Wednesday, March 2, 2011

இஸ்லாமின் வரலாற்றுப் பாத்திரம்-புத்தக அறிமுகம்


இஸ்லாமை இன்றுசர்வதேசப் பயங்கரவாதமாகஅமெரிக்கா முன்னிறுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்துத்துவா சக்திகள் இஸ்லாமியரை எதிரியாகக் காட்டிவருகின்றன. சராசரி மனிதனிலிருந்து, “அறிவுஜீவிகள்வரை இஸ்லாம் குறித்து, தவறான தப்பெண்ணங்களே நிலவிவருகின்றன. இஸ்லாமியர் குறித்தும், ஒரு  பொய்யான பொதுப்புத்தி மக்களிடையே நிலவிவருகிறது. இஸ்லாம்- எதிர்ப்புச் சக்திகள் இந்தப் பொதுப்புத்தியைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்லாமியர்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்குவது இன்று சனநாயக வாதிகளின் முக்கியக் கடமைகளில் ஒன்று.

இஸ்லாம் தோன்றியதின் சமூகப் பின்னணி, அதன் வரலாற்றுப் பங்களிப்பு ஆகியன குறித்து இந்நூல் வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைக்கிறது. இஸ்லாம் குறித்து இசுலாம்-அல்லாதவர்கள் மத்தியில் நிலவிவரும் தவறான கருத்துக்களை மாற்றாமல், அடிப்படையில் ஒரு சமூக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியாது என இந்நூல் ஆசிரியர் உறுதியாகக் கருதுகிறார். அந்த வகையில் இந்துக்கள் மத்தியில் நிலவிவரும் தப்பெண்னங்களை நீக்க இந்நூல் பெருமளவு உதவும்.

இஸ்லாமை உயர்த்திப் பிடிப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்துக்களைக் களைந்தெறிய உதவுவது சனநாயக வாதிகளின் கடமை என்ற முறையில் இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளோம்.

இந்த வரிகளை படித்தப் பிறகு இப்புத்தகம் எத்தகைய தன்மையுடையது யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை ஊகித்திருப்பீர்கள் இஸ்லாமிய எழுத்தாளர்களைவிட சில சந்தர்ப்பங்களில் மற்று சித்தாந்த கொள்கையுடைய எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இப்புத்தகத்தைப் படித்தால் தெரிந்துக் கொள்வீர்கள்.

இப்புத்தகத்தின் சிறப்பம்சம் வரலாற்றுச் சான்றுகளை ஆதாரபூர்வமாக இந்தூல் பேசுகிறது ஒரு விடயத்தை சொன்னால் அதற்கான ஆதாரத்தையும் இந்நூல் சுட்டிக் காட்ட தவறுவதில்லை.

இந்நூலின் ஆசிரியரைப் பற்றி

எம்.என்.ராய் அவர்கள்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் 1887-ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாளன்று எம்.என்.ராய் பிறந்தார்
இவர் சோவியத் ருசியாவிற்கு வெளியில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் என்ற பெயர் எடுத்தவர்.

1920இல் சூலை-ஆகஸ்ட் மாதங்களில் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில்.லெனினால் தயாரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரையும் ராயால் தயாரிக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரையும்,கம்னியூஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. மாநாடு இரண்டு ஆய்வுக் கட்டுரையையுமே ஏற்றுக் கொண்டது.

இவரது அரசியலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒரு தீவிர தேசியவாதியாக தன் அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், அதே தீவிரத்தோடு ஒரு கம்யூனிஸ்டாக மாற்றம் பெற்று, பின் இறுதியில் ஒரு ஆக்கப்பூர்வமான தீவிர மனிதநேயவாதியாக விளங்கினார்.


இனி இந்நூலில் வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாத்தின் வரலாற்றுப் பாத்திரம் குறித்து எழுதிய குறிப்புகளையும் நான் கோடிட்ட பக்கங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இஸ்லாமின் நம்ப முடியாத வெற்றிக்கு ஆன்மீக காரணங்கள் இருந்தது போலவே, சமூகஅரசியல் காரணங்களும் இருந்திருக்கின்றன. இந்த முக்கியமான கருத்திற்கு ஜிப்பனின் பின்வரும் கூற்று சான்றாக விளங்குகிறது


"அன்றைய ஜொராஸ்டரின் மதத்தைக் காட்டிலும் மிகத் தூய்மையானதும் மோசஸின். கட்டளையைக் காட்டிலும் மிகத் தாரளப் பன்பும் கொண்டிருந்ததுமான, முகம்மதுவின் மதமானது பகுத்தறிவுக் கருத்தோடு மிகக்குறைவான முரண்பாட்டையும், ஏழாம் நூற்றாண்டின்போது கிறித்துவத்தின் எளிமையை எள்ளி நகையாடி வந்த மாயாவாதம், மூடநம்பிக்கை ஆகிய நம்பிக்கைகளோடு அதிக முரண்பாட்டையும் கொண்டிருந்தாகத் தோன்றுகிறது.
(நூல்: ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)

இஸ்லாமின் கண்கவர் வெற்றிக்கு அதன் தொடக்க காலத் தொண்டர்களின் இராணுவ வலிமையைக் காட்டிலும், அதன் விடுதலை, சமத்துவக் கோட்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மைக்கு மற்றொரு வரலாற்றாசிரியர் பின்வரும் சான்றை முன் வைக்கிறார்:

அராபியர்கள் வெற்றி கண்ட ஒவ்வொரு கிறித்துவ நாட்டின் விசயத்திலும் வரலாறு வாய்ப்புக் கேடாக ஒரு செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. அராபியர்கள் முன்னேறிச் செல்ல அந்நாட்டு மக்கள் சாதகமாக இருந்ததே அவர்களது வெற்றிக்குரிய காரணமாக  இருந்திருக்கிறது.
அரபு வெற்றியாளர்களைக் காட்டிலும் பெரும்பாலான கிறித்துவ அரசுகளின் நிர்வாகம் மிக மோசமான ஒடுக்குமுறை கொண்டதாக இருந்திருக்கிறது என்ற செய்தியானது அந்த அரசுகளுக்கு அவமானம் தரும் ஒரு செய்தியாகும்…..சிரியா நாட்டு மக்கள் முகம்மதுவின் சீடர்களை வரவேற்றார்கள்.

எகிப்தின் காப்டுகள்(மரபு வழி கிருஸ்த்தவர்கள்) அரபுகளின் ஆதிக்கத்தின் கீழ் தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொண்டனர். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பெர்பர்கள், ஆப்பிரிக்காவை வெற்றி கொள்ள அரபுக்களுக்கு உதவி புரிந்தனர் இந்த நாடுகள் அனைத்தும் கான்ஸ்டான்டிநோபிள் அரசின் மீது கொண்டிருந்த வெறுப்பின் காரணமாக, தங்களை முகம்மதியர்களின் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டார்கள்.
(பின்லே-“பைசாண்டியப் பேரரசின் வரலாறு)

கிறித்துவ மூட நம்பிக்கையால்.கிரேக்க அறிஞர்கள் பண்டைய கல்வி நிலையப் பதவிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்த கிரேக்க அறிஞர்களை கலீபாக்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டனர். இவர்களின் பணிக்கு உயரிய மரியாதை கிட்டி வந்தது.

அறிவாளிகள் பற்றி கலீபா அல்மேனஸ் சொல்லிருந்த கருத்துக்களை, அரபு வரலாற்றாசிரியரான அபுல்பேரானகயஸ் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.

"அறிஞர்கள்(ஆலீம்கள்) நபிமார்களின் வாரிசுகள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அவனின் சிறந்த,மிகப்பயனுள்ள ஊழியர்களும் இவர்களே.இவர்கள் பகுத்தறிவு நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
(நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்) 



இசுலாமும் இந்தியாவும் என்ற அத்தியாயத்தில்

பார்ப்பனிய ஆட்சியாளர்களின் ஒடுக்கு முறைக்குள்ளாகியிருந்த ஜாட்டுகள் இன்னும் இதர விவசாயச் சாதிகளின் உதவியோடு தான் முகம்மது பின் காசிம் சிந்துப் பகுதியை வெற்றிக் கண்டார்.(எலியட்:”இந்திய வரலாறு”)

பண்டைய இந்துப் பண்பாட்டின் உறுதியான ஆர்வலரான ஹேவல் முஸ்லிம்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்கள்பால் இரக்கமோ காட்டதவர்.இந்தியாவில் இஸ்லாம் பரவியது குறித்து அவர் முன்வைத்துள்ள சுவையான சான்று பின்வருமாறு:

இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டவர்களுக்கு,நீதிமன்றத்தில்,ஒரு முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனைத்து உரிமைகளும் கிடைத்து வந்தன. அங்கு நீதிமன்றங்களில் அராபியச் சட்டங்களையோ, பழக்க வழக்கங்களையோ அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. குர்-ஆனே அனைத்து வழக்குகளையும் தீர்மானித்து வந்தது. மதமாற்றம் என்ற இந்த வழிமுறையானது இந்துச் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களிடையே குறிப்பாக, பார்ப்பனியத்தின் கடுமையான விதிமுறைகளால்அசுத்தமான வர்க்கங்கள்எனக் கருதப்பட்டு வந்த மக்களிடையே வலுவான பாதிப்பைச் செலுத்தி வந்தது.
(ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி)

கடுமையான முஸ்லிம்- எதிர்ப்பு வெறி கொண்ட ஹேவலே கூட வெறுப்போடு ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். அது பின் வருமாறு

இந்து சமூக வாழ்வின் மீது முஸ்லிம்கள் அரசியல் கோட்பாடு செலுத்திய பாதிப்புகள் இரண்டு அம்சங்களைக் கொண்டிருந்தன.
ஒன்று, அது சாதி அமைப்பின் உக்கிரத்தை அதிகப்படுத்தி,அதற்கு எதிராக ஒரு கலகத்தைத் தட்டி எழுப்பியது.பெடோயின்களுக்கு(Bedoins காட்டரபிகள்) அது காட்டியிருந்த  மனதைக் கவரும் மயக்கத்தைப் போலவே இந்துச் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு கவர்ச்சியை அது காட்டியிருந்தது.. இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது. இதில் சிலர் தங்கள் சுயமான மேதமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். மறுமலர்ச்சியை போலவே இதுவும் சாராம்சத்தில் ஒரு நகர வழிபாடாக இருந்தது. நாடோடிகளை அவர்கள் கூடாரத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. சூத்திரனை கிராமத்திலிருந்து வெளிக் கொண்டு வந்தது. வாழ்க்கையில் முழு இன்பக் கிளர்ச்சி கொண்ட ஒரு மனிதகுல வகையை இது வளர்த்தியிருந்தது.
(ஹேவல்- நூல்: இந்தியாவில் ஆரிய ஆட்சி)

இப்படி புத்தகம் முழுவதும் வரலாற்று ஆதராங்களோடு விளக்கியிருக்கிறார் இஸ்லாத்தை ஆய்வுரீதியாக விளங்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்
அதே சமயத்தில் இப்புத்தகத்தில் ஒரு சில குறைபாடுகள் இல்லாமலில்லை

நூலின் பெயர்: இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
ஆங்கில ஆசிரியர்: எம்.என்.ராய்
தமிழாக்கம்:வெ.கோவிந்தசாமி
வெளியீடு:
விடியல் பதிப்பகம்
3.மாரியம்மன் கோயில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை-641015

14 comments:

  1. நல்ல புத்தகம், விமர்சனமும் நன்று. படிக்கத்தான் எனக்கு பேறில்லை... :(

    இன்ஷா அல்லாஹ் இந்தியா வரும்போது படிக்கிறேன். ஜஸாகல்லாஹு க்ஹைர்.

