Friday, December 2, 2011

என் தோழனே நியாயமா....


இந்து
இஸ்லாம்
கிறிஸ்துவம்
இவை மூன்றும் மதங்கள் என்றாய்.!


முருகன்
அல்லாஹ்
இயேசு
இது அவர்களின் கடவுள் என்றாய்.!


திரிசூலம்
சிலுவை
பிறை
இவை அவர்களின் அடையாளமென்றாய்!


தீபாவளி
ரம்ஜான்
கிருஸ்துமஸ்
அவர்கள் கொண்டாடும் பண்டிகை என்றாய்.!

பெருமித பார்வைக்கு பிறகு பதிலளிக்க எனக்கு வாய்ப்பளித்த போது

மேட்டுக்குடி வர்க்கம்
நடுத்தர வர்க்கம் 
உழைப்பாளி வர்க்கம்
இப்படி மத பிரிவினர் உன்னிடம் இல்லையா? என்றேன்

கார்ல் மார்க்ஸ்
ஸ்டாலின்
மாவோ துங்
இவர்கள் உன் குல தெய்வமில்லையா? என்றேன்

கதிர் அறிவாள் சுத்தியல்
செங்கொடி
சிவப்பு வர்ணம்
இது உன் அடையாளமில்லையா? என்றேன்

சோவியத் புரட்சி-  நவம்பர் 17
கம்யூனிச தியாகிகள் நினைவு தினம்
ஸ்டாலின் பிறந்த நாள் தினம்
இவை நீ கொண்டாடும் பண்டிகை இல்லையா? என்றேன்..


அதுவரை
அகல விழிதிறந்து என்னை நோக்கிய உன் பார்வை 
பதில் தர மறுத்து அமைதியாக மண்ணை நோக்குவதேன்...?

13 comments:

  1. மாப்ள நல்ல கேள்வி!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    Lakshmi said...
    சரியா கேட்டீங்க.

    விக்கியுலகம் said...
    மாப்ள நல்ல கேள்வி!

    G u l a m said...
    சரியா கேட்டீங்க மாப்ள..!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஹா ஹா ஹா...

    செம செம....

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  4. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 3, 2011 at 12:06 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அருமையான கேள்விகள் "ஊருக்குதான் உபதேசம் எங்களுக்கில்லை என்பது இவர்களுடைய வாதம்" என்னத்த சொல்ல‌

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.ஹைதர் அலி...

    ///பெருமித பார்வைக்கு பிறகு பதிலளிக்க எனக்கு வாய்ப்பளித்த போது///

    விமர்சனம் செய்தால் அதுக்கு மட்டும் எங்கே எப்போது சகோ வாய்ப்பு அளித்தார்கள்..?

    ReplyDelete
  6. நியாயமான கேள்வி சகோ .இன்று என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் காண வேண்டும் .மிக்க நன்றி சகோ
    பகிர்வுக்கு .....

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    பதில் இல்லாத கேள்விகள் என்று தனியாக பதிவுபோடும் அளவிற்கு கேள்விகள் குவிந்துகொண்டே வருகிறது.
    ஆனால் எப்போதும் பதில் வராது என்பது கசப்பான உண்மை.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஆஹா... வசன கவிதை அருமையா வருதே உங்களுக்கு ;-)

    செமையா ரசிச்சேன்.

    ReplyDelete
  9. நன்றி சகோ அருமையான வரிகள்..

    மனதை கோயிலாக்கு மனிதர்கள் முழுக்கக் கடவுள்களே...
    இதை நினைத்தால் என்றும் நிம்மதியே..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    ReplyDelete
  10. நல்ல கேள்வி, நல்ல கவிதை; நல்ல பதிவு!

    ReplyDelete
  11. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  12. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete