Saturday, April 23, 2011

யார் இந்த புத்தர்?,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம்



      முதலில் ஒன்றை தெளிவுப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறேன்.
புத்த மதத்தைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்ற என்னம் ஏன் ஏற்ப்பட்டது?
சில நன்பர்கள் தவறாக நினைப்பது போல் புத்த மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியோ.நையாண்டி செய்வதோ  ஒருமதத்தை அதன் கொள்கைகளை இழிவுப் படுத்தி இதை விட எனது மதக் கொள்கைதான் சிறந்தது என்று நிறுபிக்கிற நோக்கில் செய்யப்பட்ட ஒப்பாய்வுவோ அல்ல.

இன்னும் சொல்லப் போனால் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைப்படி அதற்கு அனுமதியும் இல்லை.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய அனைத்து சீர்திருத்தவாதிகளையும்,தூதர்களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்தியது ஒரு இடத்தில் கூட முஹமது நபி(ஸல்) அவர்கள்
மோஸஸ் (மூஸா) பொய் சொல்லிவிட்டார் இயேசு (ஈஸா) பொய் சொல்லி விட்டார் என்று ஒரு இடத்தில் கூட சொன்னதில்லை.

மாறாக அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த கண்ணியவன்கள் மீது இட்டுக்கட்டி பொய் சொல்லி விட்டார்கள் என்றே சொன்னார்கள் நீங்கள் திறந்த 
மனதோடு நபிமொழிகளையும் குர்ஆனையும் ஆய்வு செய்தால் இவைகள் தெரிய வரும்.

இந்துத்துவவாதிகள்,பின்நவீனத்துவாதிகள்,கம்யூனிஸ்ட்கள்.
முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவர்கள் அனைவரும் தங்கள் எழுத்திலும் மேடை பேச்சிலும் புத்தரையும், சூஃபிஸ கொள்கையும் புகழ்வதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன்.ஒன்றுகொன்று முரண்பட்ட கொள்கையைச் சார்ந்தவர்கள் ஒரு இஸத்தை புகழும் போது இயல்பாகவே அந்த கொள்கையில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது என்று அறிவதற்கு ஆர்வம் ஏற்படும் அப்படித்தான் புத்த மத கொள்கைகளையும் சூஃபித்துவத்தையும் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு பிறகு பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

சூஃபிஸமும்,புத்த மதமும் இயங்குவியல் தன்மையற்ற துறவறத்தை போதிக்கின்ற மற்ற இஸங்களை நடைமுறையில் கொண்டு வர உழைக்கின்ற மாற்று கொள்கையுடைவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மதங்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.

இஸ்லாத்தையும் அதன் உண்மை அடிப்படைக் கொள்கைகளான குர்ஆன் ஹதீஸ்களையும் மற்ற கொள்கையை  சார்ந்த அனைவரும் கடித்துக் குதறுகிறார்களே ஏன்? பிராண்டி எடுக்கிறார்களே ஏன்? இதற்கும் பதில் கிடைத்தது ஆம் இஸ்லாம் இயங்குவியல் மார்க்க்கம் இவர்கள் செயல்படுத்த துடிக்கிற கொள்கைகளுக்கு தொந்தரவாக எதிராக நிற்கின்ற மார்க்கம்.

இதை நான சும்மா நுனிப்புல் மேய்ந்துவிட்டு சொல்லவில்லை வரலாறுகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.

சரி விஷயத்துக்கு வருவோம்

புத்த மதம் தன்னுடைய இயங்குவியலற்ற தன்மையால் உலகமெங்கும் பெயர் சொல்லும்படியான பண்பாட்டையோ கலாச்சாரத்தையோ பெளத்தத்தால் ஸ்தாபிக்க இயலவில்லை.வேறொரு பண்பாட்டின் மீது வீரியமான தாக்கத்தை ஏற்ப்படுத்துமளவு வலிமை கொண்டதாக மாறவும் இயலவில்லை.பெளத்தம் சென்றடைந்த நாடுகளில் ஒழுக்கவாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்! எனினும் அந்நாடுகளின் சமூக அமைப்பையோ அரசியல் அமைப்பையோ பெளத்தம் மாற்றி அமைக்கவில்லை;அதற்கான முயற்சிகளிலும் இறங்கவில்லை.



உலகின் பல்வேறு இடங்களுக்கும் பெளத்தம் பரவியுள்ளது.மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்ககாசிய நாடுகளிலும் பெளத்தம் பரவியதைப் போன்று வேறு சமயநெறிகள் பரவவில்லை.கவனத்தைக் கவரும்படி பெருந்திரளான மக்கள் பெளத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஏதேனுமொரு சமூகத்தின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்களை பெளத்தம் ஏற்படுத்தியுள்ளது  என்பதையோ சாதனை ஒன்றையேனும் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ வரலாறு நெடுக தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்காது.

நேர்மாற்றமாக வேறேதேனும் சமயத்தோடு அல்லது பண்பாட்டோடு மோதுகின்ற சூழல் எங்காவது ஏற்பட்டால் பெளத்தம் தோற்றுப் போயிருப்பதையே நாம் காண்கிறோம். பெளத்த மதம் இந்தியாவில் தோன்றியது.நீண்டதொரு காலம் இங்கேயே பல்கிப் பெருகியது.கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலும் நான்கில் மூன்று பகுதியினர் அதாவது ஏறக்குறைய மூக்கால் பாகம் பெளத்தத்தையே பின்பற்றி வந்தனர்.கி.பி. நான்காம் நூற்றாண்டில் ‘பாஹியான்’ இந்தியாவிற்கு வந்த போதும் இங்கு மக்களிடையே பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது.

ஆனால் அதன்பிறகு பிராமண மதம் தலைதூக்கியபோது ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குள் பெளத்தம் சுத்தமாக துடைத் தெறியப்பட்டுவிட்டது.இன்றைக்கு இவ்வளவு பெரிய நாட்டில் மிகக்குறைவான பெளத்தர்களே காணப்படுகிறார்கள்.

அவ்வாறே அசோகர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானத்தில் பெளத்தம் பரவியிருந்தது.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காபூலை ஆண்ட மன்னர் மீனாந்தர் பெளத்தத்தைத் தழுவியிருந்தார்.ஆனால் ஆஃப்கானில் இஸ்லாம் அடியெடுத்து வைத்ததும் ஒரு கணம்கூட அதனை எதிர்கொள்ள பெளத்தத்தால் இயலவில்லை.

’தாவோயிசம்’ உடைய ஒத்துழைப்பு உதவியின் கருணையினால் சீனாவில் பெளத்தம் பரவியது.இல்லையென்றால் கன்பூஸியஸின் சமயநெறி அதை ஒழித்தே விட்டிருக்கும்.

‘ஷிண்டோ’ சமயநெறியை அட்ஜெஸ்ட் செய்துகொண்டு கொடுத்தும் பெற்றும்தான் ஜப்பானில் அதனால் நிலைகொள்ள முடிந்தது.தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அடிப்படைக் கோட்பாடுகளையும் அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எவ்விடத்திலும் அரசமைப்பையோ சீரழிந்துபோன சமூக அமைப்பையோ எதிர்த்து அது குரல் கொடுத்ததே கிடையாது.அரசியலுக்கு பெளத்தத்தில் இடமே கிடையாது.அரசை மற்றும் முயற்சிகளுக்கு பதிலாக, நல்ல அரசோ தீய அரசோ அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து ஒழகவேண்டும் என்றே பெளத்தம் போதிக்கின்றது.தீய சக்திகளுக்கு எதிராகவும் வாய் திறவாது கட்டுப்படவேண்டும் எனும் போதனைகளின்காரணமாக என்ன தான் கொடுமைப் படுத்தப்பட்டாலும் பெளத்தர்கள் அதிருப்திப் பெருமூச்சு விடுவதில்லை.



மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது.நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை! அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.(நூல்:Buddha and His Religion.P.150,151.)

ஒரு தீய அரசுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? அதிருப்தி அடைவதற்குப் பதிலாக இத்தகைய சமயங்களை அவை ஆதரித்து போற்றவல்லவா செய்யும்? தாம் செய்யும் தீமைகளுக்கு இவர்கள் எதிர்த்து முனகக் கூடமாட்டார்கள் என்பதால், அரசுகள் பெளத்தத்தை வரவேற்கின்றன அதே நேரத்தில், தடை செய்யாமல் கொடுமைகளைப் புரிகின்றன; லஞ்ச -லாவண்ய நிர்வாகத்தைத் தொடர்கின்றன.

பெளத்த மதம் பரவத்துவங்கிய உடனே மகத நாட்டு மன்னர் பீமபஸாரன் பெளத்தத்தைத் தழுவிக் கொண்டார்.பெளத்தத்துக்கு ஆதரவாக அரசாங்க ஆணையையும் வெளியிட்டார்.தொடர்ந்து அவருடைய மகன் அஜித்த சத்ருவும் பெளத்தத்தின் தீவிர ஆதரவாளாராக மாறினார். கோசல நாட்டு மன்னர் அக்னிதத்தன் வலியச் சென்று தன் நாட்டில் பெளத்தத்தை வரவேற்றார்.




கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இன்னோரு வலிமைகொண்ட மன்னரான ஹரிஷ் பெளத்தத்துக்கு எல்லாவகையிலும் வீறு கொண்டு துணை புரிந்தார். பிராமணர்கள் அவரைக் கொலை செய்யவும் சதி செய்தனர்.

இந்திய அல்லாது திபெத்,மங்கோலியா நாடுகளில் கிப்லாய் கான் பெளத்தத்துக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.பெளத்தம் பரவுவது அரசியல் ரீதியாக தனக்கு நன்று என்பதை அவர் உணர்ந்தர்.பெளத்த சமயப் பிரச்சாரகர்களை சீனாவுக்கு மன்னர் மங்க்டே வரவழைத்தார். இவ்வாறாக பல மன்னர்கள் உதவி ஒத்தாசை புரிந்துள்ளதை வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

இறுதியாக ஒன்று

ஆக நான் என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்தேன் என்பதை தெரிவித்து விட்டேன் இன்னும் வேறு கோனங்களில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

புத்த மதம் இயங்குவியல் மதமா? என்ற கோனத்தில் செய்த ஆய்வு இதோடு முற்று பெறுகிறது.

11 comments:

  1. சலாம் சகோ. ஹைதர் அலி!

    புத்த மதத்தைப் பற்றி மேலோட்டமாக தெரிந்த எனக்கு உங்கள் பதிவு பல புதிய செய்திகளை தந்திருக்கிறது. மக்கள் மத சட்டங்களை பின்பற்றாமல் பெயரளவில் வாழ்ந்தால் அந்த மதம் குறுக ஆரம்பித்து விடும் என்பதற்கு புத்த மதமே ஒரு சாட்சி!

    ReplyDelete
  2. சோ பௌத்தம் தீது என நிறுவி இஸ்லாம் மிகுந்த நலமானது என கூற எத்தனிக்கின்றீர்கள். நீங்கள் கூறியபடி தீ அரசுக்கும் பௌத்தத்துக்கும் சம்பந்தம் இல்லை எனலாம், அது பௌத்தத்தின் குற்றமா? இல்லை அதை வழிநடத்துவோரின் குற்றமா? இஸ்லாம் நல்லரசுக்கு வித்திடும் என்றால் ஏன் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் சமூக முன்னேற்றம் ஏற்படவில்லை. தம்பி மேல்சாதிப் பெண்ணோடு காதல் கொண்டான் என்பதற்காக தமக்கை பலர் கெடுத்தார்கள், நல் அரசுகளை இஸ்லாம் தந்திருந்தால் ஏன் இன்று மத்தியக் கிழக்கில் இத்தனைப் போராட்டங்கள். இஸ்லாம் வறுமையை ஒழித்திருக்குமேயானால் ஏன் இந்தியாவில் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வறுமையில் வாட வேண்டும்.

    இங்கு பிரச்சனை மதங்களில் இல்லை. ஆனால் அதனை வழிநடத்துவோரின் தவறான வழிநடத்தல்களில் வந்தவை. இங்கு குற்றமிழைத்தவை பௌத்தமோ, இஸ்லாமோ அல்ல ! தவறான மக்கள் நம்பிக்கைகளும், மதகுருமார்களுமே ஆவார்கள். காலத்துக்கு ஏற்றார்போல மதங்களில் மாற்றம் கொண்டுவராமையும் இத்தகையப் போக்குக்கு காரணம்.

    பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமே உலகம் யதார்த்தமானது, நிலையற்றது, நன்றும் தீதும் நிலையற்றது. பிறவிகளை ஒழிக்க எண்மார்க்கத்தில் வாழ் வேண்டியது. உண்மையை ஏற்றுக் கொள்ளுதல் என்பதாகும். அது அவர்களின் நம்பிக்கை. எப்படி இஸ்லாமின் நம்பிக்கைகளோ அப்படியே பௌத்தத்தின் நம்பிக்கைகளே ! இவற்றைப் பழிப்புக்குரியன என கூறுவது முரணாகின்றது.

    ReplyDelete
  3. ///புத்த மதத்தைப் பற்றி மேலோட்டமாக தெரிந்த எனக்கு உங்கள் பதிவு பல புதிய செய்திகளை தந்திருக்கிறது///
    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரர் ஹைதர் அலி
    பௌத்தம் குறித்த தெளிவான ஆய்வு பதிவு. //மற்ற பிறவிகளில் செய்த தீமைகளின் விளைவுகள் தற்போது துன்பங்களாகத் தொடருகின்றன.கொடுமைப் படுத்துவோர் மீது யாதொரு குற்றமும் கிடையாது.நாமிழைத்த தீவினைகளின் பலாபலன்களே அவை//இவ்வார்த்தைகளை படிக்கும்போது.. பௌத்த அடிப்படை கோட்பாடுகளை உள்வாங்க முடிகிறது... எனும் போது புத்த மதம் இயங்குவியல் மதமா?
    என்பதற்கு இங்கு விடையும் கிடைக்கிறது
    ஜஸாகல்லாஹ் கைரன்.,
    தொடரட்டும் உங்கள் ஆய்வுப்பணி., அதற்கான வல்லமையை வல்லோன் உங்களுக்கு வழங்குவானாக!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இந்த இடத்தில் இஸ்லாம் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்.

    'அல்லாஹ்- வணக்கத்திற்குரிய கடவுள்' என்று கூறவில்லை இஸ்லாம். இப்படி சொன்னால் யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால்,

    'அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய கடவுள் வேறில்லை' என்கிறது இஸ்லாம்...! இதுதான் பிரச்சனை... மற்றவருக்கு..!

    'நன்மையை செய்யுமாறு பிறரை ஏவுங்கள்' என்று மட்டும் சொல்லவில்லை. இஸ்லாம். இப்படி மட்டும் சொன்னால் எந்த பிரச்சினையும் இல்லை.

    மாறாக, சுற்றி நடக்கும் தீமையை தடுக்க வலியுறுத்துகிறது..! இதுதான் பிரச்சனை... மற்றவருக்கு..!

    //மாற்று கொள்கையுடைவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மதங்கள் என்பதை புரிந்துக் கொண்டேன்.//---இது சரியான ஆய்வின் வெளிப்பாடு சகோ. மிக்க நன்றி.

    இதனால்தான், எப்படியும் வாழலாம் என்ற பல 'நடுநிலைவாதிகள்' எனப்படும், நாத்திகர்களின் மற்றும் போலி ஆத்திகர்களின் மதமாக எதிர்ப்பற்று இது வளர்ந்திருக்க வேண்டும்.

    ஆனால், பிற்காலத்தில் உண்மையான இறைமார்க்கம் தேடுவோரின் முன் இது இயங்குவியல் மதமாக இல்லாததால் தொல்வியுற்றுவிட்டது.

    அருமையான ஆய்வு. வாழ்த்துக்கள் சகோ.ஹைதர் அலி.

    ReplyDelete
  6. @இக்பால் செல்வன்

    நண்பரே நான் பழிக்கவில்லை
    என்னுடைய ஆய்வின் முடிவு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. @kalai
    என்ன நண்பரே கோடு மட்டும் போட்டுயிருக்கிக

    ReplyDelete
  8. @G u l a m

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //தொடரட்டும் உங்கள் ஆய்வுப்பணி., அதற்கான வல்லமையை வல்லோன் உங்களுக்கு வழங்குவானாக!//

    உங்கள் வருகைக்கும் துஆவுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  9. @முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தங்கள் வருகைக்கும் அழகான தெளிவான கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  10. எந்த மாதிரி சமயத்திலும் வீரத்தையோ, பகுத்தறிவையோ பயன்படுத்திவிடாதீர்கள் என ஒரு கொள்கையோடுதான் இந்த மதம் காலம் கடந்து வந்திருக்கிறாது. இதை தழுவிய மக்கள் பரம சாதுக்களாகவே வாழ்வார்கள் என்பதனால்தான் எல்லா தரப்பு அரசும் இந்த மதத்தை அங்கீகரித்தனவோ எனலாம் அல்லவா???

    நல்லதொரு கோணத்தில் நிறைய பயணிக்க வைத்தீர்கள் நிறைய தக்வல்கள் சகோ. நன்றி :)

    ReplyDelete