Tuesday, February 28, 2012

விஷ உணவும்,கடன் பயங்கரவாதமும்-2

இந்த பதிவின் முதல் பகுதியை பார்வையிட இங்கே அழுத்துங்கள் இன்னும் சிறிது கடன் பயங்கரவாதத்தை பற்றி பார்ப்போம்.
“1995 அல்லது 1996-இல் நாங்கள் வாங்கியது என்னவோ 5 பில்லியன் டாலர் மட்டுமே. இதுவரை 16 பில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்து விட்டோம் . ஆனால் இன்னும் 28 பில்லியன் டாலர் பாக்கி இருக்கிறது என்கிறார்கள்.அந்திய நிறுவனங்களின் அநியாயவட்டி விகிதம்தான் 28பில்லியன் டாலர் ஆகிவிட்டது. உலகிலேயே மோசமான பொருள் எது என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிதான் அது.(”2008-இல் ஒகினாவாவில்நடந்த ஜி8 உச்சி மாநாட்டில் நைஜீரியா நாட்டு அதிபர் ஒபாஸஞ்சோ வயித்தெறிச்சலுடன் கூறியது.)

நைஜர் என்கிற ஆப்பிரிக்க நாடு கல்வி,மருத்துவம் ஆகிய துறைகளுக்கு ஒதுக்குகின்ற தொகையைவிட மூன்றுமடங்கு அதிகமான தொகையை கடன் தவணையும் வட்டியையும் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக மூன்றாம் உலக நாடு தன்னுடைய பணத்தில் 42 சதவீதத்தை கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்குகின்றது.28 சதவீதத்தை ராணுவத்துக்கும் 16 சதவீத்த்தை ஆட்சி செயல்பாடுகளுக்கும் ஒதுக்குகின்றது.இவ்வாறாக மருத்துவம், சுகாதாரம், கல்வி, சாலைவசதி, உள்கட்டமைப்பு,மின்சாரம், குடிநீர்வசதி போன்றவற்றை எஞ்சிய 13 சதவீதத் தொகையில் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்...! இதன் விளைவாக மிக முக்கியமான துறையான கல்வித்துறைக்கு இரண்டு சதவீதத்தொகையே ஒதுக்கப்படுகின்றது.இதுதான் மிக மிக வேதனையான கண்டிக்கத்தக்க நிலை!

சமீப ஆண்டுகளில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்க நாடுகளே...!

ஸஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகள் மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் (100 கோடி) டாலர்கள் வட்டியாகவே கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.


இதன் காரணமாக இந்த நாடுகள் பற்பல மோசமான பக்கவிளைவுகளை சந்தித்து திக்குமுக்காடிப் போய் நிற்கின்றன.

இதுவரை இந்த ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் இரண்டு கோடி மக்கள்(இது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்குச் சமம்) எய்ட்ஸால் உயிரிழந்துள்ளார்கள்.இந்தப் பத்தாண்டு முடிவதற்குள் ஆப்ரிக்காவில் 4 கோடி எய்ட்ஸ் அனாதைகள் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டடுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

23 ஆப்ரிக்க நாடுகள் இவ்வாறு மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியால் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து நின்றாலும் கடன், வட்டி ஆகியவற்றுக்கு செலவிடும் தொகையில் கால பங்கை மட்டுமே உடல்நலம், மருத்துவ வசதி போன்றவற்றுக்காக செலவிடுகிறார்கள்.

