Wednesday, October 31, 2012

அமீருக்கு கல்யாணம்

புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.


இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடித்து வைக்கப்பட்டது.

அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.

அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.
அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போய்விட்டது.

18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.

14 வருட அநியாயச் சிறைவாச வேதனையை தன் முகத்தில் புதைத்து, வெற்றிகரமாக மறைத்து மலர்ந்த முகத்துடன், புன்சிரிப்புடன் ஆமிர் தனது திருமணத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

மொத்த சமுதாயமே உதறித் தள்ளிய வேளையில் மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி அவரை அரவணைத்து தன் டெல்லி அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அமீரின் திருமணத்தில் கலந்துக் கொண்டு மகிழ்வித்த அவரையும், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வஞ்சிக்கப்பட்டு இப்போது வாழ்வை தொடங்கியிருக்கின்ற அமீரை வாழ்த்துவோம் வாருங்கள்.

Tuesday, October 30, 2012

மாற்று திறனாளி : பார்வையற்ற போராளி.!

நபித்தோழர்கள் வரலாறு : அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.


உலகின் முதல் இஸ்லாமிய அரசு (யத்ரிப்) மதீனாவில் நிறுவப்பட்டது. தூய்மையான, நன்மை மிகுந்த, அமைதியான சமூகம் நிலைபெற்றது...!


பள்ளிவாசல், மார்க்கெட் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறுவிய அண்ணலார் (ஸல்) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த பொறுப்பை வழங்கினார்.

என்னதெரியுமா?


நாள்தோறும் ஐவேளையும் இறைவனின் புகழ்பாடி, வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே எனப் பிரகடனம் செய்து, சத்தியத்துக்குச் சான்று பகர்ந்து, இறைவனின் அடியார்களை இறையில்லத்தின் பக்கம், தொழுகையின் பக்கம், வெற்றியின் பக்கம் அழைக்கும் உன்னத பொறுப்பு அது...!


ஆம். முஅத்தின் என்கிற பெருமைமிக்க, சிறப்பான, கண்னியமான பொறுப்பு அது. அந்தப் பொறுப்பு தமக்கு கிடைக்காதா என பெரும் பெரும் தோழர்களும் ஏக்கத்துடன் இருந்த நேரத்தில் அந்த சிறப்புமிக்க பொறுப்பை அடிமையாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, ஏற்றம் பெற்ற பிலால் (ரலி) அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) வழங்கினார் என்பது நான் அனைவரும் அறிந்த உண்மை.
பிலால் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமித்து பார்வையற்றவர் மீதான ஏளனப் பார்வையை திருத்தியமைத்தார்கள்.

பிலால் (ரலி) அவர்களும் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களும் இந்த மகத்தான பணியை பகிர்ந்து கொண்ட பாங்கும் அலாதியானது. மதீனத்து மக்களை தொழுகைக்கு வருமாறு வெண்கலக் குரலில் அழைப்பார், பிலால் (ரலி). இறையச்சமும், நேசமும் ஏக்கமும் கலந்த அழைப்பு அது..!

இவ்வாறு தொழுகையாளிகள் சேர்ந்து விடும்போது, கணீர் குரலில் ‘இகாமத்’ சொல்வார், இப்னு உம்மு மத்தூம். கொஞ்சம் மனக்கண்ணில் அந்தக் காட்சியை இருத்திப் பாருங்கள்..!

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இமாமாக தொழுகைக்குத் தலைமையேற்று நிற்க, இந்த மாநிலம் கண்ட மகத்தான மனிதர்கள் அவருக்குப் பின்னே தொழுவதற்காக நிற்க, ‘தொழுகை நிலை பெறுகிறது’ என அறிவிக்கிறார் இப்னு உம்மு மக்தூம்...! ஆஹா! அதனை விட நற்பெறு, அருள்வளம் வேறு உண்டா?

சில சமயம் அப்துல்லாஹ் இப்னு மக்தூம் மக்களை தொழுகைக்கு அழைப்பார். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொல்வார்கள். ரமளானின் போது அவர்களிருவரும் சிறப்பு வழக்கத்தைக் கடைப்பிடித்தனர். ஒருவர் ஸஹர்  செய்வதற்காக நேரம் நெருங்கி விட்டதாக அறிவிப்பார். மற்றவர் ஃபஜர் தொழுகைக்கான பாங்கை விடுப்பார். பிலால் (ரலி) அவர்கள் மக்களை ஸஹருக்கு எழுப்புவார். அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அழைப்பு விடுப்பார்கள்.
முஹம்மது நபி (ஸல்) மதீனாவை விட்டு எங்காவது செல்லும் போது சில சமயம் மதீனாவில் தம்முடைய கலீஃபாவாக அப்துல்லாஹ் இப்னு மக்தூமை நியமிப்பார்கள் இவ்வாறு பத்து முறை பெறுப்பேற்றுள்ளார்கள். மக்கத்து வெற்றியின் போதும் கூட அவர் மீது இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பத்ருப் போர் முடிந்ததும் அறப்போரில் ஈடுபடுவது குறித்து ஒரு வசனம் அருளப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விடுபவர்களை விட (காயிதீன்) போரில் ஈடுபடும் போராளிகள் (முஜாஹிதீன்) சிறந்தவர்கள் என அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது. இறைவழியில் போரிடுவதை ஊக்குவிப்பதற்காகவும், ஊற்சாகமூட்டுவதற்காகவும், வீட்டில் தங்கி விட்ட காயிதீன்களை உசுப்பி களத்தில் குதிக்கத் தூண்டும் விதத்திலும் அந்த வசனம் இருந்தது.

இந்த வசனத்தை கேட்டதும் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமின் முகம் வாடி விட்டது முஜாஹிதீன்களுக்கு கிடைக்கும் உயர் சிறப்பு தமக்குக் கிடைக்காமல் போகின்றதே என அவர் மனம் வெதும்பினார். உடனே நபிகள் நாயகத்திடம் விரைந்தார் : “இறைத்தூதரே! என்னால் போரிட முடியும் எனில், நான் நிச்சயமாக போர் புரிவேனே...! என்றார். தம்மைப் போல பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் போர்களில் கலந்து கொள்ள இயலாதவர்களின் நிலை என்ன? அது குறித்து தெளிவுபடுத்தி வசனம் அருளுமாறு இறைவனிடம் மன்றாடினார்.

இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஊனமுற்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கிற வகையில் சில வசனங்கள் அருளப்பட்டது.அது பின்வருமாறு

ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.(திருக்குர்ஆன் 4:95)

அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்கும் அறப்போர் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் துளிர்த்தெழுந்தது. இறைவனிடம் மன்றாடி அறப்போர் பற்றிய வசனத்தில் விதிவிலக்கு பெறத்தான் செய்தார். என்றாலும் அவருக்குள்  அறப்போர் மீதான ஆசை கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. பார்வையற்றவரான அவரால் போர்க்களத்தில் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கேள்வியும் அவருக்குள் திரும்பத் திரும்ப எழத்தான் செய்தது.

என்றாலும் தோழர்கள் எல்லாரும் போர் புரியப் போகும் போது தாம் மட்டும் வீட்டில் தங்கி இருப்பதா? என்கிற கேள்வி அவரை வாட்டியது. மகத்தான நிகழ்வுகள் கண் முன்னால் அரங்கேறும் போது, வரலாற்றில் மைல்கற்களாக இருக்கக் கூடிய தருணங்கள் கண் முன்னாலேயே கழியும் போது அவரால் வாளாயிருக்க முடியவில்லை.

யோசித்து யோசித்து ஒரு தீர்வு கண்டார், அவர். இனி ஒரு போரிலிருந்தும் விலகி இருக்க மாட்டேன் என உறுதி பூண்டு அண்ணலாரிடம் ஒடோடிச் சென்றார். “ என்னை இரண்டு வரிசைகளுக்கு நடுவே நிறுத்தி, என்னிடம் கொடியை கொடுத்து விடுங்கள். நான் நம் அணியின் கொடியை உயர்த்திப் பிடிப்பேன். பாதுகாப்பேன். எனக்கு பார்வை கிடையாது என்பதால் நான் எங்கும் ஓடிப் போய் விட மாட்டேன்” என்பார்.

ஹிஜ்ரி பதினான்காம் ஆண்டில் பாரசீகர்கள் மீது மிகப்பெரும் போர் தொடுக்க முடிவு செய்கிறார், உமர் (ரலி). இதையோட்டி ஆளுநர்களுக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்புகின்றார். உமர் (ரலி) அவர்களின் அழைப்பை ஏற்று சாரி சாரியாக நாலா புறங்களிலிருந்தும் மக்கள் மதீனாவில் குவியத் தொடங்கினார்கள். அறப்போர் செய்கின்ற ஆர்வத்துடன்,ஷஹீத் ஆகிற ஆசையுடன் அணி திரண்ட போராளிகளை வரிசையில் ஒரு பார்வையற்ற முஜாஹிதும் இருந்தார். அவர்தான் அப்துல்லாஹ் இப்னு மக்தூம்.

இந்தப் படைக்குத் தளபதியாக சஆத்இப்னு அபி வக்காஸ் அவர்களை நியமித்தார், உமர் (ரலி). படையினருக்கு முக்கிய வழிகாட்டுதல்களைக் கொடுத்து, வாழ்த்தி, பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.

 இந்தப் படை காதிஸியாவை சென்றடைந்த போது போர்க்கவச ஆடை அணிந்து மிடுக்காகவும் எடுப்பாகவும் தெரிந்தார், அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம். முஸ்லிம்களின் கொடியை கையில் ஏந்திச் செல்வேன். எந்நிலையிலும் அதனை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன்  என் சபதம் செய்திருந்தார், இப்னு உம்மு மக்தூம்.

போர்க்களத்தில் இரண்டு அணிகளும் மோதின. மூன்று நாட்கள் தொடர்ந்து போர் நடந்தது. முஸ்லிம்கள் பங்கேற்ற போர்களிலேயே மிகவும் கடினமான,தீவிரமான போர்களில் ஒன்றாக அது வரலாற்றில் இடம் பெற்றது. மூன்றாவது நாள் முடிவதற்குள் முஸ்லிம்கள் வெற்றிப் பெற்று விட்டனர். அன்றைய வல்லரசு வீழ்ந்தது. ராணுவ பலம் வாய்ந்ததாக போற்றப்பட்ட பராசீக அரசு சரிந்தது.

இதற்கு விலையாக நூற்றுக்கணக்கான போராளிகள் இன்னுயிர் ஈந்து தியாகம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவராக இப்னு உம்மு மக்தூம். போர்க்களத்தில் கைகளில் இஸ்லாமியக் கொடியை உறுதியாகப் பற்றிப் பிடித்தவாறு கிடந்த அவரது முகத்தில் புன்னகை...!

சுவனத்து தோட்டங்களையும், சலசலவேன ஓடுகிற நதிகளையும் கண்டதால் மலர்ந்த புன்னகையோ...!

Monday, October 15, 2012

ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்

முன்குறிப்பு: ஹாலிவுட்டை பற்றி பதிவு எழுதாதவர் எல்லாம் ஒரு பதிவரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

ஓடு, ஓடு, மிருகம் வேற துரத்துது மழை வேற பேயிது காரு வேற கிடைக்கலே ஓடு, ஒடு. கொட்டாம்பட்டி சினிமா கொட்டாய் வரை அமெரிக்கத் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜுராஸிக் பார்க்” ‘தி லாஸ்ட் வேர்ல்ட். திரைப்படத்தில் வரும் அருமையான வசன வரிகள்.

உங்களுக்கு தேவை  திறமையான பொறியியலாளர், யாரும் நினைத்திராத உருவங்களை வடிக்கும் கணிப்பொறி வல்லுநர், இந்த ஊடகத்தைப் புரிந்து கொண்டு திரைக்கதை வார்க்கும் படைப்பாளி - இது போதும், உலகம் உங்கள் வசப்படும்; ஆயிரம் கோடி டாலர் உங்கள் கூரையைத் துளைத்துக் கொண்டு கொட்டும்” என்கிறார், ஹாலிவுட் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்’ செய்து கொடுக்கும் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் அதிபர்.
நீல வானத்தை பார்த்து விட்டும், அடர்ந்த கானகத்தின் இருளில் பயந்தவாறும் நடித்து விட்டு, நடிகர்கள் போய் விடுவார்கள். வானத்தில் செவ்வாய்க் கிரகம் வெடிப்பதையும் காட்டிற்குள் டயனோசர் விழிகளை உருட்டுவதையும் கணிப்பொறி மூலம் உருவாக்குகின்ற டிஜிட்டல் - ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் வல்லுநர்கள்தான் இன்றைய ஹாலிவுட்டின் நட்சத்திரங்கள்- நடிகர்களல்லர்.

ஹாலிவுட் ஃபார்முலா


காதல், குடும்பம், கிராமம், பழிக்குபழி, சகோதர பாசம், தேசபக்தி போன்ற 9 ஃபார்முலாக் கதைகள் மட்டும் தமிழ் திரைப்படங்களில் உலவுவதாகச் சொல்வார்கள். ஹாலிவுட் படங்களும் கிட்டதட்ட அப்படித்தான்.நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வில்லனை வீழ்த்தும் கெளபாய், பெல்ட்டில் தொலைபேசி - பேனாவில் துப்பாக்கி - முதல் பார்வையிலேயே எந்தப் பெண்ணையும் படுக்கையில் வீழ்த்தும் ஜேம்ஸ்பாண்ட், சிலந்தி மனிதன் - வெளவால் மனிதன் -சூப்பர் மேன் போன்ற சின்னபுள்ளையில் படித்த காமிக்ஸ் நாயகர்கள். மாஃபியா அல்லது தீவிரவாதியை வென்று அமெரிக்கா தர்மம் காக்கும் போலிஸ் - இவையெல்லாம் ‘ஆக்‌ஷன்’ படங்கள்.

சுடுகாட்டு,கல்லறைப் பேய், டி.வி. பிசாசு ஷைத்தான்,உருகும் மனிதன், டிராகுலா, வண்டாக, கொசுவாக, சிங்கமாக - கழுதையாக மாறும் மனிதன்,கொடூரக் கொலையாளிகள் போன்றவை திகில் படங்கள்.இயந்திர மனிதன், வேற்றுக் கிரக வாசிகளுடன் நட்பு - போர் டயனசோர்,எலியன்ஸ், எந்த காலத்திலும் சென்று வரும் தற்கால மனிதன், விண்வெளிச் சாகசங்கள் - போன்றவை ‘அறிவியல்’ படங்கள்! மீதி - குடும்பம், காதல், நகைச்சுவை, பாலுணர்வு போன்றவை ‘செண்டிமெண்ட்’ படங்கள், இறுதியாக மேற்கண்ட அனைத்திலும்  இழையோடியோ அல்லது தனிச்சிறப்பாகவோ எடுக்கப்படும் கம்யூனிச எதிர்ப்புப் படங்கள், வெளிப்படையாக வெறித்தனமாக எடுக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படங்கள் இவைதான் ஹாலிவுட் ஃபார்முலா.

தொழில்நுட்பமே கலையாக!


