Wednesday, August 1, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-3

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
பதிவின் இரண்டாவது பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம்.

1. திட்டமிடல்

எழுதுதல் திட்டமிடலுடன் ஆரம்பமாகிறது.இது கையிலுள்ள விடயம் தொடர்பாக எதனை? எப்படி? எழுத வேண்டும் எனச் சிந்திப்பதை குறிக்கும். வழங்கவுள்ள கருத்துக்களின் முழு எல்லைகளை வகுத்துக் கொள்ளல்,குறிப்புகளை எடுத்தல்,அட்டவணைகளைத் தயாரித்தல் என்பனவும் இதிலடங்கும்.சிந்தனைகளையும் அவற்றுக்கு ஆதாரமான விபரங்களையும் குறித்து வைத்துக்கொள்வதன் மூலம்.அவற்றில் சிலவற்றை எழுத மறப்பதையும் அல்லது ஒழுங்கினமான அமைப்பில் அமைவதையும் தவிர்க்க முடியும். முதலாவது சொல்லை எழுதும் முன் இடம்பெறும் சிந்தனை,சொற்தெரிவு,கற்பனை ஆகியன முழு ஆக்கத்தினையும் எழுதுவதன் நுட்பங்களைப் போன்றே முக்கியத்துவம் பெறுகின்றன.

2. முதற் பிரதியை எழுதுதல்

எழுத ஆரம்பிக்கும்போது நாம் முதலாவது பிரதியைச் சுருக்க்மான வடிவத்தில் தயாரிக்கின்றோம்.இப்பபிரதியில் தேவைக்கு அதிகமான சொற்களோ அல்லது எடுத்துச் சொல்லப்படும் கருத்துக்களைச் சிக்கலாக்கும் தெளிவற்ற சொற்களோ இருக்கக் கூடாது.இப்பிரதியைத் தயாரிக்கும் போது வாசகர்களையும்,முக்கியமான கருத்துகளை விளங்கிக் கொள்வதில் அவர்களுக்குள்ள ஆற்றலையும் நாம் மனதிற் கொள்வது அவசியம். நாம் பயன்படுத்தும் விவரண உதாரணங்கள் நிறைய சந்தர்ப்பங்களில் சிக்கலான கருத்துக்களைத் தெளிவுபடுத்த உதவுகின்றன.

எழுத்தாக்கத்தின் அடிப்படையே இந்த முதற்பிரதியாகும். எனவே இதனைத் தயாரிப்பதற்குச் செலவாகும் நேரம் வீணாகுவதில்லை.முதற் பிரதி தயாரான பின்னர், கருத்துக்கள்,உதாரணங்கள்,எழுத்துநடை போன்ற எடுத்தாளப்படக்கூடிய அம்சங்களை இனங்காணும் பொருட்டு, அதனை நாம் மீள் பார்வை செய்ய வேண்டும்.இதனால், திருத்தம் செய்யும்போது இவ்வம்சங்களை ஒழுங்குப்படுத்த இயலும்.பிரதி சரிவர அமையாவிடின் அதன் ஒரு பகுதியோ அல்லது முமுயாகவோ தூக்கியெறியவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3.மீள்பரிசீலனை செய்தல்

நமது முதற் பிரதியைக் கணிசமான அளவுக்கு மேம்படச் செய்யும்.தெளிவற்ற கருத்துக்களைத் தெளிவாக்கவும் அநாவசிய விபரங்களைக் களையவும் இது உதவும். ஆயினும் முதலாவது பிரதியை உறுதிப்படுத்தும் ஒரு செய்ல்முறையாக மீள்பரிசீலனைக் கொள்ளக் கூடாது. மாறாக இறுதி ஆக்கத்தைப் படைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே இதனைக் கருத வேண்டும்.எழுதப்பட்ட கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய நிலை சாதாரணமாக இக்கட்டத்தில் ஏற்படுவதுண்டு.கருத்து குழப்பநிலைகலை நீக்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பமாகவும் இது அமையும்.

4. பிரதியை சரிபார்த்தல்

ஒரு முறையோ பல முறைகளோ முதலாம் பிரதி மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின்,இறிதிப் பிரதி தயாராகும்.இவ்விறுதிப் பிரதி இலக்கண,எழுத்து மற்றும் நிறுத்தல் குறிகள் விடுபட்டுள்ளதா என கவனித்து திருத்தம் செய்ய வேண்டும். “சரி பார்த்தல்” (Proof reading) நேரமில்லையெனில் எழுவதற்கே நேரமில்லை என்பதை குறிக்கும்.

5.எழுத்தளரின் இடர்கள் (Writer' s Block)

நாம் எழுத நினைக்கும் விடயம் சம்பந்தமாக ஒரு சொல்லக்கூடத் தொடர்ந்து எழுதவோ,நினைக்கவோ முடியாது தடைப்பட்டு விடுவது போன்ற ஒரு நிலையைக் குறிப்பிடவே ‘எழுத்தளரின் இடர்’ என்று சொல்லுகின்றோம். இந்நிலைமையைச் சமாளிப்பதற்கு சில அழகிய உதாரணங்களைப் பார்ப்போம்.

. ஒரு கருத்து இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும் விதமாகத் தொடர்ச்சியாக எழுதுவதற்கு நம்மை வலுக்காட்டாயப்படுத்திக் கொள்ளலாம். (தொடர் பதிவுகள் போன்றவை) 

. நமது இந்த சிக்கலான நிலை குறித்து எழுத்தர்வமுள்ள  நண்பர்களுடன் பேசலாம் அவ்வாறு செய்யும் பொழுது புதிய வழிகாட்டல்களும் பொருளட்க்கம் பற்றிய புதிய அணுகு முறைகளும் கிடைக்கலாம்.

. நாம் எழுவதிலிருந்து கொஞ்ச நேரம் விடுபட்டு வேறு விடயங்களில் கவனத்தை செலுத்தி விட்டு. பின்னர் புது ஊக்கத்துடன் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம்.

6. உதவிக் குறிப்புகள்

சிறந்த எழுத்தாக்கத்துக்கான சில துணைக் குறிப்புகள் பின்வருமாறு:

1. உண்மைகளின் அடிப்படையில் வசனங்களை அமைக்க. எளிமையான,சுருக்கமாக,திருத்தமாகக் கூறுக.

2. கடின கலைச் சொற்களைத் தவிர்க்க. அதிகம் பயன்படுத்தப்பட்டு புளித்துப் போன சொற்களையும் சொற் தொடர்களையும் தவிர்க்க.

3.பெயர்ச் சொற்களை விட கூடுதலான வினைச் சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை உறுதிப்படுத்துக.

4.பெயர்களை வினைகளாக மாற்றுவதன் மூலம் தேவையற்ற சொற்களை நீக்குக.

5. பெயர்,பெயர் அடைச் சொற்களை வினைச் சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம்.

6. எழுவாய் செயலை ஆற்றும் வகையில் செய்வினை வாக்கியங்களை உபயோகிக்க.

7. ஒரே சொல் மீள வருதலைத் தவிர்க்க ஒத்த கருத்துடைய வேறு சொல்லை உபயோகிக்கலாம்.

8.முக்கியமான சொற்களையும், பொருத்தமான கருத்துக்களையும் ஒரு தாளில் அல்லது கணினியில் குறித்துக் கொண்டு நமது முதலாவது பிரதித் தயரிப்பை ஆரம்பிக்கவும்.தொடரொழுங்கு,வரிசைப்படுத்துதல் என்பன பற்றி முதலில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. உப பிரிவுகளாகப் பின்னர் வகைப்படுத்தலாம்.

முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்: ”சொற்களில் சிறந்தவை திருத்தமான, சுருக்கமான சொற்களாகும்.”

எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள அனைத்து சகோதரர்களும் சிறந்த முறையில் எழுதி எழுத்தாளர்களாக உயர என் வாழ்த்துகள் (முற்றும்)

Monday, July 30, 2012

பாக்யராஜின் பதில்களும் உமர் (ரலி) அவர்களும்

சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் படித்து,மனதில் பதிந்து போன விடயம் இது.பாக்யா  இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு குட்டிக் கதை, அல்லது வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.


கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?


பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,


"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?"  என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!"  என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த  காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.


இஸ்லாமிய கலீபா உமர் (ரலி) அவர்களை பற்றி எனக்கு கேள்வி பதிலின் மூலம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்  பாக்யராஜ் அவர்கள் தான்.
அடுத்து தமிழகத்தின் புகழ்பெற்ற நாளிதழ்  நடத்திய அந்த விவாதத்தின் தலைப்பு: அறிஞர்களின் நூல்களை அரசுடைமை ஆக்குவது போல அரசியல்வாதிகளின் -அவர்களின் நேருங்கிய உறவினர்களின் சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நாள் எந்தாளோ?

இந்த விவாதத்தில் பங்கு கொண்ட வாசகர் ஒருவர், தேர்தல் மனுதாக்களின் போது என்ன சொத்து காட்டப்படுகிறதோ அதையும், 5 ஆண்டுகள் பதவி முடிந்தபின் என்ன சொத்து உள்ளதோ அதையும் கண்டறிந்து அவற்றை நாட்டுடமை ஆக்கவேண்டும். முடியுமா? அதற்கு நமது ஜனநாயகம் இடம் கொடுக்குமா? இப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். நல்ல கற்பனை என்றார்.

ஆனால் நல்ல கற்பனை என்று சொல்லப்பட்ட விடயம் வரலாற்றில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றது.

கலீஃபா உமர் அவர்களின் ஆட்சிக் காலம். உமர் அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் (அன்று மாநிலம் என்று சொன்னால் இரான், ஈராக்,சிரியா,பாலஸ்தீன் போன்ற நாடுகள் மாநிலமாக இருந்தன) ஆளுநர்களை நியமித்தார்.அவ்வாறு நியமிக்கும் போது ஆளுநர்களின் சொத்து மதிப்புகளை எழுத்து மூலமாகப் பதிவு செய்யும்படி அரசுக் கருவூல அதிகாரிக்கு ஆணையிட்டார். ஆளுநர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் சொத்து மதிப்பை மீண்டும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து ஆளுநர் ஒருவர் ஓய்வு பெற்ற போது கலீஃபாவைச் சந்தித்து தம் சொத்து விவரங்களை ஒப்படைத்தார். ஆளுநராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் வைத்திருந்த சொத்துகளும் இப்பொழுது அவர் சமர்பித்த சொத்துகளும் ஒப்பு நோக்கப்பட்டன. முன்பை விட இரண்டு ஒட்டகங்கள் அவரிடம் அதிகமாக இருந்தன. உடனே அவற்றை அரசுக் கருவூலகத்தில் சேர்க்கும்படி கலீஃபா உத்தரவிட்டார்.

Saturday, July 28, 2012

பணத்திற்காக பலரை பைத்தியமாக்கிய டாக்டர்

மருத்துவர் எஸ்.கே. குப்தாவை உங்களுக்கு தெரியுமா? 2004 ஆம் வருட பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து வழக்கம் போல் காணமல் போனவர்.குப்தா ஒரு மனநல மருத்துவர்.ஆக்ராவில் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றியவர்.

குப்தாவின் பகுதிநேர வேலை என்ன தெரியுமா? ஏதுமறியாத, அப்பாவியான,நல்ல மனநலம் உள்ள பெண்கள் குறித்து “இவள் ஒரு மனநோயாளி.என்னிடம் இரண்டாண்டுகளாக அல்லது ஐந்தாண்டுகளாக அல்லது இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வருகிறாள்” என போலிச் சான்றிதழ் எழுதிப் கொடுப்பது தான்.