கடன் கொடுத்த வங்கிகள் இதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.தங்களிடம் முதலீடு செய்துள்ள பணக்கார வாடிக்கையாளர்கள் கொழுக்க வேண்டும்; பெரும் பணக்காரர்களாக மாற வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கிற ஒற்றை இலக்கு.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு இறந்து போகும் கென்யா தேசத்து இளம் விதவை குறித்தும் அவள் விட்டுச் சென்ற ஐந்து அனாதைக் குழந்தைகள் குறித்தும் அவர்களுடைய பதிவேட்டில் எதுவும் எழுதப்படுவதில்லை. ஆனால் கொலைப் பட்டினி கிடந்து மூச்சைவிட்ட அந்த விதவைத்தாயும் அவளுடைய குழந்தைகளும் கட்டாயத்தின் காரணமாக சாப்பிட்ட ஜி.எம்.உணவு பற்றிய விவரம் அவர்களின் பதிவேட்டில் எழுதப்படும் (அதென்ன ஜி.எம் உணவு என்கிறீர்களா? Genetically Modified Food- அதாவது உயிர் மூலக்கூறுகள் திருத்தப்பட்ட உணவு இவற்றை உண்பதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பது இதுவரை ஆராய்ந்தறியப்படவில்லை. இதனால் வளர்ந்த நாட்டு மக்கள் இதனை உண்பதில்லை.ஆனால் லாபம் சமபாதிக்கின்ற நோக்குடன் இந்த உணவுத் தானியங்களும் உணவு திணிக்கப்படுகின்றது.)
பட்டினியும் பஞ்சமும் மிகப்பெரும் மனிதத் துயரமாக இருக்கலாம்.ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த மனித துயரத்தையும் தங்களின் வணிக நலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. உலகில் மற்ற நாடுகள் ஒதுக்கித் தள்ளிய, விலை கொடுத்து வாங்க மறுத்த ஜி.எம்.உணவுகளை வலுக்கட்டாயமாக ஆப்ரிக்க மக்களுக்கு விற்று விடடார்கள்; விநியோகித்தார்கள்.தேர்வு செய்யும் உரிமை பிச்சைக்காரனுக்கு உண்டா, என்ன?


350 கோடி மக்கள் அன்றாடம் பசியாறவே பெரிதும் திண்டாடுகிறார்கள். ஆப்பிரிக்க மக்களிடம் உணவாக விஷக்காய்கறிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் பணம் படைத்தவர்களோ மாதம்தோறும் உதட்டுச் சாயத்துக்காக 66 பில்லியன் டாலர்கள்,கொறிப்புத் தீனிக்காக 92 பில்லியன் டாலர்கள் என வாரி இறைக்கிறார்கள்.

போதக்குறைக்கு ஏற்கனவே நொறுக்கப்பட்டு விட்ட பொருளாதார நிலையை இன்னும் சீரழிக்கும் வகையில் வளரும் நாடுகள் மீதான போருக்காக மாதம் தோறும் 40 பில்லியன் டாலர்கள் வாரி இறைக்கப்படுகிறது.

மெரில் லிஞ்சு என்கிற நிறுவனம் சில வருடங்களுக்கு முன் நடத்திய சர்வேயில் வெளியான குறிப்பு ஒன்று.இன்று உலகில் பத்து லட்சம் டாலர்கள் வருமானத்தை (மாளிகைகள் போன்ற வீடுக்ள், நிலபுலன்,தோப்புத்துறவு போன்ற அசையா சொத்துக்களைத் தவிர்த்து விட்டு சுளையான நிதிவருமானம் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க) ஈட்டுகின்றவர்களின் ஒட்டுமோத்த சொத்து மதிப்பு 2003 லேயே 28.8 டிரில்லியன் டாலர்களாக ஆகிவிட்டது என்று இந்நிறுவனம் கணித்துள்ளது.

உலகில் வறுமை எப்படிப் பங்கிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்ற ஆய்வையும் பாருங்கள்.

பரம ஏழைகளின் எண்ணிக்கை 110 கோடி இருக்கும் இதில் 40 கோடி பேர் தெற்காசியாவில் இருக்கிறார்கள். சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் 32 கோடி பேர் இருப்பார்கள். கிழக்கு ஆசியாவில் 27 கோடி. உலகின் எஞ்சிய பகுதிகளில் 11 கோடி.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு டாலர் கூட சம்பாதிக்க இயலாத தனிநபர்கள் வளர்ந்த நாடுகளில் அறவே கிடையாது என்றே உலக வங்கி தீர்மானித்து விட்டுள்ளது. ஆனால் உண்மைநிலையோ அதற்கு முற்றிலும் நேர்மாறானது.