அமெரிக்காவின் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மாளிகை’ என்றழைக்கப்படும் ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மேஜிக்’ எனும் நிறுவனத்தின் அதிபர் ஜார்ஜ் லூகாஸ். 77 லிருந்து இவரால் வெளியிடப்பட்ட ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைப் படங்கள் ஹாலிவுட்டிற்குப் புதிய திசை வழியைக் காட்டின. இதன் பின்னர் வந்த ஸ்டார் ட்ரெக், யங் ஷெர்லாக் ஹோம்ஸ், தி அபீஸ் போன்ற படங்களில் முதன்முறையாகக் கணிப்பொறி கிராஃபிக்ஸ் முப்பரிமாண  டிஜிட்டல் முறை மூலம் காட்சிகளும், பாத்திரங்களும் உருப்பெற்றன. படத்தொகுப்பில் புதுமையையும், ஒலி - ஒளிச் சேர்க்கையில் துல்லியத்தையும் - வேகத்தையும் கொண்டு வந்தது அவிட், லைட் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் ‘டிஜிட்டல் எடிட்டிங்’ என்ற புதிய முறை. இதற்காகவே திரையரங்கில் பொருத்தப்பட்ட புதிய ஒலி உபகரணங்கள் பார்வையாளர்களை மயங்க வைத்தன.


‘ ஜாஸ் வரிசைப் படங்களில் மனிதர்களை வேட்டையாடும் சுறாமீனைப் படைத்தபோது ஸ்பீல்பெர்க்கின் வயது இருபத்தேழு. 23 வருடங்கள் கழித்து அவரது படங்களில் வேட்டையாடும் டயனசோர்தான் கடந்த இடைக்காலத்தில் கலைத்துறையில் அவர் கண்ட பரிணாம வளர்ச்சி.

கற்பனை உருவங்கள், இயற்கை, கனவுகளுக்குப் பொருத்தமான குழந்தைகள் ஸ்பீக்பெர்க்கின் படங்களில் தவறாமல் இடம்பெறுவர். ‘முன்னேறிய மேற்குலக நாகரிகத்தின்’ பார்வையில் மூன்றாம் உலகம் காட்டு வாசிகளாய் இருப்பதால் விரக்தியுற்ற தனது அமெரிக்கக் குழந்தைகளுடன் நட்பு கொள்ளும் தகுதியை வேற்றுக் கிரக வாசிகளுக்கு அளிக்கிறார் போலும் ஸ்பீல்பெர்க்! டயனசோரையும், வேற்றுக் கிரக வில்லன்களையும் வீழ்த்திக் காட்டும் அமெரிக்காவை உலகின் விடிவெள்ளியாகவும், லட்சிய நாடாகவும் மூன்றாம் உலகிற்குக் காட்டுகின்றனர் ஸ்பீல்பெர்க்கும், ஏனைய ஹாலிவுட் இயக்குநர்களும்.

நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நல்லது வெல்ல வேண்டும் என்ற அவா, திரையரங்கில் அமெரிக்க ஹீரோக்கள் வில்லனை வீழ்த்தும்போது கைதட்டுகின்றது. இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள். ஆமெரிக்கா நன்மையின் பிரதிநிதிகளாக ஆர்னால்டு,ஹாரிசன் ஃபோர்டு, புரூஸ் வில்லிஸ், சில்வஸ்டர் ஸ்டல்லான், மெப்கிப்ஸன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்.

ஒரு படத்தில் எத்தனை நபர்களைக் கொல்கிறார்கள் என்பதை வைத்து இவர்களின் நட்சத்திர அந்தஸ்து உருவாகிறது. நாயகனின் போராட்டத்திற்கு நீங்கள் தார்மீக ஆதரவளிக்க, கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காட்சியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டுவெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

கனவும் நனவும்


கார் சவாரி கூடக் கைகூடாதவர்களை விண்கலத்தில் ஏற்றி வெளியை ஊடுருவி வலம் வரும் வண்ணமயமான விண்வெளி அனுபவம் தாலாட்டுகின்றது. படம் முடிந்து வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் பன்னும்போது அல்லது பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் பெட்ரோல் விலை உயர்வும், கட்டண உயர்வும் நினைவுக்கு வருகிறது. அழகான மாந்தார்கள், எழிலான இருப்பிடம், உல்லாச வாழ்க்கை என்று ஹாலிவுட் சித்தரிக்கும் சராசரி அமெரிக்க வாழ்க்கையானது மூக்கு வழியும் குழந்தைகளையும், சமையல் பாத்திரம் கழுவும் பெண்களையும் வியர்வையில் நாறும் ஆண்களையும் கொண்ட நமது நரக பூமியை நினைத்து வெட்கப்பட வைக்கிறது; வெறுக்க வைக்கிறது. கணிப்பொறியில் உயிர்பெற்றுவரும் விதவிதமான கொடூர வில்லன்கள் ஏற்கனவே விதியை நொந்து வாழும் நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தன்னிரக்கம் எனும் புதிய பரிமாணத்தை சேர்க்கின்றனர்.


அவர்களுடைய நாகரீகத்தின் சின்னங்களான பெப்சியும், கோக்கும் நம் நாட்டின் பெட்டிக்கடை வரை வந்து மதுரை மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா கம்பெனியையும், காளிமார்க் போன்றவற்றையும் அடித்து நொருக்கி விட்டது. இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம்.டி.வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என். என் -னும் ஓரளவு வீடுகளில் குதித்து விட்டன. தினசரி 4 காட்சிகள் மூலம் நிகழ்த்தப்படும் திரையரங்க அமெரிக்கக் கனவு, தனது பிரம்மாண்டத்தின் மூலம் மெல்ல மெல்ல மூன்றாம் உலக மூளையில் ஊடுருவுகிறது.

அதற்காகத்தான் தொழில் நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் ஒலி.ஹெச்டீ தரம். நம்மிடம் இருக்கும் சமூகத் தன்மையை உறிஞ்சி எல்லையற்று நுகரும் இயந்திரமாக மாற்றி, அதையே ரசனையாக, பண்பாக, வெறியாக மாற்றுவதற்குத்தான் அத்தனை முயற்சிகளும். 

Saturday, October 13, 2012

வெற்றியின் விலை என்ன?

வெற்றி என்பது என்ன? தெரு ஒரத்தில் குச்சிநட்டு ஆடினான் அந்தச் சிறுவன். அதன் பின் டெண்டுல்கராக மாறினான். சன்னலே இல்லாத ஒரு குடிசை. அதில் வசித்தான் அந்த எழைச் சிறுவன். ஆரம்பத்தில் வெறும் 30 டாலர் சமபளம். நாளடைவில் 300 கோடிக்கும் அதிகமான  சம்பாத்தியம். இவர்தான் உலக கால்பந்தாட்ட ‘நம்பர் ஒன் ரொனால்டோ’. பசி பட்டினியோடு வாழ்ந்தான் அந்த இளைஞன். மின்விளக்கு வசதி இல்லை. மண்ணெண்ணெய் விளக்கேற்றிக் கூட படிக்க முடியாத வறுமை. தெருவிளக்கில் படித்தான். வழக்குரைஞராக, நீதிபதியாக வாழ்வில் உயர்ந்தான். தனது உயர்வுக்கு அடையாளமாக இன்றளவும் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை உருவில் நிற்பவர் முத்துசாமி.

. இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைய முயல்வதே வெற்றி.

. 100 விழுக்காடு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு 150 விழுக்காடு முயற்சியை மேற்கொள்வது.

. உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை... பேராற்றலைத் தட்டி எழுப்புவது.

. சந்தர்ப்பங்களுக்காக காத்திராமல்... மாவீரன் நெப்போலியன் போல சந்தர்ப்பங்களைத் தாமாகவே உருவாக்கிக் கொள்வது.

. உண்மையில், வெற்றி என்பது ஒரு இடைவிடாத ‘இயக்கம் Process' விதைகளை விதைக்கும் செயல். விதையிலிருந்து மரம். மரத்திலிருந்து மீண்டும் விதை என்று தொடரான இயக்கம்.

நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதும் தனது அறிவை வளர்த்துக் கொள்வதும் மாணவனின் வெற்றி. நோயாளிகளின் உயிரைக் காத்து ‘ராசிக்காரர்’ என்று பெயரெடுப்பது மருத்துவரின் வெற்றி. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது வழக்குரைஞரின் வெற்றி. அதே போல, தன் உற்பத்திப் பொருளைச் சந்தையில் தரத்துடன் நிலை நிறுத்துவதும், தனது நிறுவனத்தை உலகச் சந்தையில் முன்னணியில் நிறுத்துவதும் ஊழியர்களின் வெற்றி.

“ எனக்கு அதிகமாகத் தேவைப்படுபவர் யார் என்றால்... என்னால் இயன்றைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்!” என்றார் அமெரிக்க அறிஞர் எமர்ஸன்.

நம்மைச் சுற்றியும் எத்தனை மனிதர்கள்! சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதுடையவர்கள், முதியவர்கள் என்று எத்தனை மனிதர்கள்! இவர்களுக்கு தங்கள் லட்சியம் எது என்று தெரியவில்லை அதற்கான விழிப்புணர்வும் இல்லை. அதனால் தான், அவர்களின் அளவிட முடியாத ஆற்றல்கள் உறங்கிக் கிடக்கின்றன.

நடுவயதைக் கடந்த எத்தனையோ பேர் அதன் பிறகு பேரறிஞர்களாக... தொழில் வல்லுநர்களாக வளர்ந்ததை வரலாறுகள் கூறுகின்றன. அதற்கு உந்துகோலாக இருந்தது எது? அது ஒரு சொற்பொழிவாக இருக்கலாம். ஒரு புத்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு நண்பரின் தனிப்பட்ட அறிவுரையாகவும் இருக்கலாம்.

50.000 குழந்தைகளை 30 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த வல்லுநர்களின் முடிவு - “ பிறந்த குடும்பம் - கோத்திரத்தை விட சூழ்நிலைகளும், சுற்றுச் சார்புகளும் சக்திமிக்கவை; குழந்தைகளை அதிகமாக பாதிப்பவை.”

ரஸ்கினுடைய நூலைப் படித்ததும் பீச்சர் ஒரு மனிதாரய் ஆனார். தோல்வி அடைந்தவர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்... அவர்கள் பெரும்பாலோரின் தோல்விக்குக் காரணம் அவர்களை ஊக்குவிக்க யாரும் இல்லாததே காரணம் என்று அறிய முடியும். அதனால்,

. உங்களை ஊக்குவிக்கும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கே எப்போதும் ஆயத்தமாக இருங்கள்.

. உங்களை அறிந்து உங்களுக்கு உதவி செய்யும்... நீங்கள் முழு மனிதர்களாக மாற உற்சாகமூட்டும் மனிதர்களுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

. உங்கள் பதிவுகளை உங்களுக்குப் பிறகும் இந்த மண்ணுலகில் விட்டுச் செல்ல உதவுபவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

உண்மையில், ஆர்வமானது தொற்று நோயைப் போன்றது. நீங்களும் முன்னேறத் துடிப்போருடன் இருக்கும் காலம் வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கு சோம்பல் ஏற்படும் போதேல்லாம் முன்னேறிச் செல்பவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கான உரைகல் இதுதான் :  ‘ஒவ்வொருவரும் தத்தமது பணிகளின் மேல் கொள்ளும் கொழுந்து விட்டெரியும் ஆவல்தான்!’

. வேண்டா வெறுப்பாக... முக்கி முணகிக் கொண்டு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பணிபுரியும் ஒருவர் இறைவன் அவனுக்களித்த வாய்ப்பை நிராகரிக்கிறார் என்றுதான் பொருள்

. யாரொருவர் தனது வேலையை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பேணுதலுடன், ஆர்வத்துடன் மதித்து செய்கிறாரோ அவர் வாழ்வில் முன்னேறத் தொடங்கி விட்டார் என்றே பொருள்.

. நம்முடைய துறைசார்ந்த அல்லது தொழில் எதுவானலும் அதில் நமக்கு போட்டியாளர்கள் இருப்பது மிகவும் நல்லது அப்படி இல்லையென்றால் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இறுதியாக

உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்

Thursday, October 11, 2012

அத்தனை கேஸும் முத்தின கேஸ்!

