Monday, May 2, 2011

இஸ்லாம் vs. கம்யூனிஸம் ஒரு பறவை பார்வை




இஸ்லாம் மக்களுக்கு நல்லதையே செய்திட வேண்டும் என்று வாதாடுகின்றது. எல்லா காலங்களுக்கும், எல்லா சமுதாயங்களுக்கும் இஸ்லாம் ஒன்றேதான் வழிகாட்டும் வல்ல மார்க்கம். கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இஸ்லாமிய செயலிழந்து ஒருவித மந்த நிலையில் இருந்து வருவதால் இஸ்லத்தின் பொருளாதாரச் சட்டங்களும் செயலற்றவைகளாக இருந்து விட்டன.

அப்படியானால் ஏன் நாம் நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திட இஸ்லாத்தையும்,நமது பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிட கம்யூனிஸத்தையும் பின்பற்றக் கூடாது? அப்படி செய்வதனால் கம்யூனிஸம் நமது சமுதாய அமைப்பையோ அல்லது சமுதாய அமைப்பின் ஏதேனும் ஒரு பகுதியையே பாதிக்காது.

இதனால் நாம் நமது ஒழுக்கப்பண்புகள், நமது சமுதாய நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாதுகாக்கின்றவர்களாகவும், அதே நேரத்தில் நமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மிகவும் நவீனமானதொரு கொள்கையும் கொண்டவர்களாக திகழலாம்.
இப்படி ஒரு கருத்தை எடுத்து வைத்து முஸ்லிம்களிடையே சபலத்தை ஏற்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால சூழ்ச்சியின் நவீன கண்டுபிடிப்பாகும்.

முதலில் அவர்கள் கீழை நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இஸ்லாத்தை எதிர்த்திட தலைப்பட்டனர். இதனால் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின்பால் இருந்த பிடிப்பு அதிகரித்திடவே செய்தது இதை கண்ட கம்யூனிஸ்ட்கள்  தங்களுடைய தக்குதலை பசப்பு வார்த்தைகளால் திசை திருப்புகிறார்கள்.

கம்யூனிஸம் என்பது சமுதாயத்தில் நீதியை நிலை நாட்டுதல் என்பதன் மற்றொரு பெயரேயாகும்.கம்யூனிஸம், அரசு தனது குடிமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திட கடமைப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகின்றது,இஸ்லாம் இவற்றையே அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லுகின்றது.ஆகவே கம்யூனிஸம் இஸ்லாத்தின் எதிரியல்ல.

இஸ்லாம் கம்யூஸத்தின் எதிரி என்று சொன்னால்,இஸ்லாம் சமுதாயத்தில் நீதியை நிலைநாட்டிட விரும்பவில்லை என்று பொருளாகிவிடும். இப்படி யாராவது சொல்வார்களா? நிச்சயமாக சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட எந்தக் கொள்கையையும் இஸ்லாம் எதிர்ப்பதில்லை.

இப்படி பசப்பு மொழி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள் கம்யூனிஸ்ட்கள்.
இத்தகையசூழ்ச்சிவாதம்இதற்கு முன்னால் ஏகாதிபத்தியவாதிகளால் எடுத்து வைக்கப்பட்டதேயாகும். இந்த ஏகாதிபத்தியவாதிகளும், முதலில் இஸ்லாத்தின் மீது எதிர்ப்புக் கணைகளையே எடுத்து வீசினார்ஆனால் அவை முஸ்லிம்களை சலனப்படுத்தவில்லை

மாறாக முஸ்லிம்கள் தங்களை இதுபோன்ற பிதற்றல் வாதங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தலைப்பட்டனர்.தங்களுடைய எதிர்ப்புவாதம் எடுபடாமல் போகவே அவர்கள் வேறு விதமாக சூழ்ச்சியைத் திருப்பினர்
அப்போது அவர்கள் மேற்கொண்ட தந்திரவாதம் இதுதான்:மேலை நாடுகள் கீழை நாடுகளில் சிறந்ததொரு கலாச்சாரத்தை பரப்பிடவே முனைகின்றன. இஸ்லாம் எவ்வாறு கலாச்சராத்தைநல்ல  பண்பாட்டை எதிர்க்கும்? அதுதான் பண்பாட்டின் பாசறையாயிற்றேஇதோடு அவர்கள் விடவில்லை.


