பட்ட  நூல்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கூட அவற்றை பெரிய பார வண்டியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.இந்த அடிப்படையில் ஓர் அரசின் நிர்வாகத்தை நடத்துவது எத்துணை கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
மரநூல்
மூங்கில் கழிகளை வெட்டி கூழாக்கி ககிதம் தயாரிக்கும் ‘சாய் லுன்’ ஒவியம்.
மேலும் விபரங்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள் 
சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின்போது காகிதம் பெருமளவுக்கு பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்டகாலம் ரசசியமாகவே வைத்திருந்ததை. கி.பி.751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர்.அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும்.பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று.படிப்படியாக அரபு உலகம் முழுவதும் பரவியது ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்த கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.


சீனர்களின் அச்சுப்பாள அச்சுமுறை
காகிதத்தை முதலில் பயன்படுத்திய சீனர்களும், அராபியர்களும் கல்வித்துறையிலும் எழுத்துத் துறையிலும் ஐரோப்பியர்களை விட பிற்காலங்களில் பின் தாங்கியதற்கு மிக முக்கிய காரணம். ‘தொழிற்நுட்பம்’ காகிதத்தை கண்டுபிடித்த இவர்கள் அச்சிடும் முறையை அறியாதவர்களாக இருந்து கைகளால் எழுதி படியேடுத்துக் கொண்டும் அச்சுபாளமுறையை பயன்படுத்தி கொண்டும் இருந்தபோது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் ‘ஜோஹன் கூட்டன்பர்க்’ என்பவர் இயங்கக் கூடிய எழுத்துருவையும் (Movable Type) அச்சு இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.இவரது முறையைக் கொண்டு எழுத்து வடிவிலான ஏராளமான நூல்களை விரைவாகவும்,துல்லியமாகவும் அச்சடிக்க முடிந்தது அதன் பின்பு ஐரோப்பிய எழுத்துத்துறை மிக விரைவாக முன்னேறியது.
கூட்டன்பர்கும் நண்பர்களும் முதலில் அச்சடிக்கப்பட்ட பக்கத்தைப் பார்க்கின்றனர்.

எனவே எழுத்துத் துறையில் தொழிற்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.(சரி வரலாறு அப்படியே நிற்கட்டும்) இந்த தொடரின் முக்கிய நோக்கம்  தொழிற்நுட்பத்தை பற்றி அறிந்து கொள்வது அல்ல. அதனால் இனி எழுத்தாற்றல் சார்ந்த பிரச்சனைகளை பார்ப்போம்.

வெறுமனே தாளை நிரப்புவதற்காக மட்டும் எழுதாமல்.   'CAR' எனும் சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.


Creative = ஆக்கத்திறன்
Accurate = திருத்தம்
Result oriented = மிக முக்கிய அடிப்படையை கொண்டிருக்க வேண்டும்

எழுத்தாளர்கள் பொதுவாக விடும் சில தவறுகள்

1. தேவைக்கு அதிகமாக அல்லது தேவைகளை விட குறைவாக ஆராய்தலும் தரவுகளை சேகரிப்பதும்.

2.உள்ளடக்க விடயத்தை தவறான முறையில் ஒழுங்கமைப்பது.

3. முதலாவது பிரதியை மீளாய்வு செய்ய தவறுவது.

4. மிக நீண்ட சொற்களையும் வசனங்களையும் உபயோகித்தல்.

5. எழுத்தாளர் மையக் கண்ணோட்டத்தை எடுத்துரைப்பது.

6. தவறான வாசகரை நோக்கி எழுத்தாக்கங்களைத் திசைப்படுத்துவது.

இவை தவிர இலக்கணம் மற்றும் எழுத்து நடை தொடர்பான கீழ்கண்ட தவறுகளும் ஏற்படுகின்றன.

1. அநாவசிய மிகைப்படுத்துதல்.

2. இடையறாது தொடரும் வாக்கியங்கள்.

3.அடிபட்ட சொற்றொடர்களும் அளவுக்கு மீறிப் பயன்படுத்திச் சலித்துப் போன வசனங்களும்.

4.கட்டமைப்பு இல்லாதிருத்தல்.

5.வழக்கில்லாத பண்டைய மொழிநடை.

6.குறைவுடைய முகவுரையும் முடிவுரையும்.

7.ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு தாண்டும்போது காணப்படும் குறைபாடுகள்.

இலக்கணம் எழுத்து நடைகளை பற்றி அறிந்து அத்துறைச்சார்ந்த ஆக்கங்களை முடிந்தவரை படித்து பயிற்சி எடுக்க வேண்டும்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம். 

இப்படிகளை அடுத்த தொடரில் (இறைவன் நாடினால்) பார்ப்போம்.

Tuesday, July 24, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?

  1. நோக்கம்
  2. பிரச்சினைகள்
  3. எழுவதின் செயல்முறைகள்
  4. திட்டமிடல் (Planning)
  5. முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
  6. மீள் பரிசீலனை செய்தல் (Revising)
  7. எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
  8. எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
  9. உதவிக் குறிப்புகள்

கற்பதின் நோக்கங்கள்

(இவ்வத்தியாயத்தைக் கற்று முடித்த பின்னர் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

1.சிறந்த முறையில் எழுதுவதற்குரிய அடிப்படை அம்சங்களை அடையாளம் காண்பது.

2. மேலும் பயன்மிக்கதாக எழுதுதல்

3.பிறரது எழுத்தாக்கங்களை,பதிவுகளை விமர்சன ரீதியாகத் திறனாய்வு செய்தல் )

1.நோக்கம்

எழுதுதல் என்பது ஒரு பன்முகத்தனமை கொண்ட ஒரு கருவியாகும். பிறருக்கு தகவல் வழங்கவும், அவர்களை அறிவுறுத்தி இணங்கச் செய்வதற்கும்,உற்சாகமூட்டி உணர்வூட்டுவதற்கும்- ஏன் மற்றவர்களைப் பயமுறுத்துவதற்கும்கூட- நாம் எழுத்தைப் பயன்படுத்துகிறோம்.நன்றாக எழுதுவது முக்கியமானதாகும் ஏனெனில், எழுத்துக்களுக்கு பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு.

1. எண்ணங்களுக்கும் தகவல்களுக்கும் நிரந்தர வடிவம் தருகிறது. இதனால் அவற்றை உசாத்துணைக்காகவும் பிரதியெடுப்பதற்காகவும் எளிதில் பயன்படுத்தலாம்.

2. அதனுள் அடங்கியுள்ள செய்திக்கு ஏற்ப பிறரைச் செயலாற்ற செய்கிறது.

3. எழுத்தாளரின் சிந்தனைகளைப் பிரதியெடுக்கவும்,அதிகமானோருக்குப் பரப்பவும் முடியும் என்பதால் அவரது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

4.புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகளைத் திருத்தமான விதத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்போரை வழிநடத்தி நெறிப்படுத்துகிறது.

5.வாசகருக்கு செவிவழிச் செய்திகளாக இல்லாமல் எழுத்தாளரை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையும் ஆதாரப்பூர்வத் தன்மையும் ஏற்படச் செய்கிறது.

6.தெரிவுகளை அல்லது செயற்பாட்டுக்கான வழிமுறைகளைத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் எடுத்துரைப்பதனால் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

7. ஒரு விடயத்தை பிரச்சாரம் செய்ய பயன்மிக்க வழிமுறையொன்றாக திகழ்கின்றது.

பிறருடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான கருவி என்கிற முறையில் எழுத்தாற்றலானது பயிற்சியின் மூலம் கூர்மையடைய செய்ய வேண்டும். நமது எழுத்தாக்கங்கள்,பதிவுகள் தெளிவானதாகவும் திருத்தமானவையாகவும் மட்டுமின்றி,விளங்கக் கூடியவைகளாகவும் விருப்பத்திற்குரியவைகளாகவும் அமைய வேண்டுமாயின் சரியான பொருளடக்கத்தையும், சொற்களையும் நாம் தெரிவு செய்து கொள்வது முக்கியமாகும்.

(இறைவன் நாடினால் அடுத்த தொடரில் பிரச்சினைகளும், எழுதுவதின் செயல்முறைகள் இவைகளை பார்ப்போம் தொடரும் )

Saturday, July 7, 2012

சாகடிப்போம் சாதி வெறியை

தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிவெறியின் உண்மை முகத்தை அமபலப்படுத்தி நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த போது நிறைய நண்பர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் அப்படியா? உண்மையா? இன்னுமா சாதிவெறி இருக்கிறதா? என்று கேட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த சாதிவெறியால் பாதிக்கப்பட்டவன் என் நெருங்கிய நண்பன். அதை வாசிக்க இங்கே அழுத்தவும்.


இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது பி.பி.சி. செய்தியில் வெளியான ஒரு சம்பவத்தை பகிர்கிறேன் பாருங்கள்.


விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.

இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

“இப்பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, கிராம மக்களின் விருப்பத்திற்கிணங்க அவ்விரு பெண்களையும் வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து, இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது அரசு” என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.

மேலும், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை” என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார் சாமுவேல்.



என்றுதான் ஒழியுமோ இந்த சாதி. ஆதிகால சித்தர் கோபமாக இப்படி பாடினார்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்?
சாதாரண பலைவனத்தில் வாழ்ந்த அரேபிய பழங்குடி காட்டரபிகள் அன்றைய பெரும் வல்லரசாக இருந்த பாரசீக,ரோம் சம்ராஜியத்தை வீழ்த்திய காரணம் என்ன தெரியுமா?? இதுபோன்று நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களை இஸ்லாம் இணைத்திருந்தது.
அரேபிய வரலாற்று ஆசிரியர் ‘தபரி’ எழுதுகிறார்: பாரசீக மன்னன் ரூஸ்தமை சந்திக்க சென்ற அரேபியத்தூதராக சென்ற ‘மூகிரா’ பாரசீகத் துருப்புகளின் அருகே சென்றதும் ருஸ்தமைச் சந்திப்பதற்கு முன் அனுமதி பெறுவதற்காக அவர் நிறுத்தப்ப்ட்டார்.மூகிரா அங்கே (அதாவது ருஸ்தமின் சபைக்கு) போய்ச் சேர்ந்தபோது பொன்இழைகளால் செய்யப்பட்ட அழகான உடை அணிந்த பாரசீகர்களைக் கண்டார்.
அவர்கள் தலையில் கீரிடங்கள் அணிந்திருந்தார்கள்.சிறிது தூரம் வரை கம்பளங்கள் விரித்திருந்தார்கள்.வருபவர் அந்த தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது. ‘மூகிரா பின் ஷோபா’ அங்கே சென்றபோது, ருஸ்தாமின் சிம்மாசனத்தின் மீது இருந்த இருக்கை மெத்தை மேல் அமர்ந்தார். சிலபேர் ஒடிவந்து அவரைக் கிழே இழுத்து விட்டார்கள்.
மூகிரா சொன்னார்: நங்களெல்லோரும் உங்களுடைய விவேகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் உங்களை விட அதிக முட்டாள்தனமான மக்கள் இல்லை என்பதை நான் இப்போது காண்கிறேன். அரேபியர்களான நாங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். நாங்கள் போரில் தவிர யாரையும் அடிமையாக்குவதில்லை.எனவே நீங்களும் அதே போல அனுதாபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர்,உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்.