நேற்று பேப்பரில் ஒரு பயங்கரச் செய்தி: நம் கையிலுள்ள மொபைல் போனில் ஏராளமான பாக்டீரியாக் கிருமிகள் அப்பிக் கொண்டிருக்கிறதாம். ஒரு சராசரி மொபைல் போனில் வசிக்கும் கிருமிகளின் எண்ணிக்கை, நம் டாய்லெட் ஸீட்டில் இருப்பதை விட அதிகமாம்! ‘சேச்சே, இனி ஃபோனைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பேச வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படு பயங்கரச் செய்தி: நம் கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிருமிகள், டாய்லெட் ஸீட்டில் இருப்பது போல ஐந்து மடங்காம். கீ போர்டைத் தொட்ட விரல்களால் நாக்கில் எச்சில் தொட்டுப் புத்தகம் புரட்டினால் ஃபுட் பாய்சனிங்தானாம். இந்த வயிற்று வலிக்கு க்வெர்ட்டி டம்மி என்று அமெரிக்கத்தனமாக ஒரு பெயர் வேறு வைத்திருக்கிறார்கள்.
அடுத்ததாக ஏதாவது ஒரு பத்திரிகையில், டாய்லெட் ஸீட்டை விட அதிகமான கிருமிகள் நம் டூத் ப்ரஷ்ஷில் இருப்பதாக எழுதிவிடப் போகிறார்களே என்று கவலையாக இருக்கிறது. அப்படி ஏதாவது செய்தி கண்ணில் பட்டால் உடனே நான் முற்றிலும் நிறுத்திவிடுவேன் - பல் தேய்ப்பதையா, பத்திரிகை படிப்பதையா என்பதை மட்டும்தான் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஏற்கனவே இப்படி ஒரு முற்றுகைச் சூழலில் மனிதன் வசிக்கும்போது, மனோதத்துவ டாக்டர்களிடமிருந்து மற்றொரு மகா பூச்சாண்டி: குழந்தைகள் பலூன் வாங்கித்தரச் சொல்லி அடம் பிடிப்பது முதல், உபரியாக நாலு மிளகாய் பஜ்ஜி தின்றுவிட்டு அஜீரணத்தில் அவஸ்தைப் படுகிறோமே அது வரை, ஏறக் குறைய நம் தினசரி அலுவல்கள் அனைத்தையும் மனோ வியாதி என்றே அவர்கள் முத்திரை குத்திவிட்டார்கள்!
.அமெரிக்காவின் பைத்திய வைத்தியர்கள் கழகம் வெளியிடும் DSM எனப்படும் புத்தகம், மன நோய்களைப் பற்றிய பைபிள் என்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது. வியாதிகளின் வர்ணனை, விவரங்கள், எப்படி எடுத்துச் சொன்னால் பேஷண்டைப் பயமுறுத்தலாம் என்று சகல தகவல்களும் அடங்கிய புத்தகம். இதன் வெளிவர இருக்கும் ஐந்தாம் பதிப்பில் ஏகப்பட்ட புதிய வியாதிகள் சேர்க்கப்படவிருக்கின்றன.
உதாரணமாக, பரீட்சை ஹாலுக்குள் நுழையும்போது வரும் படபடப்புக்கு ‘மைல்ட் ஆங்ஸைட்டி டிப்ரஷன்’ என்று பெயராம். காதலனுடன் சண்டை போட்டுக்கொண்ட இளம் பெண் மனச் சோர்வு அடைந்து, இறுகிய முகத்துடன் பார்க்கில் உட்கார்ந்து புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போடுவது, கடைசியில் அந்த ராஸ்கல் செல்போனில் கூப்பிடும்போது துக்கத்தில் பேச்சு வராமல் தடுமாறுவது - இதற்கெல்லாம் பெயர் ‘அட்டென்யுவேடட் சைக்காடிக் சிம்ட்டம்ஸ் சின்ட்ரோம்’. எல்லாவற்றையும் விட விசேஷமான வியாதி, ‘டெம்ப்பர் டிஸ்ரெகுலேஷன் டிஸார்டர்’ எனப்படுவது. இது வேறொன்றுமில்லை, மனிதனாகப் பிறந்தவனுக்கு சில சமயம் கோபம் வருகிறதே, அதுதான்!
Temparamental Control Disorder
இந்த மன நல பைபிளின்படி பார்த்தால் இனி உலகத்தில் யாருமே மன ஆரோக்கியத்தோடு இருப்பதாகச் சொல்ல இயலாது. கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், கார்டிஃப் பல்கலைக் கழகம் போன்றவற்றின் உளவியல் பேராசிரியர்களே இதைப் பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எல்லாரையும் சகட்டு மேனிக்குப் ‘பைத்தியம்’ என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தித் தள்ளிவிட்டால் அப்புறம் நார்மலான மனிதர்களின் எண்ணிக்கையே மிகச் சுருங்கிவிடும் என்கிறார்கள். பிறகு அவர்களை வெளியே விட்டுவிட்டு நாம் உள்ளே போய் அடைந்து கொள்ள வேண்டியதுதான்!
ஏதோ புத்தகத்தில்தானே எழுதியிருக்கிறார்கள், எழுதிவிட்டுப் போகட்டுமே என்று இதை விட்டுவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள்தான் எதிர்காலத்து மாஃபியா. ஏனெனில் ஆஸ்பத்திரிச் செலவுகள் எல்லாம் கேத்தன் தேசாய்க்கு மட்டும்தான் இனி கட்டுப்படி ஆகும். இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப் போனால் நமக்கு பைல்ஸ் உண்டா, சர்க்கரை வியாதி உண்டா என்று ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு, கடைசியில் ‘உனக்குக் கோபம் வருவதுண்டா ?’ என்று கேட்பார்கள். ஆமாம் என்று சொன்னால் போச்சு - டெம்ப்பரமண்ட்டல் கண்ட்ரோல் டிஸார்டர் என்று முத்திரை அடித்து ப்ரீமியத்தை ஏகத்துக்கு ஏற்றிவிடுவார்கள். தொடர்ந்து இன்ஷ்யூரன்ஸ் குடையின் கீழ் இருக்க வேண்டுமென்றால் அதற்கான சிகிச்சையை ஒழுங்காகச் செய்துகொள்ள வேண்டும். டிஸார்டரைக் கட்டுப்படுத்த தினம் மூன்று வேளை குழாய் மாத்திரைகள், ஒவ்வொன்றின் விலை ரூபாய் எண்பது!
இப்படியெல்லாம் பொது அறிவுக்குப் பொருந்தாத விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்பதை ஊகிப்பது எளிது. கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளும் ஃபார்மா கம்பெனிகளும் கூட்டுச் சேர்ந்துவிட்டால் தொழிலை விஸ்தரிக்க வேண்டும். அதற்கு, நோய்களை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. பேஷண்ட் வந்தார், மண்டையில் தட்டிப் பார்த்தோம், மருந்து கொடுத்தோம் என்று அனுப்பிவிட முடியாது. இன்ஷ்யூரன்ஸுக்காக ஆயிரத்தெட்டு படிவங்களை நிரப்பியாக வேண்டும். படிவத்தில் எழுதுவதற்கு ஒரு வியாதியின் பெயர் வேண்டுமே? அதற்காகத்தான் புதுப் புது வியாதிகளைக் கண்டுபிடித்துப் பெயர் சூட்டு விழா நடத்தியாகிறது.
‘வியாதி’ என்று வகைப்படுத்தினால்தான் நிறைய மருந்து எழுதிக் கொடுக்க முடியும். பிடிப் பிடியாக மாத்திரை எழுதிக் கொடுக்கும் போட்டியில் வென்றால்தான் டாக்டர் அங்க்கிள் குடும்பத்துடன் மொரீஷியஸ் தீவில் விடுமுறை அனுபவிக்க முடியும். விடுமுறையை ஸ்பான்சர் செய்வது யார் என்று சொல்லத் தேவையில்லை. (முன்னொரு காலத்தில் இவர்கள் ஒரு இலவச காம்பிஃப்ளாம் காலண்டர், பேனா ஸ்டாண்டுடன் திருப்தி அடைந்தார்களே?)
சைக்கோஸிஸ் ரிஸ்க் சிண்ட்ரோம் போன்ற பொத்தாம் பொதுவான வில்லைகளை சுலபமாக யார் கழுத்தில் வேண்டுமானாலும் மாட்டிவிடலாம். ஜலதோஷம் வந்தவர்கள் அனைவரையும் ‘நிமோனியாவாக இருக்கலாம், ஆஸ்பத்திரிக்கு வந்து படு’ என்று சொல்வது போலத்தான் இது. இந்த மாதிரி சைக்கியாட்ரிஸ்ட்களிடம் ‘ஏதோ மனது சரியில்லை’ என்று ஆறுதலுக்காக ஒரு முறை போய்விட்டால் போச்சு! உங்களுக்கு ஏதாவது ஒரு வகைப் பைத்தியம் என்று பட்டம் கட்டியே தீருவார்கள். இதெல்லாம் ஒரு முறை இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளின் தகவல் தளத்தில் பதிந்துவிட்டால் சுலபத்தில் அதை நீக்க முடியாது. அதை அவர்கள் யாருக்கெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அதன் பிறகு இன்ஷ்யூரன்ஸ் எடுப்பதும் கடினம், வேலை கிடைப்பதும் சிக்கலாகிவிடும்.
அதிக வியாதிகள் -> அதிக மருந்துகள் -> அதிக பேடண்ட்டுகள் -> அதிகப் பணம் -> அதிகம் பக்க விளைவுகள் -> இன்னும் அதிக வியாதிகள் என்று சக்கர வட்டமாகத் தன் வாலையே கௌவிக் கொண்டிருக்கும் மலைப் பாம்பு இது.
DSM என்பது உலகம் முழுவதும் பரவலாக மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகள், ஆராய்ச்சியாளர்கள் உபயோகிக்கும் கையேடு. சென்ற முறை இதில் குழந்தைகளின் புதிய வியாதியாக ADHD - அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிடி டிஸார்டர் - என்று ஒன்றைச் சேர்த்தார்கள். தம்பிப் பாப்பாவை அம்மா தூக்கிக் கொஞ்சும்போது அண்ணன்காரன் பொறாமையில் அழுது அடம் பிடிக்கிறானே, அதற்குத்தான் இப்படி ஒரு திகிலூட்டும் வியாதிப் பெயர்.
இதைப் படித்துவிட்டுப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ADHD வந்துவிட்டது என்று பதறிப் போய் டாக்டரிடம் ஓடினார்கள். ஒரு கால கட்டத்தில் ADHD என்பது தொற்று வியாதியாகவே ஊர் ஊராகப் பரவியது.
அடுத்து அமெரிக்க டாக்டர்கள் செய்ததை ……த்தனம் என்றே வர்ணிக்கலாம். குழந்தைகளின் ‘நரம்புகளை அமைதிப் படுத்துவதற்காக’ ரிட்டாலின், அட்டெரால், வைவென்ஸே போன்ற தீவிரமான மருந்துகளை, மை தீரும் வரை பிரிஸ்கிரிப்ஷன் எழுதித் தள்ளிவிட்டார்கள்! 2008-ம் ஆண்டில் இந்த மருந்துகள் அமெரிக்காவில் 480 கோடி டாலருக்கு விற்பனை ஆகியிருக்கின்றன. அமெரிக்கக் குழந்தைகள் மட்டுமே விழுங்கிய ரிட்டாலினைக் கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்தின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் எல்லா மனிதர்களும் விழுங்கியதைப் போல் ஐந்து மடங்கு.
இந்த மருந்துகளுக்கெல்லாம் மிக மிக ஆபத்தான பக்க விளைவுகள் இருக்கின்றன. ரிட்டாலினின் பக்க விளைவுகள் என்பதை விக்கி பீடியாவில் பார்த்தால் A முதல் X வரை சரம் சரமாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அட்டெரால் என்பது போதை மருந்துகளின் காக்டெயில்! இதையே யாராவது ரோட்டில் வைத்து விற்றால் கஞ்சா கேஸில் போலீஸ் பிடித்துப் போய்விடும். அதை ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ‘அடம் பிடிக்கும் வியாதி’க்காகக் கொடுத்திருக்கிறார்கள். வைவன்ஸே சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்ட குழந்தைகள் உண்டு.
சீனி மிட்டாய் கேட்டுக் குழந்தை அழுதால் அது ஒரு மன வியாதி. இல்லத்தரசி ஒருவர் ஏதோ கடுப்பில் வெண்கலப் பானையை ‘ணங்’கென்று இறக்கி வைத்தால் அது ஒரு வியாதி… இப்படிக் கண்டுபிடித்துக்கொண்டே போய்க் களைத்துப் போன மனநல மருத்துவர்கள் இப்போது மற்றொரு அருமையான வியாதி சொல்லியிருக்கிறார்கள்: ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது கூட ஒரு வகை மன நோயாம்.
orthorexia nervosa
உண்மை! விளையாட்டுக்குச் சொல்லவில்லை! இந்த வியாதிக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா’ என்று பெயர். இந்த நோய் பீடித்தவர்கள் கடலை எண்ணெய் சொட்டும் பக்கோடா சாப்பிட மாட்டார்கள். இனிப்பு, கொழுப்பு, உப்பு உறைப்பைக் கூடிய வரையில் தவிர்ப்பார்கள். டால்டா, மைதா, பிட்ஸா, பர்கர் எல்லாம் தள்ளுபடி. டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போனால் அட்டைப் பெட்டிகளின் மீது கடுகு எழுத்தில் எழுதியிருக்கும் கலோரிகளைப் படித்துப் பார்ப்பார்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள், கைக் குத்தல் அரிசி போன்றவற்றைத் தாமும் சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் கொடுப்பார்கள்… இதெல்லாம் ஒரு வகை மன வியாதி! ஆர்த்தோரெக்ஸியா நெர்வோஸா!
ம்? அப்படியா? பூச்சி மருந்தில் குளித்த காய்கறிகள், ஜெனடிக் திரிசமன் செய்யப்பட்ட பயிர்களை விலக்கி வைத்தால் நான் பைத்தியமா? ஆக்ஸிடோஸின் ஊசி போட்டுக் கறந்த பாலைக் குடிக்க மறுத்தால் நான் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆக வேண்டியதுதானா?
செயற்கையான ரசாயனங்களில் ஊற வைத்து மாதக் கணக்கில் டப்பாவில் அடைத்து வைத்த உணவைச் சாப்பிட்டால்தான் நார்மலான மனிதன் என்று இவர்கள் வாதாடுவதற்குக் காரணம் இருக்கிறது. ஃபுட் ப்ராஸஸிங் என்பது பல பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி. அதிகம் பதப்படுத்தினால் அதிக மதிப்புக்கூட்டல். எல்லோரும் இயற்கையாக விளைவதைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டால் இடையில் உள்ள பல பேரின் தொழில் படுத்துவிடும்!
இயற்கையான, உயிரோட்டமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலும் மனமும் லேசாக இருக்கும். தன்னம்பிக்கையும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். ஆன்மீக உணர்வுகள் மேலே எழும்பும். மாறாக, பசித்தாலும் பசிக்காவிட்டாலும் ஜங்க் ஃபுட் தின்று கொண்டு சோபாவில் சரிந்து கிடப்பவர்கள், சோம்பலும் மந்தத்தனமுமாக இருப்பார்கள். ப்ராய்லர் கோழி மாதிரி கசாப்புக்காகவே வளர்க்கப்படுபவர்கள் இவர்கள்.
மக்கள் சாப்பிடும் பண்டம் அனைத்திலும் அஸ்பர்டேம், யீஸ்ட் நொதிகள், மானோ சோடியம் க்ளூடமேட் போன்ற செயற்கைச் சேர்மானங்களால் நாக்கையும் மனதையும் மரத்துப் போக வைத்துவிட்டால், அவர்கள் கேள்வி கேட்காமல் சொன்ன சொல் கேட்டு நடப்பார்கள். ஷாம்பூ விளம்பரம் முதல் ‘தங்கத் தலைவருக்கே உங்கள் ஓட்டு’ வரை எல்லாவற்றையும் நம்பிப் பின்பற்றுவார்கள். வியாபாரத்துக்கு அதுதான் நல்லது.
யாராவது இதை ஒப்புக் கொள்ள மறுத்தால் எடு, ரப்பர் ஸ்டாம்ப்பை! ஆயிரம் வகைப் பைத்தியங்கள் கைவசம் இருக்கின்றன.
பின்குறிப்பு: ராமன் ராஜா இவர்களின் எழுத்து மிகவும் பிடிக்கும் இவரிடம் நகைச்சுவை பாணியில்  எழுத கற்றுக் கொண்டேன் எனக்கு இவர் ஆசிரியர் அவரை கவுரவப்படுத்தும் விதமாக இக்கட்டுரையை பகிர்கிறேன்.
நன்றி: ராமன் ராஜா
படங்கள் கூகுள்

Monday, October 8, 2012

லேப்டாப் வைத்திருந்தால் பயங்கரவாதியா?

சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்ட செய்தி ஆகஸ்ட் 30 வியாழன் அன்று வெளிவந்தது. அதற்கு முந்தைய நாள் (புதன்) பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது இவர்களைக் கைது செய்தோம் என காவல்துறை கூறியது. ஆனால், சில நாட்களுக்கு முன்பே சாதாரண உடையில் வந்த சிலர் இவர்களை அழைத்துச் சென்றனர் எனவும், இது குறித்துப் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்தே கைது விவரத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர் எனவும்  அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்குப் பிறகு, ஊடகங்கள் வழக்கம் போன்று உச்சக்கட்ட கற்பனைக் கதைகள் பலவற்றை புனைந்து வெளியிட்டன. ஹூப்ளி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து மேலும் சிலர் கைது செய்யபட்டனர்.
                                தினமலர் என்கிற தினமலத்தின் உச்சக்கட்ட அவதூறு

கைது செய்யப்பட்டவர்களில் அஹ்மத் மிர்சா என்பவர் நாட்டின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான டி.ஆர். டி.ஒ.வின் பொறியாளர் ஆவார். முதீஉர் ரஹ்மான் சித்தீகி, டெக்கன் ஹெரால்டு ஆங்கில நாளிதழின் கட்டுரையாளர் ஆவார். டாகடர் நயீம் சித்திகீ நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனமான திலி ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் முதுகலை மாணவர் ஆவார். கைதான மற்றவர்களும் இதே போன்று உயர்கல்வி பயின்று வரக்கூடிய மாணவர்கள்.

கர்நாடகாவின் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யும் நோக்கோடு லஷ்கரே தய்யிபா, ஹுஜி ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இவர்கள் சதித்திட்டம் தீட்டி வந்தனர் என காவல்துறை கூறுகிறது. இதற்கு ‘ஆதாரமாக’ சில பொருள்களையும் அது கைப்பற்றியதாம்!?.மடிக்கணினி 2, சிம் கார்டுகள் 8 , புத்தகங்கள் 7, ஈரான், இந்தியா, சீனா ஆகியவற்றின் வரைபடங்கள், இருசக்கர வாகனம் 1, சில ஆயிரம் ரூபாய்கள், 1 கத்தி. முஸ்லிம் மாணவர்களைக் கைது செய்ய இந்தப் ‘பயங்கர’ ஆயுதங்கள் போதாதா?