நீங்கள் இந்த மேலைநாட்டு நாகரிகத்தை கடைப் பிடியுங்கள்.அதே நேரத்தில் நீங்கள் உங்கள் மதம் விரும்புவது போல் நோன்பிருங்கள், தொழுகையும் நிறைவேற்றுங்கள்என்றும் சொன்னார்கள்.
ஒரு முறை இந்த முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தினுள் வந்துவிட்டார்களேயானால், அவர்கள் தங்களது மதத்தை மறக்க ஆரம்பித்துவிடுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கி இஸ்லாத்தை மறந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம்.இதையே அவர்கள் நிறுபித்துக் காட்டினார்.

இதன் விளைவாக காலப்போக்கில் இஸ்லாம் என்றால் என்ன எனபதையே தெரியாத ஒரு தலைமுறை தோன்றியது. இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியுமுன்னே, எந்தக் காரணமும் இல்லாமல் இஸ்லாத்தை வெறுக்க ஆரம்பித்தனர்.

இதே சூழ்ச்சி முறையைத்தான் கம்யூனிஸ்ட்கள் இன்று பின்பற்றிட முயற்சிக்கின்றனார் அவர்கள் சொல்லுகிறார்கள். முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இருக்கட்டும்; தொழுகைகையை நிறைவேற்றட்டும்; நோன்பிருக்கட்டும்; இன்னும் இதுபோன்ற கடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும்; நோன்பிருக்கட்டும்;இன்னும் இது போன்ற கடமைகளை தடையின்றி நிறைவேற்றட்டும். கம்யூனிஸத்தை அவர்களின் பொருளாதாரக் கொள்கையாக மட்டும் ஏற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் கம்யூனிஸம் எந்த விதத்திலும் இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. அப்படி இருக்க முஸ்லிம்கள் கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்?

முஸ்லிம்கள் ஒரு முறை கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்வார்களேயானால், காலப்போக்கில் அவர்கள் கம்யூனிஸத்தால் ஆட்கொள்ளப்பட்டுவிடுவர். அதன் மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாம் இந்த உலகில் சாதிக்க விரும்பும் இலட்சியத்தையும் மூட்டை கட்டிவைத்துவிடுவார்கள். ஏனெனில் நாம் வாழும் உலகம் விரைவான மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.அதில் பெரிய மாற்றங்களைக் கூடச் செய்வதற்கு சிறிதளவு காலமே போதுமானது.

இதைத் தெரிந்திருந்தும், சில முஸ்லிம்கள் தங்களை கம்யூனிஸத்திற்கு அடிமைப்படுத்திக் கொண்டார்கள். ஏனெனில் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.தாங்கள் சிந்தனையில் ஈடுபடதேவை இல்லை. சில இலட்சியங்களை நோக்கி நடப்பதில் ஏற்படும் கஷ்டங்களுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

இன்னும் இதுபோன்ற மனோ நிலையைக் கொண்ட முஸ்லிம்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு கற்பனை உலகில் சஞ்சரிப்பதை நாடுகின்றனர். தாங்களே சிந்தித்து தங்களது வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக தங்களை அடுத்தவர்கள் வழி நடத்தட்டும் என்று வாளா இருந்து விடுகின்றனர்.

இங்கே நாம் ஒன்றைக் கவணிக்கவேண்டும். அதாவது இஸ்லாம், தனது கொள்கைகளுக்கு எதிராக இல்லாத கொள்கைகளை  எதிர்ப்பதில்லை.
உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்ல. ஓரிரு விஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும், உண்மையில் அது இஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்ல.

தங்களிடம் ஏற்கனவே வலுவானதொரு கொள்கையை கொண்டிருக்கும் முஸ்லிம்கள், கம்யூனிஸத்தையோ அல்லது முதலாளித்துவத்தையோ அல்லது சோஷயலிசத்தையோ ஏற்றுக்கொள்ள தேவை இல்லை. இவைகள் ஓரிரு விஷயங்களில் இஸ்லாத்தைப்போல் காட்சியளிப்பினும் சரியே!

இறைவன் திருமறையில் கூறுகின்றான்:
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தான் பாவிகளாவார்கள்”(அல்குர்ஆன் 5:47)

நாம் உண்மையிலேயே கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ளலாமா?
அப்படி அதை ஏற்றுக்கொண்ட பின்னரும் முஸ்லிம்களாக வாழலாமா? வாழ முடியுமா?
                       

1 comment:

  1. உண்மை என்னவெனில் கம்யூனிஸம் இஸ்லாத்தின் கொள்கையை ஒத்ததல்ல. ஓரிரு விஷயங்களில் அது இஸ்லாத்தைப் போன்று காட்சியளித்தாலும், உண்மையில் அது இஸ்லாத்தைப் போன்ற ஒன்றல்

    put forward your arguments

    ReplyDelete