    வ ஸலாம்.

    ReplyDelete
  2. @அன்னு அவர்களுக்கு

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    ஜஸாகல்லாஹு க்ஹைர்

    இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பானாக

    உங்களுடைய கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி

    ReplyDelete
  3. அனைத்து மத்தத்தவரும் படிக்க வேண்டிய ஒரு நூள் விமர்சனமும் நன்றாக இருந்தது. நன்றிகள்

    ReplyDelete
  4. நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மீண்டும் ஒரு நல்ல நூல் அறிமுகம். நன்றி சகோ.ஹைதர் அலி. நல்ல கருத்துக்கள் செறிந்திருக்கின்றன.

    ஆனால், நன்கு விபரம் அறிந்த தாங்களே... //...ஒரு பிராமணக் குடும்பத்தில்...// ...என்று பதிவில் எழுதியது சரியல்ல சகோ.

    ///இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது///--புரியவில்லையா...?

    "கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்களின் ஒரு குடும்பத்தில்"--என்று சொன்னால், நாமே இந்த சாதீயத்தை அங்கீகரித்தது போல -- உண்மைப்படுத்தியது போல அல்லவா ஆகிவிடும்...? எனவே கவனம் தேவை.

    ReplyDelete
  6. @முஹம்மத் ஆஷிக்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..


    //ஒரு பிராமணக் குடும்பத்தில்......என்று பதிவில் எழுதியது சரியல்ல சகோ.//

    அந்த புத்தகத்தில் உள்ளது போலவே எழுதியிருந்தேன் மாற்றி எழுதினால் தவறாக போய்விடும் என்பதால் அப்படியே குறிப்பிட்டேன்.

    ///இஸ்லாம் சூத்திரனை ஒரு சுகந்திர மனிதனாக்கி அவனை உள்ளார்ந்த விதத்தில் பார்ப்பனர்களின் எசமானனாக உருவாக்கியது--புரியவில்லையா...?//

    இஸ்லாமிய ஆட்சியாளர்களின் அரசில் குலம் கோத்திரம் பார்க்காமல் பார்ப்பனர்கள் இருந்த பதவிகளைவிட மேலதிகாரி பதவிகளில் சூத்திரர்கள் இருந்தார்கள் என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

    //"கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்களின் ஒரு குடும்பத்தில்"--என்று சொன்னால், நாமே இந்த சாதீயத்தை அங்கீகரித்தது போல -- உண்மைப்படுத்தியது போல அல்லவா ஆகிவிடும்...? எனவே கவனம் தேவை.//

    நன்றி சகோ கண்டிப்பாக கவனத்தோடுதான் இருக்கிறேன்

    ஆனால் இதை இந்த புத்தகம் எழுதியவரின் கருத்தாக பார்க்கவும்

    ReplyDelete
  7. @ஹுஸைனம்மா

    உங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  8. அருமையா எழுதியிருகீங்க நண்பா
    முடிஞ்சா அந்த புக்கை கொஞ்சம் அனுப்பிவையுங்க நான் படிச்சிட்டு தர்றேன்.

    ReplyDelete
  9. @ராஜவம்சம்

    அனுப்பி வச்சுருவோம் நண்பா

    ReplyDelete
  10. Assalam Alaikkum!

    Nalladhoru Puththaghaththai ariyath hantheerkhal. Nandri thozharey!

    ReplyDelete
  11. @சுவனப்பிரியன்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    ஜஸாகல்லாஹு க்ஹைர்

    இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பானாக

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,அறிமுகமே சில சுவாரஸ்ய தகவலை கொண்டுள்ளது.இன்றைய சூழ்நிலைக்கு இந்த நூல் மிகவும் தேவையான ஒன்று.

    ReplyDelete