Monday, October 31, 2011

பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
முஹம்மது சல்மான் ஹம்தானி
அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.

அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

இந்த வீடியோவை பாருங்கள் சல்மானின் தாயார் மற்றும் நண்பர்கள்,அவர் படித்த கல்லூரியின் ஆசீரியர்களின் வாக்குமூலங்கள்.


மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயூதமா?.

பிரபல எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் பாகிஸ்தான் பயண அனுபவம் பல போலி பிம்பங்களை உடைக்கிறது (கொஞ்சம் பாருங்கள்)


சரி விஷயத்துக்கு வருகின்றேன்
அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.
முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.

அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.
(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31 ஆக் 
படங்கள் கூகுள் வீடியோ யூ டியுப்)

22 comments:

  1. பிரித்தாளும் சூழ்ச்சியில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் முஸ்லிம்களே.. நாம் மனிதன் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் வந்தால் பிரித்தால்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    இதுபோன்ற ஏகப்பட்ட முஹம்மது சல்மான் ஹம்தானிக்கள் நம் நாட்டில் "இஸ்லாமிய பயங்கர தீவிரவாதிகள்" என்று தலைப்புச்செய்தியில் flash news-களில் ஃபோட்டோவுடன் வீடியோவுடன் தடா(ல்) பொடா(ல்) என்று கைதாகி சிறையில் பத்து வருஷம் பதினேழு வருஷம் என்று சந்தேகத்தின் பேரில் வாடி பின்னர் நாலாம் அஞ்சாம் பக்கத்தில் துணுக்கு செய்தியாகக்கூட வர அருகதை இல்லாமல் விடுதலை ஆனவர்களின் நிலையை ஒப்பிடும்போது...

    ///சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது.///

    ...இவ்விஷயத்தில் மட்டும் நான் அமெரிக்க அரசை மனதார பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  3. அபு பைஜுல்.November 1, 2011 at 1:22 AM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
    சகோ: ஹைதர் அலி. அமெரிக்கர் நம்மை (முஸ்லிம்களை) நல்லவர்கள் என்றால் தான் நாம் மிக உஷாராக இருக்கனும்.தீவிரவாதி அமேரிக்கா பிரரையே தீவிரவாதி எனும் போது, இதுதான் என் நினைவுக்கு வருகின்றது.
    பைத்தியம் தன்னை பைத்தியம் என்று ஒத்துக் கொள்ளாது பிரரை பைத்தியம் என்று கூறும்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    எத்தனை அப்பாவிகள் இதுபோன்று தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு, தான் நிரபராதி என்று நிரூபிக்க முடியாதபடி குரல்வலை நெறிக்கப்பட்டு, இனி சிறையும் சோகமும்தான் தன் வாழ்வு என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்! வீரர் சல்மான் ஹம்தானி உயிரோடு இருந்திருந்தால் அந்த அமெரிக்கா என்ன செய்திருக்குமோ..?! அவருக்கு இறைவன் மறுமையின் நல்வாழ்வை கொடுப்பானாக!

    ReplyDelete
  5. மிக்க நெகிழ்ச்சியான சம்பவம்.. முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள்தான் என்ற எண்ணத்திலிருந்து மாறுவதற்கு பிடிவாதமாக மறுக்கும் மக்களிடையில் இது போன்ற நிகழ்வுகளும், சம்பவங்களும் கொஞ்சமாவது மாற்றத்தை கொணரட்டும்..

    -ஆமீன்-

    ReplyDelete
  6. மாப்ள எல்லா மக்களும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் நன்றி!

    ReplyDelete
  7. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


    .

    ReplyDelete
  8. நக்குற மட்டுக்கு செக்கும் தெரியாது, சிவனும் தெரியாது என்பார்கள் அதைப்போலத்தான் ஆதிக்க சக்திகளும்! மனித நேயர்களையும் மதப் போர்வையால் மூடி மண்ணில் புதைத்து விடுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்திள்ளது, சல்மான் ஹம்தனியின் வாழ்வு

    ReplyDelete
  9. நக்குற மட்டுக்கு செக்கும் தெரியாது, சிவனும் தெரியாது என்பார்கள் அதைப்போலத்தான் ஆதிக்க சக்திகளும்! மனித நேயர்களையும் மதப் போர்வையால் மூடி மண்ணில் புதைத்து விடுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்திள்ளது, சல்மான் ஹம்தனியின் வாழ்வு

    ReplyDelete
  10. இது போல் பல அப்பாவிகளின் வாழ்வு தீவிரவாதி என முத்திரைக்குத்தி இழிநிலைக்கு தள்ளப்பட்டு இன்னும் மீளாமல் களங்கமாகவே தொடர்கிறது!

    அவ்வகையில் சகோதரரின் நிலை பலரையும் யோசிக்கவைத்திருக்கும்

    நல்லதொரு பகிர்வை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.......

    ReplyDelete
  11. @suryajeeva

    //நாம் மனிதன் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் வந்தால் பிரித்தால்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்//

    உண்மை சகோ

    ReplyDelete
  12. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

    //அஞ்சாம் பக்கத்தில் துணுக்கு செய்தியாகக்கூட வர அருகதை இல்லாமல் விடுதலை ஆனவர்களின் நிலையை ஒப்பிடும்போது...//

    கள்ள மவுனம் சாதிக்கும் தமிழ் நம்பர் ஒன் ஊடகங்கள் இதை பற்றி ஒரு வரி கூட எழுதியதில்லை

    உங்கள் ஆதங்கம் 100 சதவீதம் சரியானது சகோ

    ReplyDelete
  13. @அபு பைஜுல்.
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    //பைத்தியம் தன்னை பைத்தியம் என்று ஒத்துக் கொள்ளாது பிரரை பைத்தியம் என்று கூறும்.//

    அதுவும் இல்லாமல் இந்த பைத்தியம் பிறருக்கு வைத்தியம் பார்க்க ஆயூதங்களோடு கிளம்பி விடுகிறது

    ReplyDelete
  14. @அஸ்மா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //எத்தனை அப்பாவிகள் இதுபோன்று தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு, தான் நிரபராதி என்று நிரூபிக்க முடியாதபடி குரல்வலை நெறிக்கப்பட்டு, இனி சிறையும் சோகமும்தான் தன் வாழ்வு என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்!//

    இதை ஒரு நிமிடம் நினைக்கும் போது உடல் பதறுகிறது மனசு வலிக்குது

    //அவருக்கு இறைவன் மறுமையின் நல்வாழ்வை கொடுப்பானாக!//

    சகோதரனுக்கான பிரார்த்தனைக்கு நன்றி

    ReplyDelete
  15. @"என் ராஜபாட்டை"- ராஜா

    எத்தனையோ இளைஞர்களின் வாழ்வை காவு கொண்ட பயங்கரம்

    ReplyDelete
  16. @விக்கியுலகம்

    ஆமா மாப்ளா ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமை தான் பல பிரச்சனைகளுக்கு வழி ஏற்படுத்தி விடுகிறது

    ReplyDelete
  17. @VANJOOR

    சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  18. @ஓசூர் ராஜன்

    வாங்கே சகோ

    இந்த பதிவிற்கு போருந்தும் பழமொழி

    ReplyDelete
  19. @ஆமினா

    //இது போல் பல அப்பாவிகளின் வாழ்வு தீவிரவாதி என முத்திரைக்குத்தி இழிநிலைக்கு தள்ளப்பட்டு இன்னும் மீளாமல் களங்கமாகவே தொடர்கிறது!//

    அதுவும் ஊடகங்கள் கண் காது எல்லாம் வைத்து மிகைப்படுத்தி குற்றம் நிருபனம் ஆகும் முன்பே அவனை தீவிரவாதியாக்கி படுத்துகிற பாடு இருக்கே மனது கனக்கிறது சகோ

    வருகைக்கு நன்றி

    ReplyDelete