Sunday, December 2, 2012

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!

இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


சென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய கார் ஒன்று சர்வீசுக்காக வந்து நிற்கிறது. ராத்திரி முதலாளி வீட்டுக்குக் கிளம்பின பிறகு, பட்டறையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டு என்ஜினை ஆன் செய்கிறார்கள். கோடையின் புழுக்கத்துக்கு இதமாக ஏ.ஸியை முழு வேகத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நாள் முழுவதும் ஸ்பானர் பிடித்த களைப்பில் சுகமாகத் தூக்கத்தில் நழுவுகிறார்கள்…. ஆனால் காலையில் பார்க்கும்போது இருவரின் உயிரற்ற உடல்கள்தான் காரில் இருக்கின்றன. ஒரு காயமில்லை, ரத்தமில்லை, விஷம் சாப்பிட்ட அறிகுறியும் இல்லை. என்னதான் நடந்திருக்கும்?
சில மாதங்களுக்கு முன்னால் -பூனாவில் ஒரு கல்லூரி ஹாஸ்டல். பத்தொன்பது வயது மாணவி அர்ச்சனா, நள்ளிரவில் தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். டிசம்பர் குளிருக்கு எல்லாக் கதவு ஜன்னலும் நன்றாக அடைத்திருக்கிறது. திடீரென்று பவர் கட். மறுநாள் பரீட்சை என்பதால், ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படிப்பைத் தொடருகிறார் மாணவி. வட இந்தியா பக்கமெல்லாம் கிடைக்கும் வாசனை மெழுவர்த்தி; ஓர் அடி நீளம் இருக்கும். பெரிய சுடர்… சற்று நேரத்தில் அர்ச்சனாவின் கண் சொக்குகிறது. அப்படியே ஒரு பத்து நிமிடம் டேபிளில் சாய்ந்து தூங்கலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த நாள் காலையில் பரீட்சை எழுதுவதற்கு அர்ச்சனா இல்லை. விடுதி வார்டன் கதவை உடைத்துக் கொண்டு போய்ப் பார்த்தபோது கிடைத்த ஒரே சாட்சி, முழுவதும் எரிந்து முடிந்த மெழுகுவர்த்தியின் மிச்சங்கள்தான்.
கத்தியின்றி ரத்தமின்றி ஏற்பட்ட இந்த மூன்று மரணங்களின் மர்மம், போஸ்ட் மார்ட்டத்தில்தான் தெரிய வந்தது. இவர்கள் எல்லோரும் கார்பன் மோனாக்ûஸடு வாயுவை சுவாசித்ததால் இறந்திருக்கிறார்கள். இந்த கார்பன் மோனாக்ûஸடு (சுருக்கமாக கா.மோ.) என்பது கரியும், ஆக்ஸிஜனும் சரிவிகிதத்தில் கலந்தது. எங்கே எது எரிந்தாலும் இந்த வாயு வெளிப்படும். பொருள் எரிவதற்குப் போதுமான காற்று சப்ளை இல்லாவிட்டால் ஏராளமாக கா.மோ வாயுதான் உற்பத்தியாகும். வாகனங்கள், விறகு-கரி அடுப்பு, பர்னர் சரியில்லாத ஸ்டவ், ஜெனரேட்டர் செட்டுகள் எல்லாம் கார்பன் மோனாக்ûஸடைத் துப்பும் எமன்கள்! (சிகரெட் புகைத்தாலும் சுருள் சுருளாக கா.மோ.தான் ஜாக்கிரதை). புகைபோக்கி வைத்துப் பாதுகாப்பாக வெளியே விட்டால் உலகம்தான் குட்டிச்சுவராகுமே தவிர, நமக்கு உடனடி ஆபத்தில்லை. அதுவே மூடின சின்ன அறையில், அல்லது காருக்குள் ஆளைச் சூழ்ந்துகொண்டால் சில நிமிடங்களில் மரணம்தான்.
கார்பன் மோனாக்ûஸடைப் பார்க்க முடியாது. வாசனை எதுவும் இருக்காது என்பதால் கண்டுபிடிப்பது கஷ்டம். ரத்தத்தில் உள்ள ஹிமோக்ளோபினைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு மூளையைச் செயலிழக்கச் செய்துவிடுவதால், எழுந்து ஜன்னலைத் திறக்கவேண்டும் என்ற எளிய செயலைக் கூடச் செய்ய முடியாமல் கை கால் ஓய்ந்துவிடும். உலகத்தில் வருடா வருடம் சில நூறு பேர் கார்பன் மோனாக்ûஸடைச் சுவாசித்து இறக்கிறார்கள். மேலை நாடுகளில் கா.மோ சூழ்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கக் கருவிகள் வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் கூடத் தேவையில்லை; நமக்கு கார்பன் மோனாக்ûஸடு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை அறிவது சுலபம்: காற்று புகுந்து புறப்பட இடமில்லாமல் பெட்டி மாதிரி அடைபட்ட அறையில் இருக்கிறீர்களா? அடுப்பு, கணப்பு, ஜெனரேட்டர் செட் ஏதாவது புகைகிறதா? தலை வலி, மறதி, மனக்குழப்பம், அசதி, வாந்தி என்று சித்த வைத்தியசாலை விளம்பரத்தில் வரும் அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா? ஆம் எனில் அனேகமாக நீங்கள் அளவுக்கு மீறி கா.மோ.வை சுவாசித்திருக்கக் கூடும். கதவைத் திறந்து வையுங்கள்; காலாற நடந்து போய் சுத்தமான காற்றை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு வாருங்கள்; சரியாகிவிடும். கார்பன் மோனாக்ûஸடிலிருந்து தப்பிக்க ஒரே வழி, காற்றோட்டம் ஏற்படுத்துவதுதான். காரில் போனால், எஞ்சினை ஓட விட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கக்கூடாது.
மூடிய அறைக்குள்தான் இந்த ஆபத்து என்றால், நாகரிக உலகில் ஜன்னலைத் திறந்து வைத்தால் வெளியிலிருந்து வேறுவிதமான பேராபத்து காத்திருக்கிறது! போபால் நகரத்தில் யூனியன் கார்பைட் கம்பெனியிலிருந்து விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறந்ததை, இறந்து கொண்டிருப்பதை மறக்க முடியுமா? அந்த மரண இரவில், கதவு ஜன்னல்களை டைட்டாக அடைத்துக்கொண்டு ஏ.ஸி. அறையில் தூங்கியவர்கள் பலர் பிழைத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளின் விஷ வெளிப்பாடுகளால் உடனடியாக மரணம் நேர்ந்தால்தான் தலைப்புச் செய்தியாகிறது; ஆனால் பல ஊர்களில், எந்தப் பேப்பரிலும் பிரசுரமாகாமல் தினம் கொஞ்சம் கொஞ்சமாக ஜனம் செத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுடைய அவல ஓலத்தைக் கேட்க முடியாமல் அதிகாரிகள் காதில் சில்லறை நாணயங்கள் அடைத்துக் கொண்டிருக்கிறது போலிருக்கிறது.
கடலூருக்குப் பக்கத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றின் பக்கம் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் போனால் விதவிதமான வாசனைகள் மூக்கைத் துளைக்கும். நெயில் பாலிஷ், கொசுவர்த்திச் சுருள், முட்டைக்கோஸ், அழுகின சப்போட்டாப் பழம், செத்த எலி, என்று பத்தடிக்கு ஒரு நறுமணம். அங்கே இருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையின் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியாகும் கெமிக்கல் புகைதான் இத்தனை விதத்தில் நாறுகிறது. இடிப்பாரை இல்லாத ஏமரா அரசாங்கம், 1980 வாக்கில் தொழிலை வளர்க்கிறேன் பேர்வழி என்று கண்ட கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கும் வரிவிலக்கு, விதி விலக்கு எல்லாம் கொடுத்துப் புகுந்து விளையாடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டது. அவர்கள் அம்மோனியா, அசிடேட் என்று அகர வரிசைப்படி ஆரம்பித்து ஊரிலுள்ள அத்தனை விஷப் பொருள், வேதிப் பொருள்களையும் உற்சாகமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். பொழுதன்னிக்கும் இதைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களுக்குத்தான் பாவம், போக்கிடமே இல்லை. சில சமயம் அவர்கள் இருமல் தாங்க முடியாமல் காறித் துப்புகிற கோழை கூட பஞ்சுமிட்டாய் நிறத்தில் வருகிறது. பயங்கரம்!
நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்கு நிமோகோனியாசிஸ் என்ற வியாதி வரும். கரித் தூசியைச் சுவாசித்து சுவாசித்து, நுரையீரல்கள் முழுவதும் ரயில் இஞ்சினின் பாய்லர் மாதிரி கறுத்துவிடும். சீக்கிரமே வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு கொடைக்கானல் மாதிரி நிறைய இயற்கைக் காற்று கிடைக்கும் ஊரில் போய் செட்டில் ஆகிவிட்டால் ஓரளவுக்கு உடல் தேற வாய்ப்பு உண்டு. மணல் அள்ளுவது, கல் குவாரி வேலை போன்றவை செய்பவர்களுக்காக இதைவிட அருமையான ஒரு வியாதி இருக்கிறது: ‘நிமோனோ…’ என்று ஆரம்பித்து, இடையில் ஏகப்பட்ட எழுத்துகளை இட்டு நிரப்பி, ‘… கோனியாசிஸ்’ என்று முடியும் 45 எழுத்து வியாதி. இந்த நுரையீரல் நோயின் பெயர்தான் இப்போதைக்கு ஆங்கில அகராதியிலேயே மிக நீளமான வார்த்தை! (பெருமையாகச் சொல்லிக் கொள்ளவாவது உதவும்.)
டோக்கியோ போன்ற பெரு நகரங்களில் டிராபிக் போலீஸ்காரர்கள் நாள் முழுவதும் வாகனப் புகையில் நிற்பதால் அவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி கொடுத்திருக்கிறார்கள். நம்ம ஊரிலும் இதற்கு சற்றும் குறையாத மாசுதான். தூசுதான். ஆனால் முகத்தில் சும்மா ஒரு கர்சீப் சுற்றிக்கொண்டு காவலர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது அனுதாபம் ஏற்படுகிறது. (அடுத்த முறை அந்தப் பத்து ரூபாயைக் கொடுக்க நேரும்போது பல்லைக் கடிக்காமல் கொடுத்தால் என்ன?) மேலை நாடுகளில் ஆக்ஸிஜன் பார்லர்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒரு கட்டணம் செலுத்தினால் கொஞ்ச நேரம் சுத்தமான காற்றைச் சுவாசித்து விட்டு வரலாம். இப்போது சென்னை உள்படப் பல நகரங்களிலும் வந்துவிட்டது. நாம் சாய்வு நாற்காலியில் ஓய்வாகப் படுத்திருக்க, பின்னணியில் அமைதியான இசை ஒலிக்க, கிராம்பு சந்தனம் என்று மெல்லிய நறுமணம் கலந்த ஆக்ஸிஜன் ஒரு குழாய் வழியே மூக்கில் இறங்க, க்ரெடிட் கார்டு கடன் தொல்லைகளைக் கூட மறந்து மனது அமைதியாகும் அந்த நிலையைத்தான் ஞானிகள் பேரின்பம் என்றார்கள். இதற்காகும் செலவு? அரை மணி மூச்சு விடுவதற்கு இருநூற்றைம்பது ரூபாய் வரை ஆகும்.
கவலைப்படாதீர்கள். இப்போது நாம் குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதில்லையா? அது போல மூச்சுக் காற்றையும் எல்லோரும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும் என்ற நிலை கூடிய சீக்கிரம் வரும்போது, ஆக்ஸிஜன் விலையும் கணிசமாகக் குறைந்துவிடும்.
இறுதியாக ஒன்று
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். இந்த ஆக்ஸிஜன் தான் இரத்தத்தைச் சுத்திகரிக்கச் செய்கிறது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

