Showing posts with label உளவு. Show all posts
Showing posts with label உளவு. Show all posts

Saturday, January 17, 2015

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?

உலக நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிற பின்னணி தெரியுமா? ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும் உள்நாட்டுஅரசியலையும் மாற்றும் பின்னணி கொண்டது.

ஒவ்வொரு நாட்டிலும் உளவுத்துறை செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டதுறையாக இருந்தாலும் வெளிநாட்டு அரசியலை தன் சொந்த நாட்டிற்க்கு சாதமாக மாற்றிக் கொள்ளும் எல்லா வேலைகளையும் செய்து வருகிறது என்பதே உண்மை.
உதாரணமாக இஸ்ரேலின் மொஸாதைக் கூறலாம்.

பாலஸ்தீனப் போராளிகளை உளவு பார்க்க நியமிக்கப்பட்ட மொஸாத் இன்று மிகப் பெரும் அளவில் தன் கிளைகளைப் பரப்பி உள்ளது. 2000 பேர் நேரடியாகவும் பல்லாயிரக்கணக்கில் மறைமுகமாகவும் இதில் வேலை செய்கின்றனர்.

உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பான மொஸாத் தேவைப்பட்டால் அரசியல் கொலைகளைச் செய்வதற்கு கூட அதிகாரம் பெற்றது. இஸ்ரேல் அரசு நான்கில் ஒரு பங்கு பட்ஜெட்டை மொஸாதிற்கு ஒதுக்குகிறது.

மொஸாதின் நெருங்கிய கூட்டாளி அமெரிக்க உளவு அமைப்பான CIA.இஸ்ரேலின் வெற்றிக்கு CIA- வின் பங்கு அதிகம்.

உங்களை சற்றே திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால், தீவிரவாதிகளை உருவாக்குவதிலும் அவர்களை ஊக்குவித்து வழிகாட்டுவதிலும் உளவுத்துறை வெற்றி பெற்றுள்ளது.
உளவுத்துறைக்குத் தெரியாமல் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய முடியாது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று. அதாவது உளவுத்துறை நினைத்தால் ஆயுத சப்ளையைத் தடுக்க முடியும். ஆனால் ஆயுத வியாபாரம் மிகப் பெரும் தொழில் என்பதால் அதை விட்டு விடுகின்றனர். உளவுத்துறையின் நீண்ட காலத் திட்டத்திற்காக தீவிரவாதிகளை உருவாக்கி அவர்களை பலிகடா ஆக்குவது.

உளவுத்துறைகளின் தீவிரவாதச் செயல்கள் புதிதல்ல. அவற்றின் சதித் திட்டங்களும் உலகறிந்தவையே!

உளவுத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டறிவு நூல்களை படித்துப் பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும்.