Wednesday, May 28, 2014

தினமலர் புகழும் (கோடாரி கம்பு) நஜ்மா ஹெப்துல்லா யார்?

தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் பாசிச பத்திரிக்கையான தினமலர் ஒரு முஸ்லிமை பற்றி ஆஹா ஒஹோ என்று புகழ்வது ஒன்றே போதுமானது அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள.

அவர் யார் தெரியுமா அவர் குடும்பம் பாரம்பரியம் தெரியுமா? என அளந்திருக்கிறது தினமலர். பிரமாண்டங்கள் எல்லாம் புனிதமானவை அல்ல.சிறுபான்மைக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் என்கிற பெயர் அடையாளத்துடன் தனது மரத்தை வெட்டும் விசுவாசமான கோடாரி கம்பு பி.ஜே.பிக்கு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியை புரிந்துதான் தினமலர் துள்ளி குதிக்கிறது. இனி அவர் குரல் ஒலிக்கும் கிழிக்கும் என்று.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கிடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் இந்த சிறுபான்மைத்துறை அமைச்சர்- நஜ்மா ஹெப்துல்லா.நஜ்மா என்கிற இந்த கோடாரி கம்பு ஆர்.எஸ்.எஸ் ஸின் குரு கோல்வால்கர் சொன்னதை தான் திரும்ப வாந்தி எடுத்திருக்கிறார்.

குருஜி கோல்வால்கர் எழுதிய வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (we or our nation hood defined) என்ற நூலில்.

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடிமக்களின் உரிமையும் இன்றி இருந்தல் வேண்டும். என்கிறார்.

சரியான அரசியல் அறிவுள்ள ஜனநாயக சக்திகள் புரிந்துக் கொள்வார்கள். பி.ஜே.பி அரசு ஒருபோதும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் ஆதரவாக இருக்காது வேண்டுமென்றால் இன்னும் எப்படி இவர்களை ஒடுக்க முடியும் என்கிற செயல்பாட்டில் இருக்கும் என்பதை. அதுதான் பி.ஜே.பி யின் அசல் ஆன்மா.

1 comment: