Saturday, November 24, 2012

நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.பாகம் -2



அடிப்படை பேச்சு பயிற்சி சம்பந்தமான முதல் பாகத்தை இங்கே அழுத்தி வாசித்து விட்டு தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற தொடரில் ஒரு சிறப்பான பேச்சு எப்படி அமைய வேண்டும் என்கிற அடிப்படை விஷயங்களை பார்த்தோம். இந்த பகுதியில் நமது சொற்பொழிவில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

“எனக்கு அவ்வளவு சரியாக தெரியாது”
“ நான் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன்”
“ எனக்கு தெரிந்தவரை”
“ நான் இப்படி நம்புகிறேன்”
“ ஒருவரும் இல்லை”
“ எப்போழுதும்”
“ ஒரு பொழுதும் கிடையாது”
“ அனைவரும்”

இது போன்ற யூக அடிப்படையான வார்த்தைகளை தேவைப் படாமல், அவசியமின்றி உபயோகிக்க வேண்டாம்.

சொற்பொழிவுக்கான குறிப்புகளின் அவசியம்

நாம் ஒரு சொற்பொழிவை ஆரம்பிக்கும் முன் அதற்கான குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நாம் எழுதி வைத்திருக்கும் அந்த குறிப்புகளிலிருந்து நாம் பேச்சு திசைமாறி சென்று விடக்கூடாது, நாம் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை விட அந்த சமயத்தில் உதித்த வார்த்தைகள் பயன்படுத்துவதால் நமது சொற்பொழிவு சிறப்பாக போகிறது என்று நாம் நினைத்து கொண்டாலும் சரியே. ஏனேன்றால் குறிப்புகளில் இல்லாதவற்றை பேசும்போது இடையில் தடுமாறும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

நாம் கையில் வைத்திருக்கும் குறிப்புகளை அப்படியே வாசித்து காட்டக்கூடாது அதனை உள்வாங்கி பேச வேண்டும் அதே போல குறிப்புகளை சிலர் மறைக்க முயற்சி செய்வார்கள் அதுவும் தவறு.குறிப்புகளை மறைத்து வைத்து குனிந்து குனிந்து வாசிப்பதை பிறர் தெரியா வண்ணம் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளாதீர்கள் நாம் நிற்பது மேடை பார்வையாளர்களின் கவனம் முழுவதும் உங்கள் மீது தான் இருக்கும். குறிப்புகளை நாம் சிரமம் எடுத்து தயாரித்து இருக்கிறோம் அதை ஏன்? மறைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு இருங்கள். பேசும் போது கைகளை எப்படி அசைக்கிறோம் அதிக்கபடியாக அசைக்கிறோமே என்கிற மன எண்ணங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏற்படும் அதை தவிர்க்க குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

ஒப்புவிக்கும் பேசும் நுட்பங்கள் (Delivery Techniques) முக்கியமானவை

சரியான முறையில் ஒப்புவிக்காமல் சின்னபுள்ளைகள் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கிற மாதிரி மூச்சு விடாமல் பேசுவது அழகல்ல மிக சிறந்த குறிப்புகள் கொண்ட பேச்சுகள் இதுபோன்ற தவறான ஒப்புவிக்கும் முறையால் பார்வையாளரின் கவனத்தை பெற முடியாமல் போய்விடும்.

மறுபடியும் நாம் பேசியதை பார்த்து சரிபண்ணிக் கொள்வதற்காக நமது பேச்சை பதிவு செய்து கொள்ளலாம் நமது பேச்சை அசைபோடுவது திரும்ப கேட்பதின் மூலம் நாம் விட்ட குறைகளை அடுத்தமுறை களைய உதவியாக இருக்கும் நமது பேச்சை ஒலியாக பதிந்து கொள்வதின் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது நம் வளர்ச்சியில் அக்கறையுள்ள நண்பர்களிடம் கொடுத்து அந்த பேச்சு எப்படி இருக்கிறது என்பதற்காக சரியான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் மொழி குரல் மற்றும் பார்வை தொடர்புகள் 

உடல் மொழி (Body language)

இராணுவத்தில் ஆள் எடுக்க நிற்பது போல் இல்லாமல் கால்களை ஓட்டி வைத்து அசையாமல் நின்று பேச வேண்டியதில்லை. அதே சமயத்தில் டேபிளில் சாய்ந்து கொண்டும் ஒருசாய்த்து கொணி நின்று கொண்டும் பேசக்கூடாது. இயல்பாக நின்று பேசினால் போதுமானது பேசும்போது முகபாவங்கள் இயல்பாக இருக்க வேண்டும் செயற்கையாக சிரித்தல் அல்லது கோபப்படுவது போல் நடித்தல் இவைகளை தவிர்க்க வேண்டும் அது இயல்பாக பேச்சின் ஓட்டத்தில் வர வேண்டும். பறவை பறக்க ஆரம்பித்த பின் கால்களை மறந்து விடுவது போல் பேச்சில் நாம் இயல்பாக ஒன்றிட வேண்டும்.

பார்வை மூலம் உள்ள தொடர்புகள்

பேச்சின் போது பார்வைகள் மூலம் ஒரு தொடர்பை கேட்பவருக்கும் நமக்கும் இடையே ஏற்ப்படுத்த வேண்டும். அதே சமயத்தில் கண்ணியம் பேன வேண்டும் எதிர்ப்பால் பெண்களை குறுகுறுவேன்று பார்த்து விடக்கூடாது அது இயல்பாக இருக்க வேண்டும். ஒருவரை மட்டும் பார்த்து பேசக்கூடாது. ஒருவரை நாம் பார்க்கும் போது அவர் நம்மை பார்த்தால் மற்றவரின் மீது பார்வையை திருப்பி விட வேண்டும். தலைக்கு மேல் ஆகாயத்தை பார்த்து பேசுவது தரையை பார்த்து பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நம்முடைய பேச்சுஒலி மட்டும் வெளியில் பரவினால் போதும் என்கிற மனநிலையோடு பேசக்கூடாது.டி.வி. யில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லது பேச்சாளர் நம்மை நோக்கி பேசுவது போல் இருக்கும் அல்லவா அதுபோன்று முயற்சிக்கலாம்.

குரல்


பிறர் கேட்பதற்காகத்தான் பேசுகிறோம் ஒரு சில வார்த்தைகள் வெளியே வந்து மீத வார்த்தைகளை முனுமுனுப்பது போல் மேதுவாக பேசி முழுங்கி விடக்கூடாது. மைக் இல்லையென்றால் அதற்கேற்றவாறு நம் குரல் மட்டத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு கேட்கிற என்பதை ஒரு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


சுருதி

சுருதியை சரி பண்ணுவது அவ்வளவு எளிமையான விடயம் அல்ல சரி செய்வதற்கான முதல் படி சுருதி தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் காண வேண்டும்.அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டிய விடயத்தை அழுத்தி குரல் மட்டத்தை உயர்த்தி பேசக்கூடாது அதே சமயத்தில் கருத்து அழுத்தம் கொடுத்து சொல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் சுருதி மிகவும் குறைந்து விடவும் கூடாது குரல் மட்டம் என்பது நம் சொல்ல வருகின்ற கருத்துக்கு ஏற்றவாறு தேவைபடும்.
நாம்ம்பேசுவதை விட விரைவாக மக்களால் கேட்க முடியும் (சராசரியாக நிமிடத்துக்கு 800 சொற்கள் கேட்கலாம்) ஆனால் 250 சொற்களே பேச முடியும்) அதனால் கேட்பதற்கு ஒன்றுமில்லாமல் நீன்ட நேர இடைவெளி விழுந்தால் கேட்பவரது கவனம் சொற்பொழிவிலிருந்து விலகிச் சென்று ஆட்கள் தான் இங்கு உட்காந்து இருப்பார்கள் மனது வெளியே வேறு சிந்தனையில் இருக்கும்  சாதாரணமாக பேசுவதை விட வேகமாக நாம் பேச வேண்டும் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய பேச்சு வேகத்தை நிர்ணயிப்பது கஷ்டம் இருந்தாலும் தெளிவில்லாமலும் உச்சரிப்புச் சொற்களில் தடுமாற்றம் ஏற்படாமல் இயன்றளவு வேகமாக நாம் பேச முயற்சிக்கலாம்.

இடையில் பேச்சை நிறுத்துவது

ஒரு சுவரஸ்யமான விடயத்தை சொல்லும் போது அல்லது சொல்ல வரும்போது இடையில் கொஞ்சம் நிறுத்தி சொல்லும் போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை  ஏற்படுத்தும் முக்கியமான ஒரு விடயத்தை அலசிவிட்டு முடிவு சொல்லும் போதும் சிறிது தாமதித்தும் நிறுத்தி சொல்வது சிறந்த பேச்சுக் கலை.
பேச ஆரம்பிக்க தயக்கம் காட்டுவது போலவே பலர் பேச்சை இறுதியில் எப்படி முடிப்பது என்பதிலும் அதிக தடுமாற்றங்கள் ஏற்பட்டு தயக்கத்தோடு நிறைவு செய்கின்றனர்.


பேச்சு வேகம்

திருத்தமாக பேசுவது சிறந்த சொற்பொழிவுக்கு இதயம் போன்றது ஒவ்வொரு சொல்லும் தெளிவாக உச்சரிக்கப்படுவதுடன் “உம்”  “ஹூம்” “வந்து....”  போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பேச்சை நிறுத்துதல்

சொற்பொழிவை ஆரம்பிக்கும் போது ஏற்படும் தயக்கம் போலவே சொற்பொழிவு முடிவை நெருங்கும் தருணத்தில் எவ்வாறு முடிப்பது என்பதிலும் பலர் தயக்கம் காட்டுகின்றனர். “நான் இதுவரை கூறியது என்னவேன்றால்...” என்பது போன்ற வசனங்களை திரும்ப திரும்ப சொல்ல முற்படுவார்கள். எனவே நாம் திட்டமிட்டபடியே பேச்சினை வழங்குவதும் “ இறுதியாக” “முடிவாக...” போன்ற சொற்களை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும் இருக்க முயற்சிக்க வேண்டும். வரையறுக்கப் பட்ட தொடக்கமொன்றையும் முடிவொன்றையும் திட்டமிட்டுக் கொள்வதே இதற்குரிய வழிமுறையாகும். இத்தகைய தொடக்கத்திலும் முடிவிலும் நாடகப்பாணிக்குரிய அம்சம் ஏதும் இருப்பதும் உகந்தது.

(இன்னும் தொடரும்)

21 comments:

  1. ஸலாம்

    பேச்சு பயிற்சி ... அருமை ... நீங்க எப்ப தாயீ ஆக போறீங்க ...:)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      ///பேச்சு பயிற்சி ... அருமை ... நீங்க எப்ப தாயீ ஆக போறீங்க ...:)///

      நான் ஏற்கனவே அழைப்பாளர் இல்லையா?? இந்த பதிவே அழைப்பளர்களை உருவாக்கும் பதிவு தானே???



      Delete
  2. அருமையான முயற்ச்சி சகோ...

    வித்தியாசமான களம்... எழுத நிறைய உழைப்பு தேவைப்படும்... தெரிந்தும் இறங்கி உள்ளீர்கள்...

    பல நல்ல விஷயங்களை அறிந்து கொண்டேன்... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ

      சும்மா எதையாவது எழுதுவதை விட இதுபோன்று பயனுள்ளவைகளை கொடுக்கலாம் என்ற எண்ணம் தான் சகோ

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. ஸலாம் சகோ.. அருமை... படிக்க படிக்க நான் அப்படியே பேசி பழகி பார்த்தேன்.... ஜெஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      வ இய்யாக்கும் தொடர்ந்து முயற்சியுங்கள்

      Delete
  4. நல்லதொரு வழிகாட்டல்! பயனுள்ள பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
    நீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்.சிறந்த ஒரு முயற்சி ,ஜசாக்கல்லாஹ் உங்கள் முயற்சி மேலும் தொடர அல்லாஹ் அருள் புரிவானாக !

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு

      வ இய்யாக்கும் சகோதரரே தங்களின் பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி

      Delete
  6. நல்லதொரு பதிவு !

    சிறப்பான தொடராக அமைய வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும்
      நன்றி சகோதரரே

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
    SUPER

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
    SUPER

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  10. நன்றி! நன்றி சீனி அவர்களே

    ReplyDelete
  11. தங்கள் பதிவுகளை ஈமெயில் மூலம் படிக்கும் வசதியை ஏற்படுத்தவும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்கிறேன் சகோதரரே

      Delete
  12. நல்லதொரு பதிவு !
    வாழ்த்துகள்..
    பேச்சாளன் உருவாக்கப்படுகிறான் கவிஞர் பிறக்கிறான்
    நீங்கள் உருவாக தளம் அமைக்கிறீர்கள்,

    ReplyDelete
  13. பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
    பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
    பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
    பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
    பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
    பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

    ReplyDelete