1988-இலிருந்து 1993 வரை நாடுகளுக்கு மத்தியிலே மட்டும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து விட்டது. அடிமட்டத்தில் இருக்கின்ற 5 சதவீத ஏழைகள் இன்னும் அதிகமாக பரம ஏழை ஆனார்கள். அவர்களின் வருமானத்தில் 25 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால் கொழுத்த செல்வந்தர்களின் வருமானமோ 20 சதவீதம் வளர்ந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வின் பலவிதமான பரிமாணங்களை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

50 மில்லியனுக்கும் (5 கோடி) குறைவான மக்களுடைய வருமானம் 270 கோடி மக்களின் வருமானத்துக்குச் சமம். அமெரிக்க சமூகத்தில் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் பத்து சதவீத மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினரை விட அதிகமாக பணம் சம்பதிக்கின்றார்கள்.

அமெரிக்க சமூகத்தில் பத்து சதவீத மேல்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வருமானம் உலகின் 43 சதவீத ஏழைகளின் ஓட்டுமொத்த வருமானத்துக்கு இணையானது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் 200 கோடி மக்களின் ஒட்டுமொத்த வருமானத்துக்கு இணையாக 3 கோடி அமெரிக்கர்கள் சம்பாதித்து விடுகிறார்கள்.

அமெரிக்காவுக்குள்ளேயும் கூட ஏழை-செல்வந்தர் இடைவேளி பேருவம் கொண்டுள்ளது. ஒரு சதவீத செல்வந்தர்கள் அடிமட்ட 95 சதவீத மக்களின் ஒட்டுமொத்த வருமானத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் முற்று பெறும் (இறைநாடினால்)
கடன் பயங்கரவாதம்: தீர்வு என்ன?

19 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    மாஷாஅல்லாஹ்! வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள்!

    ReplyDelete
  2. ஐயோ உங்க பதிவ படிக்கவே தலைய சுத்துது. இதுல கடன் வாங்கி முதல விட மூனு மடங்குக்கு மேல வட்டிய கட்டும் நாடுகளை நினைச்சா பரிதாபமாக இருக்கு..!! ((

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மச்சான்
    சுடசுட... அடுத்த பதிவா...?

    //உலகில் வறுமை எப்படிப் பங்கிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்ற ஆய்வையும் பாருங்கள்.

    பரம ஏழைகளின் எண்ணிக்கை 110 கோடி இருக்கும் இதில் 40 கோடி பேர் தெற்காசியாவில் இருக்கிறார்கள். சஹாராவுக்கு தெற்கே இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் 32 கோடி பேர் இருப்பார்கள். கிழக்கு ஆசியாவில் 27 கோடி. உலகின் எஞ்சிய பகுதிகளில் 11 கோடி.
    //

    என்னத்த சொல்ல..?

    ReplyDelete
  4. //ஸஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே இருக்கும் நாடுகள் மட்டும் ஆண்டுக்கு 10 பில்லியன் (100 கோடி) டாலர்கள் வட்டியாகவே கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.//

    இவர்கள் இதிலிருந்து மீள்வது எப்போது?.

    உலக வங்கி என்றாலே கடன் கொடுக்கும் நல்ல நண்பன் எனும் ஒரு கற்பனையான தோற்றம் பாமரர்கள் மத்தியில் மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்டுவிட்டது சகோ...

    உங்கள் பதிவு அக் கற்பனைத் தோற்றத்தை மிக அருமையாக கிழித்து எறிகிறது.

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!!!!...

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    மிக அவசியமான சிறந்ததொரு தொடர்.
    அடுத்த பதிவுதான் முக்கியத்துவம் வாய்ந்தது..!

    ///உலகிலேயே மோசமான பொருள் எது என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிதான் அது.///

    அவருக்கு நான் ஒன்று சொல்லட்டுமா சகோ...?

    உலகிலேயே மோசமான அடிமுட்டாப்பயல் யார் என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிக்கு கடன் வாங்கிறவன்தான் அவன்.

    "அப்போ சாதாரண வட்டிக்கு கடன் வாங்கினால்..?

    ---என்று அவர் திருப்பிக்கேட்டால்...

    "அவன் சாதாரண முட்டாள் மட்டுமே" என்பேன்..!

    ReplyDelete
  6. sariyaana oru aayvu!

    nam naadu yosikka vendum!