பெங்களூர் போன்ற தகவல் தொழில்நுட்ப நகரத்தில் மடிக்கணினி இல்லாத மாணவர்கள் உண்டா? கூகுள் தேடுதலில் இந்தியா, சீனா என டைப் செய்தால் அந்நாடுகளின் எல்லா வகையான வரைபடங்களும் தகவல்களும் எளிதாக, யாருக்கும் கிடைக்கும் என்றிருக்கையில், இவற்றைத் தீவிரவாதக் கருவிகளாகச் சித்தரிக்கும் அறிவீனம் காவல்துறைக்கு இருக்கலாம். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் என நாம் கருதுகின்ற தேசிய நாளிதழ்கள் கூட அவ்வாறு கூறுவது அநாகரிகமானது.

சேரிகளிலும், காலனிகளிலும் வசித்துவந்த ஏழை முஸ்லிம் இளைஞர்கள் தாம் இதுவரை கைது செய்யப்பட்டு வந்தனர். அப்போதெல்லாம், இவர்களுக்குக் கல்வியறிவு இல்லாததால் ‘சமூக விரோத’ சக்திகளின் வலையில்  விழுந்துவிட்டனர் எனும் கருத்துருவாக்கத்தை அறிவுஜீவிகளும் ஊடகங்களும் ஏற்படுத்தினர். இன்று கதை மாறிவிட்டது. இந்த சமூகத்திலிருந்து தன்னம்பிக்கையும், கல்வியறிவும் பெற்ற புதிய தலைமுறை உயர்ந்து வருகின்றது. ஆனால் அனைவரும் பயன்படுத்துகின்ற மடிக்கணினியையும் கைப்பேசிகளையும் அவர்கள் பயன்படுத்தினால் அவை தேசவிரோத, தீவிரவாதச் செயல் என இப்போது சித்தரிக்கப்படுகிறது.

பின்குறிப்பு:
" நாங்கள் மடிக்கணினியையும் கைப்பேசியையும் புத்தகங்களையும் வைத்திருக்கும் பதிவர்கள் எங்களையும் சிறையில் அடையுங்கள்”
மடிக்கணினி வைத்திருக்கும் எனது புகைப்படம்

எனது நூலகத்தின் ஒரு பகுதி புத்தகங்களும் இருக்கு

கைது செய்தபிறகு தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள் என்று டேபிளில் அடுக்கி வைக்கும் சிரமமும் உங்களுக்கு இல்லை நானே அடுக்கி வைத்திருக்கிறேன் டேக்கிட்.

வாங்க சார் வந்து புடிச்சு உள்ளே போடுங்க சார்.

Friday, October 5, 2012

ஒரு சம்பவம். ஒரு வீடியோ

பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்

அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.

தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!

பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?

சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.

அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.

“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’,  ‘நிகாப்’  எனும்  தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.

இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.

அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!

தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!

அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:

“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”

அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:

“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”


பிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார். பார்க்க வீடியோ.


இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

இந்த பேறு பெற்ற பெண்மணி அழகாக சொன்னார் என்னை யாரும் மிரட்டி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை...  மாற்றவும் முடியாது.

Tuesday, October 2, 2012

யார் இந்த மார்ட்டின் லூதர்...?

கிறிஸ்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர்தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொஹீமியாவில் ஜான் ஹஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற ஃபிரெஞ்சுகாரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துடன் நின்று விட்டன. எனினும், 1517ஆம் ஆண்டுவாக்கில் திருச்சபையினருக்கு எதிரான மனக்கசப்பு வெகுவாகப் பரவி, கிளர்ச்சித் தீயை மூட்டுவதற்கு ஏற்பப் பக்குவமாகக் கனிந்திருந்தது. லூதரின் சீர்திருத்தக் கருத்துகள் புரட்சிக் கனலாக அமைந்து உடனடியாகக் கிளர்ச்சித் தீயை மூட்டி விட்டது. இந்த எதிர்ப்பு மிக விரைவிலேயே ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பரவியது. எனவே, இந்தச் சமய சீர்திருத்த இயக்கம் தோன்றுவதற்கு மூலமுதற்காரணமாக விளங்கியவர் மார்ட்டின் லூதர் 