இந்தப் போலி சான்றிதழுக்காக ரூ. பத்தாயிரம், ஐந்தாயிரம் என ஆளுக்கு தகுந்தாற்போல் பேரம் பேசி வாங்கி இருக்கிறார். நல்ல மனநலம் உள்ள பெண்களை மனநோயாளி என எதற்குச் சான்றிதழ் தர வேண்டும்? இந்த சான்றிதழ் யாருக்குத் தேவைப்படும்? இந்தச் சான்றிதழ் வாங்கிக் கொள்வதால் பயனைடைவது யார்? போன்ற கேள்விகளுக்கான விடை மிகப் பயங்கரமானது.
யாரை பைத்தியமாக்கனும் பணத்த கொடுங்க கச்சிதமாக முடிச்சுருவோம்
இருங்க நீங்க கொடுத்த பணம் சரியாக இருக்கானு எண்ணிப் பார்த்துகிறேன்.
ம்ம் பணம் சரியா இருக்கு
பொன்னு பெரு என்ன சொன்னீங்கே அவள் ஒரு பைத்தியம்.
டாக்டர் பைத்தியம் என்று வழங்கிய போலிச் சான்றிதழ்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மீராவின் குடும்பத்தினர் ‘யாதவீர் சிங்’ என்பவருக்கு பேசியபடி பணம், நகை, ஸ்கூட்டர் அனைத்தையும் வரதட்சணையாக கொடுத்து மணமுடித்து வைத்திருக்கின்றனர் அதை வாங்கிய பின்னரும் யாதவீர் சிங் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் இச்சூழ்நிலையில் மீராவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது பொம்பள பிள்ளையை பெற்று விட்டாயே என்று இன்னும் கொடுமை அதிகமாகியிருக்கிறது.

மாமியார் வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு இறந்திருக்கிறார் அக்குடும்பம் சட்டத்திடம் சரியாக சிக்கிக் கொண்டது தண்டணை உறுதி என்று தெரிந்தவுடன் இந்த டாக்டரிடம் ஓடி இருக்கிறார்கள் இவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அப்பெண் பைத்தியம் எனது மருத்துவமனையில் தான் இருந்தார் என்று எழுதிச் சான்றிதழ் கொடுத்தின் மூலம் அவர்கள் இதை கோர்ட்டில் சமர்பித்து பைத்திக்காரப்பெண்  தற்கொலை செய்துக் கொண்டார் என வழக்கின் திசையை மாற்றி வெற்றிப் பெற்று இருக்கிறார்கள்.
மருத்துவரால் பாதிக்கப்பட்ட மீராவின் குடும்பத்தினார்

அதுமட்டுமல்ல இந்திய நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதில்லை அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதை உடைக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீருபித்தால் எளிதாக விவாகரத்து கிடைத்து விடும். இந்தச் சட்ட நுணுக்கத்தை குப்தா பயன்படுத்திக் கொண்டார். மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பும் நபர்கள் குப்தாவை அணுகியிருக்கிறார்கள். குப்தாவும் இன்னாரது மனைவியான இவள் என விவரமாக எழுதி போலி சான்றிதழ் கொடுத்து விடுவார் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்க வெறும் ஐயாயிரம் ரூபாய்!

இவ்வாறு பத்து பெண்களின் வாழ்வைப் பாழாக்கி இருக்கிறார்,இதனையே வேறு வார்த்தைகளில் விவாகரத்து தொடர்பாக பத்து நபர்களுக்கு உதவி இருப்பதாகச் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார், குப்தா. இந்த போலிச் சான்றிதழ் வழங்கும் மனநல மருத்துவரைத் தான் தெஹல்கா நிருபர் ‘ஜம்ஷெத் கான்’ கையும் களவுமாக(மேலேயுள்ள படங்கள்) ரகசியக் காமிராவில் பிடித்திருக்கின்றார்.

“அவரிடம் உம் மனைவியையும் இங்கே அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.பெயர் சொன்னால் போதும். ஸாலிட் காம் ஹோ ஜாயேகா (கச்சிதமாக வேலை முடிந்து விடும்)” என தம்பட்டம் அடித்திருக்கின்றார். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கற்பனை மனைவியின் பெயரில் போலிச் சான்றிதழ் வாங்கி விட்டார், ஜம்ஷெத்கான்.

போராசை,பணப்பித்து, ஊழல்,லஞ்சம்,நிர்வாகக் சீர்கேடு போன்றவை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவி இருந்தாலும் கூட இந்த ஆக்ரா மருத்துவரின் செயலை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் வெறும் ஊழல் பிரச்சனையாக பணப்பித்து பிடித்த மனிதரின் குற்றமாக மட்டும் இதனை அணுகக் கூடாது.

திருமணம்,வரதட்சனை, விவாகரத்து போன்றவை குறித்த சமூகப் பார்வைகளையும்,மதிப்பீடுகளையும் மீள் பார்வை செய்ய வேண்டும் என்பது தான் இங்கு பொதிந்துள்ள கனமான செய்தி. ஆனால் வழக்கம் போலே அனைத்தையும் மறந்து விடுகிறோம்.

Wednesday, July 25, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்.பா-2

இந்த தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
இனி எழுத்தாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைககளைப் பற்றிப் பார்ப்போம்.

2. பிரச்சனைகள்


எழுத்துத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை முடிந்த வரை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ‘சீனாவில் சாய்லுன்’ என்பவர் முதன்முதலில் காகிதத்தை கண்டுபிடித்த பிறகு தான் அக்காலக்கட்டத்தில் சீனா பண்பாட்டுத்துறையில் மேலைநாடுகளை விட முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஒரு சீனா அறிஞர் தமக்கு தேவையான மூங்கிலால் செய்யப்பட்ட  நூல்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கூட அவற்றை பெரிய பார வண்டியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.இந்த அடிப்படையில் ஓர் அரசின் நிர்வாகத்தை நடத்துவது எத்துணை கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
மரநூல்
மூங்கில் கழிகளை வெட்டி கூழாக்கி ககிதம் தயாரிக்கும் ‘சாய் லுன்’ ஒவியம்.
மேலும் விபரங்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள் 
சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின்போது காகிதம் பெருமளவுக்கு பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்டகாலம் ரசசியமாகவே வைத்திருந்ததை. கி.பி.751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர்.அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும்.பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று.படிப்படியாக அரபு உலகம் முழுவதும் பரவியது ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்த கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.


சீனர்களின் அச்சுப்பாள அச்சுமுறை
காகிதத்தை முதலில் பயன்படுத்திய சீனர்களும், அராபியர்களும் கல்வித்துறையிலும் எழுத்துத் துறையிலும் ஐரோப்பியர்களை விட பிற்காலங்களில் பின் தாங்கியதற்கு மிக முக்கிய காரணம். ‘தொழிற்நுட்பம்’ காகிதத்தை கண்டுபிடித்த இவர்கள் அச்சிடும் முறையை அறியாதவர்களாக இருந்து கைகளால் எழுதி படியேடுத்துக் கொண்டும் அச்சுபாளமுறையை பயன்படுத்தி கொண்டும் இருந்தபோது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் ‘ஜோஹன் கூட்டன்பர்க்’ என்பவர் இயங்கக் கூடிய எழுத்துருவையும் (Movable Type) அச்சு இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.இவரது முறையைக் கொண்டு எழுத்து வடிவிலான ஏராளமான நூல்களை விரைவாகவும்,துல்லியமாகவும் அச்சடிக்க முடிந்தது அதன் பின்பு ஐரோப்பிய எழுத்துத்துறை மிக விரைவாக முன்னேறியது.
கூட்டன்பர்கும் நண்பர்களும் முதலில் அச்சடிக்கப்பட்ட பக்கத்தைப் பார்க்கின்றனர்.

எனவே எழுத்துத் துறையில் தொழிற்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.(சரி வரலாறு அப்படியே நிற்கட்டும்) இந்த தொடரின் முக்கிய நோக்கம்  தொழிற்நுட்பத்தை பற்றி அறிந்து கொள்வது அல்ல. அதனால் இனி எழுத்தாற்றல் சார்ந்த பிரச்சனைகளை பார்ப்போம்.

வெறுமனே தாளை நிரப்புவதற்காக மட்டும் எழுதாமல்.   'CAR' எனும் சூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.


Creative = ஆக்கத்திறன்
Accurate = திருத்தம்
Result oriented = மிக முக்கிய அடிப்படையை கொண்டிருக்க வேண்டும்

எழுத்தாளர்கள் பொதுவாக விடும் சில தவறுகள்

1. தேவைக்கு அதிகமாக அல்லது தேவைகளை விட குறைவாக ஆராய்தலும் தரவுகளை சேகரிப்பதும்.

2.உள்ளடக்க விடயத்தை தவறான முறையில் ஒழுங்கமைப்பது.

3. முதலாவது பிரதியை மீளாய்வு செய்ய தவறுவது.

4. மிக நீண்ட சொற்களையும் வசனங்களையும் உபயோகித்தல்.

5. எழுத்தாளர் மையக் கண்ணோட்டத்தை எடுத்துரைப்பது.

6. தவறான வாசகரை நோக்கி எழுத்தாக்கங்களைத் திசைப்படுத்துவது.

இவை தவிர இலக்கணம் மற்றும் எழுத்து நடை தொடர்பான கீழ்கண்ட தவறுகளும் ஏற்படுகின்றன.

1. அநாவசிய மிகைப்படுத்துதல்.

2. இடையறாது தொடரும் வாக்கியங்கள்.

3.அடிபட்ட சொற்றொடர்களும் அளவுக்கு மீறிப் பயன்படுத்திச் சலித்துப் போன வசனங்களும்.

4.கட்டமைப்பு இல்லாதிருத்தல்.

5.வழக்கில்லாத பண்டைய மொழிநடை.

6.குறைவுடைய முகவுரையும் முடிவுரையும்.

7.ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு தாண்டும்போது காணப்படும் குறைபாடுகள்.

இலக்கணம் எழுத்து நடைகளை பற்றி அறிந்து அத்துறைச்சார்ந்த ஆக்கங்களை முடிந்தவரை படித்து பயிற்சி எடுக்க வேண்டும்.

3. எழுதுதல் செயல்முறைகள்

எழுத்தாக்கம் என்பது சிக்கலானதொரு செயல்முறையாகவே ஆரம்பத்தில் தோற்றமளிக்கும். அதற்காக ஒரு சில அடிப்படைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். நமது எழுத்தாக்கத்தின் உள்ளடக்கம், அதன் நோக்கம்,நமது வாசகர்கள் என்பன நாம் விளங்கிக் கொண்டால், எழுத்தாக்கம் மேலும் எளிதாக்கப்பட முடியும். இவற்றுடன்,எழுதுதல் செயல்முறையை, கையாளுவதற்கு எளிதாக சிறுபடிகளாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் எழுத நினைக்கும்போது ஏற்படக்கூடிய விரக்தியின் அளவினைக் குறைத்துக் கொள்ளலாம். 

இப்படிகளை அடுத்த தொடரில் (இறைவன் நாடினால்) பார்ப்போம்.

Tuesday, July 24, 2012

எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்


'எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வோம் வாருங்கள்' என்ற தலைப்பு வைத்தவுடன் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் விரியலாம். எழுத்துத் துறையில் பழுத்த அனுபவமுள்ளவர்கள் ஒய்வுபெற போகும் போது தனது அனுபவக் குறிப்புகள் இளைய தலைமுறைக்கு பயன்பட வேண்டும் எனும் நோக்கில் 'கற்றுக் கொள்ளுங்கள்' என்று பெரும்புத்தகம் எழுதுவது நடைமுறை.

நான் இந்த தொடரை ஏன் எழுதுகிறேன்? எனில், எப்படி எழுதுவது என்று கற்றுக் கொண்டு இருக்கிறேன். ஒரு விடயத்தை கற்றுக் கொள்ளும் போது, அதை கற்றுக் கொண்டே பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் போது இன்னும் ஆழமாக எனது மனதில் பதியும். படிப்பதை எழுதும் போது அதுவும் நல்ல பலனை கொடுக்கும்.என்னைப் போல் இணையத்தில் எழுத ஆரம்பித்திருக்கிற நண்பர்களுக்கும் பயன்படலாம்.

ஒலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத் தெரிந்தவர்களெல்லாம் ‘வலையேற்றம்’ செய்யும் வாய்ப்பு அன்று இல்லை, இன்று இருக்கிறது. ஒரு கணினியும் இணையவசதியும் இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலை இருக்கிறது. முன்னொரு காலத்தில் அருந்ததி ராயும்,ஜூம்பாலகரியும் சொந்தமாய்க் கணினி வாங்கி அதில் எந்தத் திட்டமுமில்லாமல் தட்டத் தொடங்கினார்களாம். பிறகு தட்டியவைகளைச் சேர்த்துக் கட்டிபோது அது நாவலாகி விட்டதாம்.புக்கர் பரிசும் பெற்று விட்டதாம். எல்லாம் அவர்கள் சொன்னது தான்.

கையேழுத்து பத்திரிக்கை,உருட்டச்சு பத்திரிக்கை,சிறுபத்திரிக்கை அப்புறம் குமுதம்,குங்குமம்,ஆனந்தவிகடன் என்று படிப்படியாக ‘உழைத்து முன்னேறிய’ எழுத்தாளர் பெருமக்கள் பார்த்துப் பெருமூச்செறியும் வகையில் இன்று இணையத்தில் புதிதாக எழுதக் கூடியவர்கள் சிறப்பான படைப்புகளை எவ்வித பின்புலம் இல்லாமல் கொடுத்து விடுகிறார்கள்.

அதே சமயத்தில் என்ன எழுவது? எப்படி எழுவது? இணையம் எனும் பொதுவெளியில் பொறுப்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையற்று எதையாவது கிறுக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் பேர் ஆடுவதற்கு இடமளிக்கும் மேடை ஆயிரம் பேரையும் நடனக் கலைஞராக்கி விடுவதில்லை.தலைவர்கள் அடிமட்டத் தொண்டன்,மேதைகள்,பாமரர்கள் என்று  பிரிந்து கிடக்கும் அவமானமான நிலை முடிவுக்கு வருவதை இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. ஆனால் அது அந்த சாத்தியத்தை மட்டுமே வழங்குகிறது.

சரி பாடத்திற்கு போவோமா?

  1. நோக்கம்
  2. பிரச்சினைகள்
  3. எழுவதின் செயல்முறைகள்
  4. திட்டமிடல் (Planning)
  5. முதல் பிரதியை எழுதுதல் (Drafting)
  6. மீள் பரிசீலனை செய்தல் (Revising)
  7. எழுதியதை சரிபார்த்தல் (Proof Reading)
  8. எழுத்தாளரின் பிரச்சனைகள் (Writer Block)
  9. உதவிக் குறிப்புகள்

கற்பதின் நோக்கங்கள்

(இவ்வத்தியாயத்தைக் கற்று முடித்த பின்னர் நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

1.சிறந்த முறையில் எழுதுவதற்குரிய அடிப்படை அம்சங்களை அடையாளம் காண்பது.

2. மேலும் பயன்மிக்கதாக எழுதுதல்

3.பிறரது எழுத்தாக்கங்களை,பதிவுகளை விமர்சன ரீதியாகத் திறனாய்வு செய்தல் )

1.நோக்கம்

எழுதுதல் என்பது ஒரு பன்முகத்தனமை கொண்ட ஒரு கருவியாகும். பிறருக்கு தகவல் வழங்கவும், அவர்களை அறிவுறுத்தி இணங்கச் செய்வதற்கும்,உற்சாகமூட்டி உணர்வூட்டுவதற்கும்- ஏன் மற்றவர்களைப் பயமுறுத்துவதற்கும்கூட- நாம் எழுத்தைப் பயன்படுத்துகிறோம்.நன்றாக எழுதுவது முக்கியமானதாகும் ஏனெனில், எழுத்துக்களுக்கு பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு.

1. எண்ணங்களுக்கும் தகவல்களுக்கும் நிரந்தர வடிவம் தருகிறது. இதனால் அவற்றை உசாத்துணைக்காகவும் பிரதியெடுப்பதற்காகவும் எளிதில் பயன்படுத்தலாம்.

2. அதனுள் அடங்கியுள்ள செய்திக்கு ஏற்ப பிறரைச் செயலாற்ற செய்கிறது.

3. எழுத்தாளரின் சிந்தனைகளைப் பிரதியெடுக்கவும்,அதிகமானோருக்குப் பரப்பவும் முடியும் என்பதால் அவரது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

4.புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகளைத் திருத்தமான விதத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் கற்போரை வழிநடத்தி நெறிப்படுத்துகிறது.

5.வாசகருக்கு செவிவழிச் செய்திகளாக இல்லாமல் எழுத்தாளரை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையும் ஆதாரப்பூர்வத் தன்மையும் ஏற்படச் செய்கிறது.

6.தெரிவுகளை அல்லது செயற்பாட்டுக்கான வழிமுறைகளைத் தெளிவாகவும் நிரந்தரமாகவும் எடுத்துரைப்பதனால் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.

7. ஒரு விடயத்தை பிரச்சாரம் செய்ய பயன்மிக்க வழிமுறையொன்றாக திகழ்கின்றது.

பிறருடன் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான கருவி என்கிற முறையில் எழுத்தாற்றலானது பயிற்சியின் மூலம் கூர்மையடைய செய்ய வேண்டும். நமது எழுத்தாக்கங்கள்,பதிவுகள் தெளிவானதாகவும் திருத்தமானவையாகவும் மட்டுமின்றி,விளங்கக் கூடியவைகளாகவும் விருப்பத்திற்குரியவைகளாகவும் அமைய வேண்டுமாயின் சரியான பொருளடக்கத்தையும், சொற்களையும் நாம் தெரிவு செய்து கொள்வது முக்கியமாகும்.

(இறைவன் நாடினால் அடுத்த தொடரில் பிரச்சினைகளும், எழுதுவதின் செயல்முறைகள் இவைகளை பார்ப்போம் தொடரும் )

Saturday, July 7, 2012

சாகடிப்போம் சாதி வெறியை

தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிவெறியின் உண்மை முகத்தை அமபலப்படுத்தி நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த போது நிறைய நண்பர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் அப்படியா? உண்மையா? இன்னுமா சாதிவெறி இருக்கிறதா? என்று கேட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த சாதிவெறியால் பாதிக்கப்பட்டவன் என் நெருங்கிய நண்பன். அதை வாசிக்க இங்கே அழுத்தவும்.


இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது பி.பி.சி. செய்தியில் வெளியான ஒரு சம்பவத்தை பகிர்கிறேன் பாருங்கள்.


விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.

இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

“இப்பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, கிராம மக்களின் விருப்பத்திற்கிணங்க அவ்விரு பெண்களையும் வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து, இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது அரசு” என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.

மேலும், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை” என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார் சாமுவேல்.



என்றுதான் ஒழியுமோ இந்த சாதி. ஆதிகால சித்தர் கோபமாக இப்படி பாடினார்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்?
சாதாரண பலைவனத்தில் வாழ்ந்த அரேபிய பழங்குடி காட்டரபிகள் அன்றைய பெரும் வல்லரசாக இருந்த பாரசீக,ரோம் சம்ராஜியத்தை வீழ்த்திய காரணம் என்ன தெரியுமா?? இதுபோன்று நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களை இஸ்லாம் இணைத்திருந்தது.
அரேபிய வரலாற்று ஆசிரியர் ‘தபரி’ எழுதுகிறார்: பாரசீக மன்னன் ரூஸ்தமை சந்திக்க சென்ற அரேபியத்தூதராக சென்ற ‘மூகிரா’ பாரசீகத் துருப்புகளின் அருகே சென்றதும் ருஸ்தமைச் சந்திப்பதற்கு முன் அனுமதி பெறுவதற்காக அவர் நிறுத்தப்ப்ட்டார்.மூகிரா அங்கே (அதாவது ருஸ்தமின் சபைக்கு) போய்ச் சேர்ந்தபோது பொன்இழைகளால் செய்யப்பட்ட அழகான உடை அணிந்த பாரசீகர்களைக் கண்டார்.
அவர்கள் தலையில் கீரிடங்கள் அணிந்திருந்தார்கள்.சிறிது தூரம் வரை கம்பளங்கள் விரித்திருந்தார்கள்.வருபவர் அந்த தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது. ‘மூகிரா பின் ஷோபா’ அங்கே சென்றபோது, ருஸ்தாமின் சிம்மாசனத்தின் மீது இருந்த இருக்கை மெத்தை மேல் அமர்ந்தார். சிலபேர் ஒடிவந்து அவரைக் கிழே இழுத்து விட்டார்கள்.
மூகிரா சொன்னார்: நங்களெல்லோரும் உங்களுடைய விவேகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் உங்களை விட அதிக முட்டாள்தனமான மக்கள் இல்லை என்பதை நான் இப்போது காண்கிறேன். அரேபியர்களான நாங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். நாங்கள் போரில் தவிர யாரையும் அடிமையாக்குவதில்லை.எனவே நீங்களும் அதே போல அனுதாபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர்,உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்.

Saturday, May 5, 2012

வலையுகம் பிளாக் இனி www.valaiyugam.com.


அன்பான வலையுக நண்பர்களே valaiyukam.blogspot.com/ இனி
www. valaiyugam.com ஆக மாற்றியிருக்கிறேன். பல நண்பர்கள்
valaiyukam.blogspot.com/ இந்த முகவரியில் தேடி விட்டு
 Do you expect to see your blog here? See: ' I could not find on my blog on the Web, where is it? இப்படி செய்தி வருவதாக சொன்னார்கள் . இனி www.valaiyugam.com என்ற முகவரியில் நட்பை தொடருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, April 24, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன? -2


இதன் முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

இன்று நம் நாட்டிலும்  உலகேங்கும் மிக அதிகமாகப் பேசப்படுகின்ற சொல்தான் உலகமயமாக்கல் (Globalisation).
உலகமயமாக்கலோடு சேர்த்து அலசப்படுகின்ற சொற்களாக தலமயமாக்கல் (localisation), தாராளமயமாக்கல் (Libralisation), தனியார்மயமாக்கல் (Privatisation) ஆகியவற்றையும் சொல்லலாம். இந்த நான்கும் நம் நாட்டில் மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலும் உலகெங்கும் மிக அதிகமாக அலசப்படுகின்ற, பேசப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சொற்களாக இருக்கின்றன.

எதோ கேட்பதற்கு எந்தவிதமான தொல்லையும் தராத, தீங்கற்ற, முற்போக்கான,வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்கிற மயக்கத்தில் ஆழ்த்தக் கூடிய கவர்ச்சியான சொற்களாக இவை தோன்றுகின்றன. ஆனால் இந்த நான்கு சொற்களுக்கும் பின்னணியில் தனி வரலாறே இருக்கின்றது; வானளாவிய நோக்கங்கள் இருக்கின்றன.

சென்ற பதிவில் உலகமயமாக்கல்,பொருளாதாரம்,வெளிநாட்டு வணிகம், இவைகளை பார்த்தோம். இனி வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு இவை குறித்து பார்ப்போம்.

வெளிநாட்டு உறவுகள்.

அடுத்ததாக, வெளியுறவுத் துறையை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளுடனான பரஸ்பர உறவுகளையும், அந்த உறவுகளின் கனம், பரிமாணம்,நீடித்து நிலைக்கின்றதன்மை போன்றவற்றையும் தீர்மானிக்கின்ற உரிமை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மறுக்க முடியாத உரிமையாகும்.

எந்த நாட்டுடன் நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது, எதனுடன் உறவை நீட்டிப்பது, எதனுடன் உறவைத் துண்டித்துக் கொள்வது போன்றவற்றைத் தீர்மானிக்கின்ற உரிமையும் இதில் அடங்கும். இவையெல்லாம் அன்றாடம் கவனிக்க வேண்டிய விவகாரங்களாக இருக்கின்றன.

ஒரு நாட்டின் சுதந்திரம், சர்வதேச கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்ற விவகாரங்கள் இவை. ஆனால் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளும் இவற்றையும் உலகமயமாக்குவதில் வெற்றி பெற்று வருகின்றன.

பின்தங்கிய, நலிவுற்ற நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் தம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானாலும், அவற்றோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றாலும் எல்லாவற்றையும் அமெரிக்காவின் ஒப்புதலைப் பெற்றே செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நாட்டுத் தலைவர்களும் பிரதமர்களும் தம் அண்டைநாட்டு அதிபர்களுடன் தொலைபேசியில் பேச நினைத்தாலும் உலக அரங்கில் பெரிய தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் முகக்குறிப்பை அல்லது கண் அசைவைப் பார்த்தே தொலைபேசி எண்களைத் தட்டத் தொடங்குவர்.

சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் நடத்துகின்ற கட்டப் பஞ்சாயத்து இது.தலைதாழ்த்தி,வாய் பொத்தி,கூழைக் கும்பிடு போட்டு ஒழுங்காக நடந்து கொண்டீர்கள்... தப்பித்தீர்கள்.திமிறி நிமிர்ந்தாலோ கதை கந்தல்தான்.

விதவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் முகத்தில் வீசப்படும். வட்டார ஒத்துழைப்புக் கான நிறுவனங்கள், இருதரப்பு,முத்தரப்பு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் என பல்வேறு ஒப்பந்தங்களில் கட்டிப் போட்டு ஒரு வழி பண்ணி விடுவார்கள். மனித உரிமை பாதுகாப்பு என்கிற கூப்பாடு,பயங்கரவாதத்தைத் தடுப்போம் என்கிற சாக்குப் போக்கு என இவை போன்ற பால்வேறு வழிமுறைகளைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.

இவ்வாறாக, தம்முடைய வெளியுறவுகளை சுயமாகத் தீர்மானிக்கின்ற உரிமை அந்த நாடுகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.ஒரு நாட்டின் அரசாங்கத்துக்கு தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்ற உரிமையும் இல்லாமல் போகும் போது அந்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான மதிப்பும் செல்வாக்கும் எஞ்சி இருப்பதில்லை அது பொம்மை அரசாகத் தேங்கிப் போகும்.

பாதுகாப்பு.

அடுத்து இருப்பதிலேயே பொறுப்பு வாய்ந்த மிக முக்கியமான பாதுகாப்புத் துறையை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாட்டுக்கு இருந்தே தீர வேண்டிய முக்கியமான உரிமை இது. இந்த உரிமையையும் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பறித்து வருகின்றார்கள். என்னுடைய நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வது? எந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது? இவற்றையெல்லாம் தீர்மானிகின்ற உரிமை. அவற்றையும் உலகமயமாக்கல் என்கிற பெயரில் பறித்து விடுவார்கள்.

அணு ஆயுதங்கள் இல்லாத நிலப்பரப்பு (Nuclear Free Zone) என்று சொல்வார்கள். சி.டி.பி.டி என்பார்கள்.என்.பி.டி என்பார்கள். விதவிதமான ஒப்பந்தங்களின் மூலமாக உங்களின் சுயாட்சியையும் கண்னியத்தையும் முடக்கிப் போடுவதற்கும் வளைத்துச் சாய்ப்பதற்கும் முயல்வார்கள். இவையெல்லாமே அமெரிக்காவின் விரல் அசைவில் போடப்படுகின்ற ஒப்பந்தங்கள்.

போதக்குறைக்கு அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள், உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகளைப் பரப்பி வேரூன்றியிருக்கும் படைத்தளங்கள் ஆகியவற்றின் மூலம் உலகம் முழுவதையும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையும் தன்னுடைய கிடுக்குப் பிடியில் இறுக்கி வைத்திருப்பதில் அமெரிக்க வெற்றி பெற்றிருக்கின்றது. அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் எதனையும் தீர்மானிக்கின்ற உரிமையும் சுதந்திரமும் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது.

பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து தேசப் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டாலே அமெரிக்காவிடமிருந்தும் அதன் நேச நாடுகளிடமிருந்தும் மிரட்டல்களும் உருட்டல்களும் வரத் தொடங்கி விடுகின்றன.
இவ்வாறாக,நாட்டின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் தம்முடைய உரிமையையும் சுதந்திரத்தையும் முழுமையாக இழந்து நிற்கும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக குவைத்,சவூதி அரேபியா, மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகள்,சோவியத் யூனியன் சிதறிய பிறகு தோன்றிய ஒன்பது மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம்,

இவ்வாறாக, ஒரு நாட்டின் அரசாங்கத்திடமிருந்து பொருளாதாரம், வெளிநாட்டு வணிகம், வெளியுறவுகள்,பாதுகாப்பு போன்ற அதிமுக்கியமான துறைகளில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயலாற்றுகின்ற உரிமை பறிக்கப்படும்போது இந்தத் துறைகள் யாவும் இவை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் உலகமயமாக்கப்படும்போது அந்த அரசின் அந்தஸ்தும் அதிகாரமும் நகராட்சியளவுக்கு சுருங்கிவிடுகின்றது.

கொரிய எழுத்தாளர் ‘ஜெரீமி சி புரூக்’ மிகச் சரியாக தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார்: உலகமயமாக்கல் என்பது உண்மையில் மற்றெல்லா பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். உலகமயமாக்கல் என்கிற பெயரில் தொடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுத் தாக்குதலுக்கொதிராகத் தத்தமது பண்பாட்டைப் பாதுகாப்பதற்கான போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றே ஆக வேண்டும். இங்கு எவரும் அப்பாவியான பார்வையாளராக முடங்கி இருக்க முடியாது.

Tuesday, April 17, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன?:உலகமயமாக்கலின் உண்மை முகம்.


"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  "அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?" என்றார்.


நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?


உலகமயமாக்கல் என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச  முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.


அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?


பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.

உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

1. பொருளதாரம்


முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?

முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.
இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம்,ஜனநாயகம்,விடுதலை,சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.

ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள்,வெளிநாட்டு ஆலோசகர்கள்,உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன்,எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.

அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.

இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.
அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.


நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும்.அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு,ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.

உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.

2.வெளிநாட்டு வணிகம்


இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.

ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)

வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.

சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?

யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?

இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

இன்னும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்

ஆதாரங்கள்: நூல் உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

Sunday, April 15, 2012

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!



நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களுடைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌,
சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர், என மக்களிடம் விஷமம் செய்து, கடும் கலவரத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அந்த கயவனின் பெயர், G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19, 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயது தான் ஆகிறது என்றும், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அவனை காப்பாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர், ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட அவனை, நேற்று பத்திரிக்கையாளர் முன்பு, போலீசார் ஆஜர் படுத்தினர். மேலும், விஷமி சிவகுமார் மீது IPC 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நன்றி:www.maruppu.in

Saturday, April 14, 2012

சிசுக் கொலை தீர்வு என்ன?

அண்மையில் மூன்று மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை எனும் செய்தியை படித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண் சிசுக் கொலையை பற்றி பதிவு எழுதலாம் என்று அதற்கான கூடுதல் தகவல்களுக்காக கூகுளில் போய் தேடிப் பார்த்தால் இதுபோன்ற பாதகக் கொலைகள் இறைந்து கிடக்கின்றன.உதராணத்திற்க்கு ஒரு சில தேடல் முடிவுகளை தருகிறேன் பாருங்கள்.

1.பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதந்தை கைது. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10, 2012, 13:48 [IST]. போபால்: மத்திய ...

2.2 நாட்களுக்கு முன்னர் – சங்கராபுரம் அரசு பஸ்சில் பிணம்: பெண்-குழந்தையை கொன்றகொலையாளி கைரேகை சிக்கியது; தனிப்படை போலீஸ் தீவிரம்.

3.பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையைகிணற்றில் வீசி கொன்ற தந்தைஇரவில் தூங்க செல்வதற்கு முன்குழந்தையைஉடல் முழுவதும் ...

4. சங்குரூர்: பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையை கொன்றதந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து பஞ்சாப் கோர்ட் அதிரடி தீர்ப்பு ...

5.Search ஜோதிடரின் பேச்சைக்கேட்டு மாதபெண் குழந்தையை கொன்ற

6.1 மார்ச் 2012 – கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தனக்குப் பிறந்த பச்சிளம்பெண் குழந்தையை கொன்றநிகிதா அகர்வால் என்னும் அப்பெண் இதுவரை ...

மேலேயுள்ளவைகள் குழந்தைகள் பிறந்த பிறகு கொன்றவைகளில் மீடியாக்களின் பார்வைக்கு வந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே இன்னும் எத்தனை குழந்தைகள் அன்றாடம் கொல்லப்படுகின்றனவோ? குழந்தையை பிறக்க விட்டாதானே என்பது போல் கருவிலேயே வைத்து கொல்லப் படுகின்ற சிசுக்கொலை,என்ற கருக்கலைப்பை பற்றிய புள்ளி விபரங்களை பார்த்தால் இன்னும் அதிர்ச்சியடைவீர்கள்.
உலக அளவில்ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்.



நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது. இதுபோன்ற கருக்கலைப்பு பொதுவாக திருமணம் ஆகாத பெண்களின் விஷயத்தில்தான் செய்யப்படுகிறது என்பது கூடுதல் வேதனை.


பொதுவாக திரைமறைவாக நடைபெறும் கருக்கலைப்பில் அரைகுறை வைத்தியர்களும் அறிவோ அனுபவமோ இல்லாத செவிலியர்களும் ஈடுபாடுகிறார்கள். அவற்றில் வயிற்றில் வளரும் குழந்தை செத்து விடுவதுடன் தாயின் வாழ்வும் முடிந்து விடுகிறது. இது எத்தகைய கொடுமை?


இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்த அன்றைய அறியாமை அரபு சமூகம் பிறந்த பெண் குழந்தைகளைஅற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கித்தது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: 


பார்க்க: 16:58   وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (குர்ஆன்: 16 58)


16:59   يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ ۚ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ۗ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (குர்ஆன் 16:59)


சரி இந்த சிசுக் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன?
பிரச்சனை சிக்கலானது அறிவுரை, உபதேசத்தினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.சரி தீர்வுஅடுத்த பதிவில் தொடரும்.

Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடித்து வைக்கப்பட்டது.

அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.

அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.

தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போயுள்ளது.

போலீஸ் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அமீரைத் தொடர்புபடுத்தி பொய்யான வழக்குகள் தொடுத்த கதை இன்னும் வேதனையானது. பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக அமீர் அந்நாட்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளார்.12.2.1997 இல் பாகிஸ்தான் சென்ற அவர் 13.2.1998 அன்று அங்கிருந்து நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களித்தபடி அவரால் ஆவணங்கள் கொண்டுவர இயலவில்லை. இத்தகவல்களை உளவுத்துறையினரிடமிருந்து தெரிந்துக் கொண்ட டெல்லி போலீஸார் அவரை இந்தக் குண்டுவெடிப்புச் சமபவங்களுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பாகிஸ்தான் சென்ற அவரை,அங்கு சென்று பயிற்சி பெற்று வந்தாகக் கதை கட்டினர்.

18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.

தன்னை சந்திக்க வருபவர்களிடம் அமீர் கேட்கும் கேள்வி இதுதான் : “நான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டேன். ஹாஸிம்புராவில் பல முஸ்லிம்களைக் கொன்று குவித்த போலீஸ்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?” அமீர் மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வியும் இதுதான்.

நன்றி : 7.2.2012 ‘ஹிந்து ஆங்கில நாளிதழ்
நன்றி : சேயன் இப்ராஹிம்
நன்றி : சமரசம்