இந்த ஆக்ஸிஜனை மனித உடல் எந்த அளவுக்குப் பெறுகிறதோ அந்த அளவுக்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.காற்றிலிருந்து அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் பெற்றுக் கொள்ள உடற்பயிற்சி வழி செய்தாலும். ஒரு சில விஷயங்களை நாம் உடற்பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

1. எப்போதும் மூச்சை கவனிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வாயினால் சுவாசிக்காதீர்கள்.

இணையத்தில், பேஸ்புக்கில் ஷாட் செய்யும் போது உதடுகளை இறுக மூடிக் கொள்ளுங்கள். மூக்கினால் சுவாசியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் வாழ்த்துகள்.

25 comments:

  1. யப்பாப்பா! இவ்ளோ தகவல்கள் எப்படிங்க முடிகிறது உங்களால். மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  2. பயனுள்ள தகவல்கள். நன்றி!

    ReplyDelete
  3. நிறைய விஷயங்களை தெளிவாக விளக்கிய விதம் சிறப்புங்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றியுங்க

      Delete
  4. ஒரு உயிரினத்தின் இறுதி மூச்சை இறைவனால் மட்டுமே அறிய முடியும்

    முழு 'மூச்[சு]சானா பதிவு :)

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. //ஒரு உயிரினத்தின் இறுதி மூச்சை இறைவனால் மட்டுமே அறிய முடியும்//

      கண்டிப்பாக

      வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  5. சலாம் சகோ!

    காற்றில்லாத அறையில் மெழுகுவர்த்தி எரிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதை ரொம்ப நாளைக்கு முன்பே எச்சரித்துள்ளார்கள். ஆனால் கற்றறிந்த மக்களாயினும் சரியான விழிப்புணர்வு சிலருக்கு செல்வதில்லை :( மற்றவை அவசியமான புதிய தகவல்கள்! (ஜஸாகல்லாஹ் ஹைரா.)

    ஏசி காரில் இறந்த இருவரின் செய்தி நானும் பார்த்தேன். நீண்ட நாட்கள் புழங்காமல் பூட்டிக்கிடந்த வீட்டின் ஏசியைக்கூட ஒருமுறை சர்வீஸ் பண்ணிவிட்டுதான் புழங்கவேண்டுமாம்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ!

      ///நீண்ட நாட்கள் புழங்காமல் பூட்டிக்கிடந்த வீட்டின் ஏசியைக்கூட ஒருமுறை சர்வீஸ் பண்ணிவிட்டுதான் புழங்கவேண்டுமாம்!///

      இது எனக்கு புதிய தகவல்

      வருகைக்கு ஜஸாக்கல்லாஹ் கைர சகோ

      Delete
  6. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்-விளக்கத்துடன் அருமை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  7. ஹைதர் பாய் ...இங்கே [குவைத்] இப்போ குளிர் காலம் ஆரம்பமாகி இருப்பதால் தினந்தோறும் எலெக்ட்ரிக் ரூம் ஹீட்டர் போட்டுக்கொண்டுத்தான் தூங்குகிறோம் ...உங்க பதிவை படித்தவுடன் உஷாராயிட்டு ஏசியின் எக்ஸ்ஹுஸ்ட் ஓபன் பண்ணிட்டு துங்கபோறேன் ...மா அஸ்ஸலாம்

    ReplyDelete
    Replies
    1. சவூதியிலும் குளிர்தான் சகோதரரே
      விண்டோவை லேசாக வெளிக்காற்று வருவது போல் திறந்து வைத்து விட்டு தூங்குவது தான் என்னுடைய வழக்கமும் கூட

      வருகைக்கும் அனுபவ கருத்துக்கும் நன்றி

      Delete
  8. அருமையான தகவல்கள், மிக அருமையான பதிவு. நன்றி. நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்பிற்க்கும் நன்றி நண்பரே

      Delete
  9. பாய் அஸ்ஸலாமு அலைக்கும்

    இவ்வளவு மேட்டர் இருக்கா சாப்பாட்ட தவிர மற்ற எதுக்கும்

    வாய திறக்க கூடாது போல

    ReplyDelete
  10. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  11. சமீபத்தில் தான் இதுகுறித்து நான் இயற்கை மருத்துவத்தில் சொல்லி கேட்டபின் ரொம்ப யோசித்தேன்..எந்த நோயும் அண்டாமல் வாழ ஜன்னலை திறந்து வைத்து அட்லீஸ்ட் ஒரு சின்ன எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் துவாரமாவது விட சொன்னபோது தான் ரொம்ப யோசித்தேன்..ஏ சீ போட்டு கப்சிப்புன்னு மூடி வச்சு படுக்கிறோமே தினம் தினம் சாகிறோமோ என்று ஒரு பயம் எழுந்தது.
    பலரும் பலதையும் எழுதுறாங்க..இவ்வளவு அருமையாக இதுபோன்ற சப்ஜ்கெட் தேர்ந்தெடுத்து இவ்வளவு விளக்கமாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் சகோ.
    மாஷா அல்லாஹ்!!

    ReplyDelete
    Replies
    1. ///பலதையும் எழுதுறாங்க..இவ்வளவு அருமையாக இதுபோன்ற சப்ஜ்கெட் தேர்ந்தெடுத்து இவ்வளவு விளக்கமாக எழுதியமைக்கு பாராட்டுக்கள் சகோ.
      மாஷா அல்லாஹ்!!///

      அல்ஹம்துலில்லாஹ்
      உங்கள் கருத்துகளுக்கு ஜஸாக்கல்லாஹ் கைர சகோதரி

      Delete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    அருமையான தகவல்கள் .
    ஜஸாக்கல்லாஹ்

    please visit: www.islamiyaarangam.blogspot.in


    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      வ இய்யாக்கும் சகோ
      கண்டிப்பாக வருகிறேன் வாசிக்கிறேன்

      Delete
  13. பதிவில் முதல் பெரகிராப்பை படித்து பெரு முச்சு விட்டு விட்டுத்தான் படித்தேன். படித்த உடனே குடும்பத்தில் உள்ளாவர்களுக்கு தகவல் தந்து கொசுவர்த்தி சுருள் மற்றும் மெலுகுவர்த்தை பற்றி எச்சரிக்கை கொடுத்து விட்டேன். அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  14. மிகவும் அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி! சுதர்ஷன் கிரியா செய்யுங்கள் ! ஸ்ரீ ஸ்ரீ அருளிய மிக அற்புதமான பயிற்சி! மூச்சுக்கும் மனதுக்கும் மூளைக்கும் விடிவு!

    ReplyDelete