    ReplyDelete
  7. சலாம் சகோ

    சிந்திக்க வைக்கும் பதிவு. ஆனால் சிந்திக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  8. நமது நாடும் எல்லாவற்றிற்கும் உலக வங்கி, ஐ எம் எப் மற்றும் கடன் கொடுக்கும் எல்லா வங்கிகளிலிருந்து கடன் வாங்கி தள்ளுகிறது. அதுவும், மத்திய அரசு தனியாக, மாநில அரசு தனியாக .. கொஞ்சம் கொஞ்சமாக இது நகராட்சி வரை வந்து விட்டது. நைஜீரியாவின் நிலைக்கு நாம் போகப்போகும் நாள் அதிக தொலைவில் இல்லை!

    ReplyDelete
  9. /* உலகிலேயே மோசமான அடிமுட்டாப்பயல் யார் என நீங்கள் என்னிடம் கேட்டால் நான் ஒன்றே ஒன்றைச் சொல்வேன்: கூட்டு வட்டிக்கு கடன் வாங்கிறவன்தான் அவன்.

    "அப்போ சாதாரண வட்டிக்கு கடன் வாங்கினால்..?

    ---என்று அவர் திருப்பிக்கேட்டால்...

    "அவன் சாதாரண முட்டாள் மட்டுமே" என்பேன்..! */

    சகோ முஹம்மது ஆசிக்,

    நீங்க பின்னூட்டவாதி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள் சகோ. எல்லாம் உடனே கிடைச்சிரனும், சம்பாதித்து பொறுமையா வாங்குவமே என்ற எண்ணம் இல்லை. அப்புறம் குத்துதே கொடயுதேன்னா??? கொடயத்தான் செய்யும். அந்த உலக வங்கி கம்முனாட்டி தான் வலை விரிக்கிறான்னா, நீங்க ஏன்யா போய் சிக்கிறீங்க????

    ReplyDelete
  10. ஏழை நாடுகளின், ஏழை மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, அவர்களை வட்டி என்ற வலையில் விழ வைத்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அனைவர் மீதும் இறைவனின் சாபம் இறங்கட்டும்.

    ReplyDelete
  11. ஏழை நாடுகளின், ஏழை மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, அவர்களை வட்டி என்ற வலையில் விழ வைத்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அனைவர் மீதும் இறைவனின் சாபம் இறங்கட்டும்.

    ReplyDelete
  12. சலாம் சகோ ஹைதர் அலி,

    எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். இது வரை சரியான விடை கிடைக்கவில்லை. உலக வங்கிக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது. இப்பொழுது வட்டி பணம் வைத்து இருப்பார்கள். ஆரம்ப நிலையில் மில்லியன் கணக்கில் அவர்களால் எவ்வாறு கடன் கொடுக்க முடிந்தது????

    ReplyDelete
  13. இன்னொரு கேள்வி,

    எந்த நாடாவது வாங்கிய கடனையோ அல்லது வட்டியையோ திருப்பி கொடுக்காவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்????

    ReplyDelete
  14. சலாம் சகோ
    உலக வங்கி என்றால் இப்படிதானா?தெரியாத பல விசயங்களை தெரிந்துகொண்டேன்

    ReplyDelete
  15. வறுமையின் பங்கீட்டு ஆய்வு அலசல் அருமை.நிறையவே யோசிக்க வைக்குது பதிவு !

    ReplyDelete
  16. @Jafar Safamarva

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    அல்ஹம்துலில்லாஹ்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. @காட்டான்

    ///ஐயோ உங்க பதிவ படிக்கவே தலைய சுத்துது. இதுல கடன் வாங்கி முதல விட மூனு மடங்குக்கு மேல வட்டிய கட்டும் நாடுகளை நினைச்சா பரிதாபமாக இருக்கு..!! ((///

    பாவம் அவர்கள் இப்படி ஒபனாக கடனை எங்களால் கட்ட முடியவில்லை என்று சொல்லியும் அவர்கள் தள்ளுபடி செய்யவில்லை


    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. @G u l a m

    வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்

    வருகைக்கு நன்றி மச்சான்

    ReplyDelete
  19. @Syed Ibramsha

    //உலக வங்கி என்றாலே கடன் கொடுக்கும் நல்ல நண்பன் எனும் ஒரு கற்பனையான தோற்றம் பாமரர்கள் மத்தியில் மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்டுவிட்டது சகோ...

    உங்கள் பதிவு அக் கற்பனைத் தோற்றத்தை மிக அருமையாக கிழித்து எறிகிறது.

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!!!!...//

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோ

    ReplyDelete