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து குறைபாடுகளை நீக்குவதற்காக 16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவச் சமயச் சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர். இவர் 1483 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார். தமது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால், சட்டக் கல்வியை இவர் முடிக்கவில்லை. மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறிஸ்துவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில், டாக்டர் பட்டம் பெற்றார். விரைவிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக் குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510-ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால், இதையெல்லாம் விட பாவமன்னிப்புச் சலுகைகளைப் பணத்திற்கு விலைபேசும் கயமைச் செயல்கள் தாம் இவர் தமது எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதற்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தன. (செய்த பாவத்திற்குப் பணத்தண்டம் செலுத்தி விட்டால் அந்தப் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதாகத் திருச்சபை அறிவிப்பதுதான் இந்தப் பாவமன்னிப்பாகும். 
மரணத்திற்குப் பிறகு பாவம் போக்கப்படும் இடத்தில் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக பாவம் செய்தவர் கழிக்க வேண்டிய கால அளவுகளைக் கூடத் திருச்சபையினர் பணம் வாங்கிக் கொண்டு குறைத்தனர். லூதர் 1517 ஆம் ஆண்டில் தமது புகழ் பெற்ற தொண்ணூற்றைந்து முற்கோள்கள் (Ninety five Theses) என்னும் நெறிமுறையை விட்டன்பர்கு தேவாலயத்தில் கதவில் ஒட்டி வைத்தார். இதில், பணத்திற்காக இழிசெயல்களில் ஈடுபடுகிற திருச்சபையினரின் நடத்தையை வன்மையாகக் கண்டிருத்திருந்தார். குறிப்பாக, பணம் வாங்கிக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்குவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். லூதர் தமது தொண்ணூற்றைந்து முற்கோள்களின் படியொன்றை மெயின்ஸ் மேற்றிராணியாருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி, அந்த முற்கோள்களை அச்சிட்டு அந்த வட்டாரம் முழுவதிலும் வழங்கினார்.
விட்டன்பர்க் ஆலயக்கதவில் லூதர் 95 விதிகளை அறைகின்றார்.
திருச்சபைக்கு எதிரான லூதரினுடைய கண்டனத்தின் குறியிலக்கு விரைவாக விரிவடைந்தது. இவர் விரைவிலேயே போப் ஆண்டவரின் அதிகாரத்தையும் திருச்சபைப் பொது மன்றங்களின் அதிகாரத்தையும் எதிர்க்கலானார். விவிலியத்தை மட்டுமே நான் வழிகாட்டியாகக் கொள்பவன். வெற்று வாதங்களை நான் ஏற்க மாட்டேன் என்று அவர் அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, இந்தக் கருத்துகள் திருச்சபையினருக்கு ஆத்திரமூட்டின. திருச்சபை அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக முன்னிலையாகுமாறு லூதருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டன. பல்வேறு விசாரணைகள் நடந்தன. தம் சமய மறுப்புக் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கும்படி லூதருக்குப் பலமுறை ஆணையிடப்பட்டது.  இறுதியில், லூதருக்கு திருச்சபைக்கு முரணான கோட்பாட்டுடையவர் (heretic) என்றும், சட்ட விரோதி என்றும் அறிவிக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.
முரண்கோட்பட்டாளர்களை கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கும் தண்டனை
இந்த தண்டனைக்கு லூதர் சாதாரண கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருடைய கொள்கைகள் ஜெர்மன் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றிருந்தன. சில ஜெர்மனிய இளவரசர்கள் கூட அவரை ஆதரித்தனர். லூதர் ஓராண்டுக் காலம் வரை தலைமறைவாக இருந்தார். எனினும், ஜெர்மனியில் அவருக்கு ஆதரவு வலுப்பெற்றிந்தமையால் கடுமையான தண்டனைகள் விதிப்பது தவிர்க்கப்பட்டது.
லூதர் ஏராளமாக எழுதினார். அவருடைய எழுத்துகளில் பல மிகப் பெருமளவில் செல்வாக்குப் பெற்றன. விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தது அவருடைய முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இவருடைய இந்த மொழி பெயர்ப்பு, திருச்சபையினையோ, அதன் பாதிரிமார்களையோ நம்பியிராமல் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இந்த வேத நூலைத் தானே படித்தறிந்து கொள்ள உதவியது. (லூதரின் மொழிபெயர்ப்பு மிக அழகிய நடை அமைந்திருந்தது. அதனால் ஜெர்மன் மொழியிலும் இலக்கியத்திலுங் கூட இந்த மொழிபெயர்ப்பு அளப்பரிய செல்வாக்குப் பெற்றது.)
லூதரினுடைய இறைமையியலை முழுமையாக விரித்துரைக்க இந்த சுருங்கிய இடம் போதாது. கடவுட் பற்றினால் மட்டுமே பாவ மன்னிப்புப் பெற முடியும் என்னும் கோட்பாடு லூதரின் கொள்கையில் தலையாயதாகும். இந்தக் கொள்கையைப் புனித பாலின் எழுத்துகளிலிருந்து அவர் பெற்றார். மனிதன் இயற்கையிலேயே பாவக் கடலில் மூழ்கியிருப்பவன். எனவே, நற்செயல்களைச் செய்வதால் மட்டுமே அவன் மீளா நரகிலிருந்து தப்பித்து விட முடியாது. வீடுபேறு என்பது, ஆழ்ந்த பக்தியினாலும், இறைவன் அருளினாலும் மட்டுமே கிட்டும் என்று லூதர் நம்பினார். எனவே, பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பைத் திருச்சபையினர் விற்பனைச் செய்வது முறையற்ற செயல் என்று அவர் கண்டித்தார். தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும் இறைவனுக்குமிடையிலான இடையீட்டாளர் திருச்சபையினர் தாம் என்ற சம்பிரதாயக் கருத்து ஐயப்பாட்டுக்குரியது. லூதரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாயின், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தோற்றத்திற்கென மூல காரணமே அடியோடு துடைத்தளிக்கப்பட்டு விட்டது எனலாம்.
திருச்சபையினரின் கடமையை எதிர்த்ததுடன், திருச் சபையினுடைய பல்வேறு நம்பிக்கைகளையும், நடை முறைகளையுங்கூட லூதர் குறிப்பாகக் கண்டித்தார். எடுத்துக் காட்டாக, மரணத்திற்குப் பின்பு பாவம் போக்கப்படும் இடம் ஒன்று உண்டு என்பதை அவர் மறுத்தார். இவரே கூட 1525 ஆம் ஆண்டின் ஒரு கிறிஸ்துவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். லூதர் 1546 ஆம் ஆண்டு தமது சொந்த ஊராகிய ஐஸ்லிபெனுக்குச் சென்றிருந்தபோது அங்கு காலமானார்.
இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய விளைவாகச் சமயச் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் பல்வேறு புரோட்டஸ்டாண்டுப் பிரிவுகள் உருவாகின. புரோட்டஸ்டாண்டு சமயப் பிரிவு, கிறிஸ்துவ சமயத்தின் ஒரு கிளைப் பிரிவுதான். இச்சமயச் சீர்திருத்த இயக்கத்தின் இரண்டாவது முக்கிய விளைவு, ஐரோப்பாவில் மூண்ட சமயப் போர்களாகும். இந்தச் சமயப் போர்களில் சிலவற்றினால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. உதாரணமாக, ஜெர்மனியில் நடந்த முப்பதாண்டுப் போர் 1618 முதல் 1648 வரை நடைபெற்றது. இந்தப் போர்கள் ஒருபுறமிருக்க, கத்தோலிக்கர்களும், புரோட்டஸ்டாண்டுகளுக்குமிடையிலான அரசியல் பூசல்கள், அடுத்த சில நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் அரசியலில் பெரும் பங்கு பெற்றன.
மேற்கு ஐரோப்பாவின் அறிவு மேம்பாட்டிலும் இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கம் மறைமுகமான, ஆனால், மிக முக்கியமான பங்கு பெற்றது. 1517ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை என்ற ஒரேயொரு திருச்சபைதான் இருந்து வந்தது. இதன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டவர்கள் முரண் கோட்பாட்டாளர்கள் எனக் கருதப்பட்டனர். சுதந்திரமான சிந்தனைக்கு இந்தச் சூழல் ஏற்புடையதாக இருக்கவில்லை. சமயச் சிந்தனைக் கொள்கையை பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் சிந்தனைச் சுதந்திரம் ஏற்கப்பட்டது.
லூதரிடமும் குறைபாடுகள் இல்லாதிருக்கவில்லை. சமய ஆதிக்கத்திற்கு எதிராக இவர் புரட்சி செய்த போதிலும், சமயப் பொருட்பாடுகளில் தம்முடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடம் இவர் மிகக் கொடூரமாக நடந்து கொண்டார். சமயப் போர்கள், இங்கிலாந்தைவிட ஜெர்மனியில் மிகக் கடுமையாகவும், அதிக இரத்தக் களரியுடனும் நடந்ததற்கு லூதர் தொடங்கி வைத்த சமயச் சகிப்புத் தன்மையற்ற போக்கு ஓரளவுக்குக் காரணம் எனலாம். அத்துடன் யூத இனத்தவரை லூதர் அதீத மூர்க்கத் தனத்துடன் வெறுத்தார். யூதர்களைப் பற்றி இவர் எழுதிய கருத்துகள் தாம், இருபதாம் நூற்றாண்டு ஜெர்மனியில் இட்லர் சகாப்தம் தோன்றுவதற்கு வழி வகுத்தது என்று கூடச் சொல்லலாம்.
ஜெர்மனி ஹிட்லர்
சட்டப்படி அமைந்த ஆட்சிக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை லூதர் வலியுறுத்தினார். குடியியல் அரசின் அலுவல்களில் திருச்சபையினர் தலையிடுவதை அவர் தீவிரமாக எதிர்த்ததே அவர் இவ்வாறு வலியுறுத்தியதற்குக் காரணம். (சீர்திருத்த இயக்கம் என்பது ஓரளவுக்கு இந்தக் காரணத்தினாலேயே, ஜெர்மானிய இளவரசர்களிடமிருந்து லூதருக்கும் பெருமளவு ஆதரவு கிடைத்தது). லூதரின் உள் நோக்கங்கள் என்னவாக இருந்தபோதிலும், அரசியல் விவகாரங்களில் வரம்பற்ற ஆட்சிக் கொள்கையை (Absolutism) பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஏற்றுக் கொள்வதற்கு லூதரின் உரைகள் வழிவகுத்தன எனலாம். இந்த வகையிலும், ஹிட்லரின் சகாப்தத்திற்கு லூதரின் உரைகள் வழி வகுத்தன எனலாம். இந்த வகையிலும், ஹிட்லரின் சகாப்தத்திற்கு லூதரினுடைய எழுத்துகள் வழியமைத்திருக்கலாம்.
“உண்மையை அறிந்த பின்னரும் உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்.” என்று முழங்கிய மார்டின் லூதர் கிங் கிறிஸ்துவத்தில் தர்க்கரீதியான ஒரு பிரிவை ஏற்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்தார்.

Reference :  Martin Luther: ,the 100